Skip to main content

தரிசனம் என்றால் என்ன?



ஒரு எழுத்தாளர் மலைமேல் இருக்கும் முருகனைதரிசிக்கசென்றதைப் பற்றி எழுதியிருந்தார். நான் அவரிடம் நீங்க போகும் போது முருகன் இருந்தாரா எனக் கேட்டிருந்தேன். அவரை கிண்டலடிப்பதோ கடவுளை மறுப்பதோ என் நோக்கமல்ல. அவர் சொன்னதில் ஒரு தத்துவக் குழப்பம் இருப்பதாய் நினைத்தேன். அது என்ன?
 இந்த தரிசனம் என்பது இந்த இடத்தில் குறிப்பாக என்ன எனும் சந்தேகம் முதலில் தோன்றியது. தரிசனம் என்றால் பார்ப்பது அல்ல - முருகனைப் பார்க்க முடியாது. தரிசனத்துக்கு உள்ளொளி ஞானம், மனத்திறப்பு, இருள் விலகுதல், மாயை அகலுதல் போன்ற பொருட்களும் உண்டு. ஆனால் நாம் கோயிலுக்குப் போய் சாமி தரிசிக்கும் போது இந்த குறிப்புணர்த்தப்பட்ட விசயங்களை உணர்கிறோமா? யாருக்காவது ஒவ்வொரு முறை முருகனை தரிசிக்கும் போதும் தமக்கு ஞானம் ஏற்படுவதையோ, மாயை விலகி மனம் தெளிவாகிடுவதோ உண்டா? (ஒரு பொருளோ பொருள் சார்ந்த செயலோ தானேஏற்படமுடியும்? தெளிதலும் அப்படித் தானே? அரூப விசயங்களில் அது சாத்தியமா என்பன வேறு கேள்விகள்.) 


 நம் நாட்டில் பல்லாயிரம் கோடி பேர் தினமும் கோயிலிலோ பூஜையறையிலோ இறைவனை தரிசிக்கிறார்கள்? இவர்களும் திரிபறத் தெளிந்த ஞானிகளா ஆகி விடுகிறார்களா? இல்லையே.

நமது அன்றாட பயன்பாட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மட்டும் இப்படி தெளிவின்றி நோக்கமின்றி பயன்படுத்துகிறோம். பிளேட்டோவின் Dialogues நூல் வரிசையில் சாக்ரடீஸ் நாம் நமது சொல் பயன்பாடு குறித்து தெளிவுடன் இருந்தாலோ தெளிவற்ற பயன்பாடுகளை அலசினாலோ விவேகம் கிடைக்கும், மூடநம்பிக்கைகள், பிழையான சிந்தனையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார் (Euthyphro நல்ல உதாரணம்). தேசப்பற்று பற்றி ஒருவர் பேசினால் அவரிடம் தேசம் என்பதை முரணின்றி விளக்க சொல்லுங்கள். ஜனநாயகம் என்று பேசுகிறவர்களிடம் அனைத்து ஜனங்களாலும் ஆளப்படுவதா எனக் கேளுங்கள். மக்களாட்சி பற்றி பேசுகிறவர்களிடம் ஆட்சி என்பதன் பொருளென்ன என வினவுங்கள். திருமணம் செய்யுமுன் அச்சொல்லினால் எந்த உத்தேசிக்கிறீர்கள் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். நம் சொற்கள் தெளிவற்றவை, முரண்களால் பின்னப்பட்டவை என்றால் அவை சாரமற்றவை. சாரமற்ற விசயங்களை நாம் உதறி விட்டு மகிழ்ச்சியாய் இருக்க முடியும்

பொருண்மையான பல விசயங்களில் மொழி இப்படி இடறுவதில்லை என்பதை கவனிக்கலாம் - நான் பாட்டுப் பாடுகிறேன் என்றால் அது தெளிவானது. போனில் பேசுவது, உணவருந்துவது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது, அழுவது, தழுவிக் கொள்வது ... இப்படி கணிசமான மொழிப்பிரயோகங்களில் பிரச்சனையில்லை. உடனடியாய் நம் முன் இல்லாத விசயங்களைப் பேசும் போது இப்பிரச்சனைகள் உடனடியாய் முளைக்கின்றன - .தா., “தூக்கம் வருகிறது”. தூக்கம் உங்களுக்கு நீங்கள்தூங்கும்முன்பு எப்படி வரும்? அல்லது தூக்கம் உங்களை நோக்கி வருகிறது என உருவகமாய் சொல்கிறீர்களா? தூக்கம் உங்களை நோக்கி மெத்து மெத்தென நடந்து தன் அழகிய கரங்களை நீட்டி அரவணைக்க அருகில் வருகிறது என்றால் அதுநடக்கிறசமயத்தில்அதுஎங்கே? எங்குமே இல்லையே

இப்போது சொல்லுங்கள் நீங்கள் முருகனைப் பார்க்கிறீர்களா தரிசிக்கிறீர்களா? தரிசிப்பது தான் இல்லை என்று ஆகி விட்டது.
 பார்ப்பதைப்பார்ப்போம்’ - நீங்கள் மலைமேலுள்ள முருகனைப் பார்க்க போகிறீர்கள். ஒருவரை நீங்கள் பார்ப்பதற்கான சில நிபந்தனைகளில் ஒன்று அங்கு பார்க்கிறவரும் பார்க்கப்படுபவரும் இருக்க வேண்டும் என்பது. (நாகார்ஜுனர் தனதுமூலமாத்யாமிக காரிகாநூலில் இந்த சிக்கலைப் பற்றி ஒரு சூத்திரத்தில் குறிப்பிடுகிறார்.) நீங்கள் முருகனைப் பார்த்து அவரைபார்க்கப்பட்டவராகஆக்கினால் அங்கு ஒரு இருமை தோன்றுகிறது - நீங்கள் பார்க்கிறவர், முருகன் பார்க்கப்படுகிறவர். ஒன்று இல்லாமல் இன்னொன்று அங்கு இல்லை. நீங்கள் அந்த சமயம் பார்க்கவில்லை என்றால் முருகன் அழிந்து விடுவார். அதை விடப் பிரச்சனை நீங்கள் பார்க்காத போது முருகன் இருக்க மாட்டார் என்பதால் முருகன் சாரமற்றவர் என ஆகி விடுகிறது. (நாகார்ஜுனரின் வாதம் இப்படித் தான் போகும்.) கணிசமான பக்தர்கள் தம் கடவுள் சாரமற்றவர் என்பதை ஏற்க மாட்டார்கள். ஆகையால் முருகனை நீங்கள்பார்க்கவில்லைஎன்றே சொல்லியாக வேண்டும்.

அடுத்து ஒரு பிரச்சனை வருகிறது - பார்ப்பது எனும் செயலே பார்க்கிறவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் / நபரைப் பொருத்தே சாத்தியமாகிறது. முருகனைப் பார்ப்பதே பக்தி என்றால் பார்க்கப்படும் முருகன் நீங்கள் பார்ப்பதனாலே சாரமற்றவர் ஆகி விடுகிறார். ஆகையால் மலையேறி நீங்கள் முருகனைப் பார்க்க செல்வதால் முருகன் மட்டுமல்ல பக்தியும் சாரமற்றதாகிறது. நீங்கள் மலையேறி செல்வதால் நாத்திகவாதி ஆகி விடுகிறீர்கள்!


சரி தரிசிக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை என்றால் நீங்கள் முருகனிடம் என்னதான் பண்ண முடியும்? உங்கள் கருத்து என்ன? நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் முன் செல்லும் போது என்ன பண்ணுவீர்கள்? எது சரியான சொல்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...