Skip to main content

தற்கொலையை வணங்குவது



கவிஞர் சபீதாவின் தற்கொலை குறித்த பலவிதமான பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒருவருக்கு தற்கொலை செய்ய உரிமை உண்டா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. முதலில், குடும்பம் அதை அனுமதிப்பதில்லை. அடுத்து, நண்பர்கள், ஆதரவாளர்கள், நேசம் கொண்டவர்கள் நம்மைப் போகாதே எனக் கையைப் பற்றி இழுக்கிறார்கள். சரி, தற்கொலையின் பிரச்சனை தான் என்ன?
1) வாழ்வு முழுமையடையுமுன் முடித்துக் கொள்கிறோம் - சரி, எத்தனையோ பேரின் வாழ்க்கை, முழுமையாக வாழ்ந்தும் கூட, அப்படித் தான் இருக்கிறது. அதற்கு உண்மையில் ஒன்றுமே பண்ண முடியாது தானே. முழுமையற்ற வாழ்வை நீண்ட ஆயுளுக்கும் வாழ்ந்து முடிக்கிறவர்களை நம்மால் ஏதாவது பண்ண முடியுமா சொல்லுங்கள்? பிறகு அதே லாஜிக்கை வைத்து ஏன் தற்கொலை செய்கிறவர்களிடம் மட்டும் பிலாக்காணம் வைக்கிறோம்.
2) குடும்பத்துக்கும், நண்பர்களுக்குமான கடமையை பாதியில் விட்டு செல்கிறோம் - இது மற்றொரு கற்பனை. படாதபாடு பட்டு வளர்த்த குழந்தைகள் ஒருநாள் டாட்டா காட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். பலருக்கும் நம்மை நினைவில் கூட இருப்பதில்லை. நண்பர்களிடையே எந்த தொடர்ச்சியும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. பேசினால் உண்டு, அல்லாவிட்டால்தொடர்பில் இல்லைஎன மறந்து போவார்கள். சாகும் போது மட்டும் கொதித்து எழுந்து கொண்டு வருவார்கள். திருமண பந்தங்கள் கேலிக்கூத்தாகி விட்ட, காதலுறவுகள் அனுதினமும் நிலையற்றுப் போகிற காலத்தில் வாழ்கிறோம். கடமையாவது மண்ணாவது!
எங்காவது ஒருவரின் தற்கொலைக்குப் பின்னர் அவரது குடும்பம் திகைத்துப் போய் வாழ்க்கையை தொலைத்து நின்றதுண்டா? இல்லை. அது ஒரு காயமாக எஞ்சியிருக்குமே அன்றி வாழ்க்கையை தடை செய்யாது
3) “வாழ்க்கையென்றால் துன்பம், துயரம் இருக்கும், போராடி ஜெயிக்கத் தானே வேண்டும்!” நூற்றில் ஒருத்தர் தான் இங்கே போராடி ஜெயிக்கிறார்கள். மிச்ச பேர் தோல்விகளை சகித்து வாழ்கிறார்கள். அதில் எந்த பெருமையும் உண்மையில் இல்லை. சகிப்பது என்பது போராடுவது அல்ல. போராட மிகப்பெரிய அகவலிமை வேண்டும். பிடிவாதம் வேண்டும். நம்மில் பலருக்கும் இந்த அறிவுரை சொல்லத் தகுதியே இல்லை. அதிர்ஷ்டத்தால் தான் உயிருடன் இருக்கிறோம் என நினைக்கிறேன். குடும்பம், நண்பர்கள் இருக்கிற அதிர்ஷ்டம், சிரிக்கவும் வேடிக்கை காட்டவும் மறந்து போகவும் தெரிந்த அதிஷ்டம்
4) என்னால் சகிக்க முடியாதது தற்கொலை பண்ணுகிறவர்களை தோற்றுப் போனவர்களாக, பலவீனர்களாகக் காணும் பாங்கு. வாழ்க்கை ஒரு சாலைப் பயணம், அதில் விபத்து தான் தற்கொலை என்றால், அதில் தப்பித்து விட்டவருக்கு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. அதிர்ஷ்டம் மட்டுமே அவரைக் காப்பாற்றி இருக்கிறது. அப்படியே தப்பித்து இவரொன்றும் நாளை இமயமலையில் கொடி நாட்டப் போவதில்லை. இதே ரோட்டில் தான் நாயாய் வெயிலில் அங்கும் இங்கும் அலையப் போகிறார்.
5) வாழ்வை முழுமையாக வாழ்ந்து முடிப்பதும் கூட எப்போதும் நல்லதில்லை - ஜெர்மனியில் ஹோலோகோஸ்டின் போது ஒரு எழுபது வயதாளர் 90 வயது வரை பிடிவாதமாக வதைமுகாம்களில் வாழ்ந்து மறைவதனால் என்ன பயன்? ஆனால் வாழத் தான் வேண்டும் என்பேன். அதில் ஒரு திகைப்பு இருக்கிறது, சின்ன சின்ன ஆச்சரியங்கள் இருக்கின்றன, இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் துவளாமல் நின்றேன் எனும் பெருமை இருக்கிறது. ஆல்பர்ட் காமுவின் நாவல்களில் நான் கற்றுக் கொண்டது இது. ஆனால் இந்த பெருமைக்கு மத்தியிலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனும் பணிவு வேண்டும்
