கொரோனாவை எதிர்கொள்வது பற்றி மோடி நாற்பது விளையாட்டு வீரர்களுடன் கான்பிரன்ஸ் காலில் பேசுவதை ஒரு செய்தியில் பார்த்தேன். அதைப் பற்றி கலந்து கொண்ட சச்சின் வேறு இப்படி சிலாகித்திருக்கிறார்:
“He (PM Modi) highlighted and reaffirmed my belief that we should not let our guard down after the 14th of April, & how we manage that period will be very critical.
This is the time for our entire nation to come together and keep each other motivated. Like team spirit wins us games in sports, our nation should work as one team to overcome this," Tendulkar concluded.
விளையாட்டு வீரர்களுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்மந்தம்? இவர்களிடம் உரையாடி மோடி அடைந்த ஞானம் என்ன? பயன் என்ன? இருக்கிறது!
இதைப் பற்றி அவர்கள் நாளை பாராட்டி நாலு வார்த்தை சொல்வார்கள், அது மோடியின் விளம்பரத்துக்கு உதவும். சச்சினின் பல கோடி ரசிகளில் பாதியாவது சங்கியாகி / மோடி பக்தாளாகி விடுவார்கள் என கணக்குப் போடுகிறார் (அப்படி யாரும் இல்லை என்பது வேறு விசயம்).
தன் புகழ், பெயர். விளம்பரத்தைத் தவிர வேறெவரைப் பற்றி ஒரு நொடி கூட கவலைப்படாத தன்னிகரற்ற நம் ஒரே தலைவர்!

Comments