Skip to main content

புலி வேட்டையும் கொரோனா வேட்டையும்


பி.பி.சி இணையதளத்தின் புள்ளிவிபரக் கணக்கு இது - கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் ஆயிரத்தில் ஒன்பது பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். அதாவது 1%. அதுவும் இந்த வைரல் ஜுரம் வந்தவர்களில் மிகவும் வயதானவர்கள், ஏற்னவே உடல்நிலை சீர்குலைந்து போனவர்களே மரணமடைய வாய்ப்பதிகம். பெரும்பாலோனவர்களுக்கு இது ஒரு சிறிய ஜுரம், சளித்தொல்லை போலத் தோன்றி வந்த வேகத்தில் மறைந்து போகும். ஆனால் இப்போது உலகம் முழுக்க பரவியுள்ள பீதியால் தும்மினால் கூட ஐயோ சாவு நெருங்குதோ என மக்கள் பதறும் நிலை ஏற்படுகிறது. மூக்கு ஒழுகினால் உங்களிடம் இருந்து தள்ளி நிற்கிறார்கள். என்னுடைய கல்லூரியில் எங்கு பார்த்தாலும் முகமூடியுடன் மாணவர்கள் திரிகிறார்கள். சென்னையில் கொரோனா முகமூடி என்று சொல்லி கூவி விற்கிற காணொளி ஒன்றைப் பார்த்தேன். ஹேண்ட் சேனிடைஸர்கள் மருந்துக்கடைகளில் காலியாகி விடுகின்றன. பள்ளிகளை மூடிவிட்டார்கள் (ஆனால் புள்ளிவிபரப்படி இந்த நோய்த்தாக்குதலால் குழந்தைகள் அதிகம் மரணமடைவதில்லை). ஒரு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் வெளியாகியதை விட, தேர்தல் முடிவுகளை விட அதிக பரபரப்பை இது தோற்றுவித்துள்ளது.

ஒப்பீட்டளவில் தில்லியில் நடந்த  (நடத்தப்பட்ட) கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒரு மடங்கு கூட இன்னும் கொரோனாவுக்கு பலியாகியதாய் தெரியவில்லை. தூத்துக்குடியில் காவல்துறையில் துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாய் கொல்லப்பட்டதைப் போல மக்கள் இன்னமும் இந்நோய்க்கு பலியாகவில்லை. ஆனால் தில்லி கலவரங்களின் போது ஆயிரக்கானோர் கைகால் உடைக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள் என செய்தி வந்த போது அசராத நாம் இந்த 1% மரண வாய்ப்புள்ள கொரோனாவுக்குப் போய் ஏன் இப்படி அல்லோலப்படுகிறோம் என்னும் கேள்வி கடந்த சில தினங்களாகவே என்னை அலைகழிக்கிறது. எனக்கு உண்மையில் எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. சில அனுமானங்கள் மட்டுமே:

1) ஒரு குறிப்பிட்ட கட்சியினரால் அல்லது போலீசாரால் மக்கள் திரள் கொல்லப்படும் போது அங்கு ஒருமற்றமைதோன்றுகிறது - செத்தவர்கள் ஒன்று இஸ்லாமியர் என சமாதானம் கொள்கிறோம். இந்து ஒருவர் கொல்லப்பட்டதாய் தெரிய வந்தால் அவர் தான் இஸ்லாமியர் வீட்டுக்குள் தாக்குதல் செய்ய போயிருப்பார் என நினைக்கிறோம். இந்த இரண்டு தரப்புமே மனிதர் தாம், அவர்கள் நம்மில் ஒருவர் என நமக்குத் தோன்றாது. இவர்களுக்கு வெளியே நாம் இருப்பதாய் நினைக்கிறோம். துப்பாக்கிச் சூட்டின் போதும் கூட இந்த மத்திய வர்க்க மனநிலை தான் வெளிப்படுகிறது - அவர்களை யார் தெருவில் இறங்க போராடச் சொன்னது என சிந்திக்கிறோம்; அப்படி உயிர்விட்டவர்களை மற்றமையாக்கி நம் பிரக்ஞைக்கு வெளியே வைக்கிறோம். நகரவயப்பட்ட எல்லா நாடுகளிலும் இன்று இந்த தனிமைப்படல், மற்றமையைப் புரிந்து கொள்ள மறுத்தல் உள்ளது. ஆனால் கொரோனாவின் போது இது சாத்தியப்படுவதில்லை. வைரஸ் ஒரு கண்ணுக்குப் புலப்படாத எதிரி. வைரஸால் பாதிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறவர்களும் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். அவர்களை நாம் தேடிக்கொண்டே இருக்கையில் ஒருவேளை நாமும் பாதிக்கப்பட்டிருப்போமோ என அஞ்சுகிறோம். நம் நெருங்கிய நண்பர்கள், சாதியினர், குடும்பத்தினர், மனைவி, குழந்தைக்கு நோய்த்தொற்று இருக்குமோ எனப் பதறுகிறோம். எங்கெங்கும் நீக்கமற நிறைந்த ஒருபரப்பிரம்மமாகவைரஸ் உள்ளதால், அதன் முன் பாகுபாடே இல்லாததால் நாம் நிஜமாகவே பீதியாகிறோம்

2) ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்னும் பெயரில் இந்த பீதியை வைத்து வியாபாரம் பண்ணுகிறது. இதற்கு இணையாக மற்றொரு மிகப்பெரிய பரபரப்பு நிகழும் வரை இது நன்கு விற்கும் சேதியாக இருக்கும். உங்களுக்கு பெரிய கவரேஜ் எல்லாம் தேவையில்லை - சென்னையில் ரெண்டு பேர் மரணமடைந்தார்கள் என தலைப்பு செய்தி போட்டால் போதும். அன்றே கூட ஒரு விபத்தில் நாற்பது பேர் செத்திருந்தாலும் அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். செத்தால் கொரோனாவால் சாக வேண்டும் என்பதே இன்றுள்ள நிலை

3) இன்று நமக்கு நிஜமாகவே கொரோனா தேவைப்படுகிறது - இவ்வளவு அர்த்தமற்றதாய், எதிர்பார்ப்புகள் அற்றதாய் முன்பு வாழ்க்கை இல்லை; வாழ்க்கை பயம் தான் மிகப்பெரிய திகில் உணர்வு. திகிலுணர்வு ஒரு சாகச உணர்வைக் கொண்டு வருகிறது. ஒரு பழைய பேட்டியில் இயக்குநர் ராம் தான் ஏன் சினிமா எடுக்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் சொன்னார் - ஒரு 9-5 வேலையில் இல்லாத சாகசத்தன்மை சினிமாவில் உள்ளது; ஒரு சினிமா கனவு காணப்பட்டு, திட்டமிடப்பட்டு, அது படம்படிக்கப்பட்டு வெளியாவது வரை எத்தனையோ எதிர்பாரா தடைகள், தலைகீழ் மாற்றங்கள் வரலாம். இன்று சினிமாவில் இருப்பவர் நாளை இருப்பாரா எனத் தெரியாது. சினிமா எடுப்பது அல்லது சினிமாவில் தன்னை தக்க வைப்பது வனத்துக்கு வேட்டைக்கு செல்வதைப் போன்றது, அதுவே தனக்கு சினிமாவில் இருந்து கிடைக்கும் பெரிய மகிழ்ச்சி, நிறைவு எனச் சொன்னார் ராம். மனிதன் இப்படி வேட்டையாடி ஆபத்துடன் கண்ணாமூச்சி ஆடுவதற்காக தோன்றியவன். ஆனால் இன்றைய எந்திரமய வாழ்க்கையில் கணிசமானோருக்கு சலிப்பும், மாற்றமின்மையும் தான் ஒரே சாத்தியமாக உள்ளது. ஓரளவுக்கு வேட்டையாடும் திகிலை இன்று நுகர்வு அனுபவம் சாத்தியமாக்குகிறது. ஆனால் ஒரு எவ்வளவு பொருட்களைத் தான் வாங்குவது? புலி வேட்டையாட முடியாத இந்த வாழ்க்கையில் நமக்கு வேட்டையாட தற்காலிகமாக இப்போது கொரோனா வைரஸ் கிடைத்து விட்டது; நாம் கொரோனா வேட்டைக்குக் கிளம்பி விட்டோம், அல்லது கொரோனாவிடம் இருந்து (ஜுராசிக் பார்க்கில் போல) தப்பித்து ஓட என நினைக்கிறோம்.


கொரோனாவுக்கு நாம் மிகவும் கடன்பட்டிருக்கிறோம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...