6) வாழ்க்கை எந்த கணத்தில் முடிந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல - ஏனென்றால் வாழ்க்கையில் ஒரு முடிவு மரணத்தால் ஏற்படுவதில்லை. முடிவு என்றால் நிறைவு. ஒரு புத்தகத்தை மூடுவதைப் போல, ஒரு கதவை மூடுவதைப் போல, ஒரு சினிமாவைப் பார்த்து முடிப்பதைப் போல வாழ்க்கையை முடிக்க முடியாது. எந்த மரணத்திலும் ஒரு முடிவற்ற தன்மை எஞ்சியே ஆகும். நம்முடைய அனுபவங்களில் சாவு மட்டுமே முழுமையற்றது என்றார் ஹைடெக்கர். நீங்கள் செத்துக் கொண்டிருக்கும் போதே செத்து விடுகிறீர்கள். இதோ சாகிறேன் என வசனம் பேசி யாரும் சாக முடியாது. இது ஏற்படுத்தும் திகைப்பு நம்மை மரணம் குறித்து நிறைய சிந்திக்க பேச செய்கிறது. வாழ்தலையும் சாகசமாக்குகிறது. இதை நான்எழுதிக் கொண்டிருக்கும் போது சாக மாட்டேன்எனும் எளிய நம்பிக்கையே என்னை எழுத செய்கிறது, ஆனால் நான் சாகக்கூடும் எனும் அதே எளிய பயம் தான் இதை ஒரு திகைப்பான இனிப்பான அனுபவமாக்குகிறது. வேறெதுவும் என்னை சாவுக்கு இவ்வளவு நெருக்கமாய் கொண்டு போவதில்லை. தொண்டு கிழம் கூட சாவையும் வாழ்வையும் இப்படித் தான் உணர்கிறது. அதனாலே வயசாளிகள் சாகாமல் தொடரும் போது எரிச்சல் கொள்கிறோம், அவர்கள் வாழ்வை ருசிக்க நினைத்தால் பகடி செய்கிறோம். தற்கொலை இந்த முழுமையற்ற அனுபவத்தை தானாக நெருங்கித் தொடுகிற சாகசம். நமக்கு ஏற்படும் கவலை அவர் போய் விட்டார் என்பதை விட அவர் போய் திரும்ப வரவில்லையே என்பது தான், அவர் திரும்ப வந்து அந்த சாகசம் எப்படி இருந்ததென சொல்லவில்லையே எனும் விசனம் தான். நாம் அவரைப் பற்றி பேசிப் பேசி இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்கிறோம். அவருக்குப் பிறகு சின்னச் சின்ன தற்கொலைகளை நிகழ்த்திக் கொண்டே போகிறோம் - நம் பித்தான காதல்களில், நம் சிலாகிப்பான எழுத்துக்களில், நம் மயக்கமான கனவுகளில், நம் முடிவுறாத பேச்சுகளில்.
தற்கொலையின் விளிம்பு வரை சென்றவர்களிடம் பேசி சரி செய்திருப்போம்ஓரிரு அனுபவங்களாவது நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் வெறுமனே விளிம்பு வரை செல்ல விரும்பியவர்கள் மட்டுமே. நாமும் அப்போது அனுபவித்த திகைப்பு அவர்களுடன் கையைப் பற்றி விளிம்பு வரை சென்று திரும்பியதே. எல்லாருடைய துயரங்களும் சாதாரண துயரங்களே. ஆனால் அத்துயரங்களை அசாதாரணமானவை என நினைக்கும் போது மட்டுமே அவர்கள் தற்கொலைக்கான முதலடியை எடுத்து வைக்கிறார்கள். அவர்களிடம் என்னுடைய துயரம் மகத்தானது, தனித்துவமானது எனும் உணர்வு இருக்கும். அதுஎன்னுடைய வாழ்வு மட்டும் மகத்தானது, தனித்துவமானதுஎனும் கோரலில் இருந்து வருவது. தற்கொலையில் மட்டுமே அதற்கான அங்கீகாரம் சில நேரம் கிடைக்கும். தற்கொலை முயற்சியாளர்களிடம் உரையாடுவது அவ்வளவு நாடகீயமாக ஆவேசமாக அமைவது அதனால் தான். நீங்களும் உங்கள் சொற்களும் அப்போது ஒரு அசாதாரணத்துவம் பெறுகின்றன.


போர்க்களத்தில் எதேச்சையாக குண்டுதாக்கி வீழ்ந்தவர்களைப் போல தற்கொலையாளர்களை அதற்கான கௌரவத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். தற்கொலையின் அந்த அதிரடி வேகத்தில் ஒரு அழகு இருக்கிறது, அதில் ஒரு கவித்துவம் இருக்கிறது, அதில் அணையாத ஒரு சுடரொளி இருக்கிறது - அதை நாம் வணங்க வேண்டும்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...