Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கொரோனாவின் போது குடிகாரர்கள்



கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது எனக்குத் தோன்றிய முதல் கேள்வி மக்கள் உணவுக்கு, மருந்துக்கு எங்கு போவார்கள் என்றல்ல, இந்த குடிகாரர்களின் நிலை என்னாவது என்பதே. ஏனோ என் இதயம் அவர்களுக்காகத் தான் முதலில் வாடியது. அந்தளவுக்கு சின்சியராக ஒன்றில் ஈடுபடுகிறவர்களை நான் பார்த்ததில்லை. தினமும் மதுவருந்தியே வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், மதுவின்றி கைகால் நடுக்கம் முதல் கடுமையான மனப்பிரச்சனை ஏற்படுகிறவர்கள் வரை இருக்கிறார்கள். சென்னையில் என் வீட்டுக்கு எதிரில் உள்ள கோயிலில் ஒருவர் வந்து அமர்ந்து தினமும் காலையில் ஒரு மணிநேரம் பிச்சையெடுத்து விட்டு அந்த காசில் குடிக்க செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் பார்க்க டீஸண்டாக இருப்பார், ஆனால் குடிக்காக தற்காலிக பிச்சைக்காரனாகவும் தயங்க மாட்டார். இது அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் தெரியும்

இவர்களில் சிலர் அன்றன்றைக்கு குடிக்கும் தேவைக்கு மட்டுமே வேலை செய்வார்கள், கடன் வாங்குவார்கள், ஏதாவது பித்தலாட்டம் பண்ணுவார்கள். மொத்தமாக சரக்கை வாங்கி வைக்க வக்கில்லாதஅன்றாடங்காய்ச்சிகள்பலர் இருக்கிறார்கள். இவர்களில் நிறைய பேருக்கு குடியை விட்டால் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனின் தன்மானத்தை இப்படி முழுக்க அழிக்கிற மற்றொரு வியாதி இல்லை என்பேன்

இவர்களால் 21 நாள் தனித்திருப்பை தாங்க முடியுமா
சென்னையிலும் கேரளாவிலும் இடைவெளி விட்டு வரிசையில் நின்று மக்கள் மது வாங்கும் படங்களைக் கண்டேன். அண்மையில் கேரளாவின் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் ஆணையிட்டு விட்டது. மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தாராளமாக சரக்கு கிடைக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போல எதிர்விளைவுகள் ஆரம்பித்து விட்டன - கேரளாவில் இதுவரை மட்டும் 7 பேர் மது கிடைத்தாததால் ஏற்படும் விலகும் அறிகுறிகள் (withdrawal symptoms) காரணமாக தற்கொலை பண்ணியிருக்கிறார்கள். ஒருவர் ஷேவிங் லோஷன் குடித்து இறந்திருக்கிறார். மற்றொருவர் மின் கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி மரணமடைந்திருக்கிறார். மேலும் சிலர் மாடியில் இருந்து குதித்திருக்கிறார்கள் - அதில் ஒருவர் கடும் காயங்களுடன் .சி.யுவில் இருக்கிறார். இந்த லாக்டவுன் காலத்தில் கேரளாவில் மனநோய் கடுமையாகி அட்மிட் ஆகுவோர் எண்ணிக்கை நாளுக்கு 300 என உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இதை கேரள முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது அங்கு மருத்துவ பரிந்துரை சான்றுடன் சென்றால் மதுவை ரேஷன் போல வழங்குகிறார்கள். கர்நாடகாவிலும் இதே போல் ஏழு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் மக்கள் கிடைத்ததை எல்லாம் போதைக்காக பயன்படுத்தி உயிரை விடுகிறார்கள் - அஸ்ஸாமில் இருவர் தொழிற்சாலை ரசாயனங்களுடன் சாப்ட் டிரிங்க்ஸில் கலந்து குடித்து செத்திருக்கிறார்கள்; ஒருவர் நிலைமை கவலைக்கிடம்.

இது ஒரு பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே. பரந்துபட்ட கணக்கெடுப்பு நடத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை
நான் தினம் தினம் பார்க்கும் அமைதியான குடிகாரர்கள் உண்மையில் ஒரு நடுங்கும் நூல்பாலத்தின் மீது நடக்கிறவர்களே; சின்ன தடுமாற்றம் போது சரிந்து விடுவார்கள். இரவுபகலாய் கடைகளைத் திறந்து வைத்து அரசும் தனியார் நிறுவனங்களுமாய் நம் மக்கள் தொகையில் சரி பாதியை மனநோயாளிகளாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை கொரோனா நாட்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. வரும் நாட்களில் பழையபடி எல்லா கடைகளையும் வருடம் முழுக்க திறந்து வைக்காமல் தினமும் குறைந்த நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இவர்களில் புதிதாக உருவாகும் குடிகாரர்கள் யார், நோயாளிகள் ஆகி விட்ட குடிகாரர்கள் யார் என அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பொதுவெளியில் வைக்க வேண்டும். இவர்களில் நோயாளிகளுக்கு அரசும் இந்த மதுவைக் தயாரிக்கும் ரிபைனரிகளும் நட்ட ஈடு மற்றும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்காது, ஆனாலும் சொல்லி வைக்கிறேன்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...