Skip to main content

கொரோனாவின் போது குடிகாரர்கள்



கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது எனக்குத் தோன்றிய முதல் கேள்வி மக்கள் உணவுக்கு, மருந்துக்கு எங்கு போவார்கள் என்றல்ல, இந்த குடிகாரர்களின் நிலை என்னாவது என்பதே. ஏனோ என் இதயம் அவர்களுக்காகத் தான் முதலில் வாடியது. அந்தளவுக்கு சின்சியராக ஒன்றில் ஈடுபடுகிறவர்களை நான் பார்த்ததில்லை. தினமும் மதுவருந்தியே வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், மதுவின்றி கைகால் நடுக்கம் முதல் கடுமையான மனப்பிரச்சனை ஏற்படுகிறவர்கள் வரை இருக்கிறார்கள். சென்னையில் என் வீட்டுக்கு எதிரில் உள்ள கோயிலில் ஒருவர் வந்து அமர்ந்து தினமும் காலையில் ஒரு மணிநேரம் பிச்சையெடுத்து விட்டு அந்த காசில் குடிக்க செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் பார்க்க டீஸண்டாக இருப்பார், ஆனால் குடிக்காக தற்காலிக பிச்சைக்காரனாகவும் தயங்க மாட்டார். இது அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் தெரியும்

இவர்களில் சிலர் அன்றன்றைக்கு குடிக்கும் தேவைக்கு மட்டுமே வேலை செய்வார்கள், கடன் வாங்குவார்கள், ஏதாவது பித்தலாட்டம் பண்ணுவார்கள். மொத்தமாக சரக்கை வாங்கி வைக்க வக்கில்லாதஅன்றாடங்காய்ச்சிகள்பலர் இருக்கிறார்கள். இவர்களில் நிறைய பேருக்கு குடியை விட்டால் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனின் தன்மானத்தை இப்படி முழுக்க அழிக்கிற மற்றொரு வியாதி இல்லை என்பேன்

இவர்களால் 21 நாள் தனித்திருப்பை தாங்க முடியுமா
சென்னையிலும் கேரளாவிலும் இடைவெளி விட்டு வரிசையில் நின்று மக்கள் மது வாங்கும் படங்களைக் கண்டேன். அண்மையில் கேரளாவின் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் ஆணையிட்டு விட்டது. மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தாராளமாக சரக்கு கிடைக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போல எதிர்விளைவுகள் ஆரம்பித்து விட்டன - கேரளாவில் இதுவரை மட்டும் 7 பேர் மது கிடைத்தாததால் ஏற்படும் விலகும் அறிகுறிகள் (withdrawal symptoms) காரணமாக தற்கொலை பண்ணியிருக்கிறார்கள். ஒருவர் ஷேவிங் லோஷன் குடித்து இறந்திருக்கிறார். மற்றொருவர் மின் கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி மரணமடைந்திருக்கிறார். மேலும் சிலர் மாடியில் இருந்து குதித்திருக்கிறார்கள் - அதில் ஒருவர் கடும் காயங்களுடன் .சி.யுவில் இருக்கிறார். இந்த லாக்டவுன் காலத்தில் கேரளாவில் மனநோய் கடுமையாகி அட்மிட் ஆகுவோர் எண்ணிக்கை நாளுக்கு 300 என உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இதை கேரள முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது அங்கு மருத்துவ பரிந்துரை சான்றுடன் சென்றால் மதுவை ரேஷன் போல வழங்குகிறார்கள். கர்நாடகாவிலும் இதே போல் ஏழு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் மக்கள் கிடைத்ததை எல்லாம் போதைக்காக பயன்படுத்தி உயிரை விடுகிறார்கள் - அஸ்ஸாமில் இருவர் தொழிற்சாலை ரசாயனங்களுடன் சாப்ட் டிரிங்க்ஸில் கலந்து குடித்து செத்திருக்கிறார்கள்; ஒருவர் நிலைமை கவலைக்கிடம்.

இது ஒரு பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே. பரந்துபட்ட கணக்கெடுப்பு நடத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை
நான் தினம் தினம் பார்க்கும் அமைதியான குடிகாரர்கள் உண்மையில் ஒரு நடுங்கும் நூல்பாலத்தின் மீது நடக்கிறவர்களே; சின்ன தடுமாற்றம் போது சரிந்து விடுவார்கள். இரவுபகலாய் கடைகளைத் திறந்து வைத்து அரசும் தனியார் நிறுவனங்களுமாய் நம் மக்கள் தொகையில் சரி பாதியை மனநோயாளிகளாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை கொரோனா நாட்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. வரும் நாட்களில் பழையபடி எல்லா கடைகளையும் வருடம் முழுக்க திறந்து வைக்காமல் தினமும் குறைந்த நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இவர்களில் புதிதாக உருவாகும் குடிகாரர்கள் யார், நோயாளிகள் ஆகி விட்ட குடிகாரர்கள் யார் என அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பொதுவெளியில் வைக்க வேண்டும். இவர்களில் நோயாளிகளுக்கு அரசும் இந்த மதுவைக் தயாரிக்கும் ரிபைனரிகளும் நட்ட ஈடு மற்றும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்காது, ஆனாலும் சொல்லி வைக்கிறேன்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...