Skip to main content

இலக்கிய மொழி எனும் கற்பிதம் (2)


என்னுடைய நிழல்...” என ஒரு புதுப் படைப்பாளியின் ஒரு வரி துவங்கும் போது நகுலன் சட்டென நினைவுக்கு வருவதும், மனம் அங்கிருந்து தத்துவத்தில் ஜெ.கெவுக்கோ இலக்கியத்தில் டி.எஸ் எலியட் ஜேம்ஸ் ஜாய்ஸுக்கோ செல்வது இயல்பே. ஆனால் அந்தநிழலில்இருந்து இந்தநிழல்வரவில்லை. மாறாக அந்த நிழலைப் போன்றே இந்த நிழல் இருந்தாலும் அது இது அல்ல என தன்னை வாசிப்பினூடே அது நிறுவி விடுகிறது. உளவியலாளர் லக்கான் இதைப் பற்றி சொல்லும் போது தகப்பன் என்பவர் ஒருவர் அல்ல என்கிறார். Father என பெரிய எழுத்தில் அவர் தகப்பன் உருவகத்தைக் குறிக்கிறார். வயதில் மூத்தோர், மாமா, சித்தப்பா, மூத்த நண்பர்கள், ஆசிரியர் போன்றோர் பின்னாட்களில் ஒரு குழந்தையான நமக்கு அறிமுகமாகும் போது அவர்களை அப்பாவின் பிரதிபிங்களாகவும், எதிர்-பிம்பங்களாகவும் ஒரே சமயம் புரிந்து கொள்கிறோம். “இவர் என் அப்பாவைப் போன்றவர், ஆனால் அவரில்லைஎன்பதே ஒருவரை ஒப்பிட்டு மறுத்து ஏற்றுக்கொள்ள செய்கிறது. மொழியில் இதை வைத்துப் பார்ப்பதானால், நகுலனின் நிழல்நகுலனில்ஆரம்பிப்பதில்லை. “நிழலின்தகப்பனார் நகுலனுக்கு முன்பே நம்மொழியில்இருக்கிறார். நகுலன் நடுவே வந்தவர். அதாவது நகுலனின் மொழிமொழிக்குள்ஏற்கனவே இருக்கிறது. நகுலன் ஏற்கனவேநகுலனுக்குள்இருக்கிறார். நகுலனை நீங்கள் அறிந்திராவிடினும் நிழலை உருவகமாகக் கையாளும் ஒரு பிரதியை நீங்கள் ரசித்துணர முடியும். (ப்ளூமின் மாபியா கும்பலுக்கு கடைசி வரை இந்த நுணுக்கம் விளங்கவில்லை என்பது துரதிஷ்டம்.)


ஆனால் போகனின் இந்த பதற்றம் நியாயமானது தான் - ஒரு எழுத்தாளனிடத்து ஒரு வாசகன் வந்து கருத்துரைக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வது எனும் தடுமாற்றம் வருகிறது. நம்பவா வேண்டாமா? ஒரு வாசகன் நிஜமாகவே இருக்க்கிறானா எனும் உள்ளார்ந்த கவலையே இந்த பதற்றமாகிறது. இதுவே பின்னர் இந்த வாசகன் பொருட்படுத்தக்கத்தவன், மற்றவன் உதாசீனக்கத்தக்கவன் என நினைக்க வைக்கிறது. (இன்னொரு பக்கம், இந்த படிநிலையாக்கம் நமக்குப் பிடிக்காத வாசக எதிர்வினையை மறுத்து தள்ளி வைக்கவும் உதவுகிறது.)
இந்த அச்சம் ஆரம்பத்தில் ஏன் வருகிறது?
வாசிக்கும் போது இருக்கிற வாசகன் எனும்அவன்” (அல்லதுநான்”) வாசித்து முடிக்கையில் இருப்பதில்லை எனும் புரிந்துணர்வு நாம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதுதான் பயத்தின் ஆதாரக் காரணம். ஏனெனில் வாசிப்பு நிலையற்றது, அதனால் வாசகனும் நிலையற்றவன் எனும் போது நான் பிரசுரித்ததும் நிலையற்றதாகிறது. என்னை நான் என் பிரசுரங்களுடன் அடையாளப்படுத்தும் போது நானும் நிலையற்றவனாகிறேன். இதனாலே வாசகன் தன்னிடம் பேசும் போது தெளிவாக தர்க்கபூர்வமாக கவனமாகப் பேச வேண்டும் என ஜெ.மோ விரும்புகிறார். இந்த அச்சம் அவரிடம் மட்டுமல்ல போகன் உள்ளிட்ட பல நல்ல எழுத்தாளர்களிடமும் உள்ளது. (அது என்னிடமும் உள்ளது.) நீங்கள் புத்தகக் கண்காட்சியில் வாசகர்களை சந்தித்ததாய் சொல்வது, வாசக சந்திப்புகளில் கையெழுத்திடுவது எல்லாம் கற்பனை மட்டுமே. அவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்கள் - வாசகர் எனும் ஒரு இனம், ஒரு வஸ்து தனியாக உள்ளதா என? ஒரு மனைவியைப் போல தாலி கட்டிக்கொண்டிருக்கிறார்களா? விரிவாக இலக்கியத்தைப் படித்து கரைத்துக் குடித்தவருக்கு தனியாக முக அடையாளங்கள் எதாவது உண்டுமா? அவர் முன்னோடிகளின் பெயர்களை உதிர்ப்பதை, அவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை வைத்துதானே சொல்கிறீர்கள். தி.ஜாவை சிறப்பாக வாசிக்கும் ஒருவர் முற்றிலும் தவறாக ஏன் வாசிக்கக் கூடாது? அவர் ஏன் ஒரு மட்டமான வாசிப்பை நிகழ்த்தக் கூடாது?
இதே அச்சம் வாசகனுக்கும் உண்டு - ஒரு பிரதி நிலையாக இருக்க வேண்டும், அதை தன்னால் சரிவர நுகர முடிய வேண்டுமே, ஒரு சிறந்த கதையை தான் வாசிக்கும்போதும் அது சிறந்ததாக இருக்க வேண்டுமே எனும் நெருக்கடி ஏற்படுகிறது. அதனாலே அவன் ஜெயமோகன், எஸ்.ரா அல்லது ஒரு பேராசான் அளித்த பட்டியலை வைத்து, உதிர்த்த கருத்துக்களின் அடிப்படையின் அந்த பிரதியை வாசிக்கத் தொடங்குகிறான். பிடிக்கவில்லை என்றாலும் அது நல்ல படைப்பாகத்தான் இருக்க வேண்டும் என நம்புகிறான். இது அவனுக்கு தான் ஒரு வாசகனாகநிரந்தரமானவன்எனும் எண்ணத்தைக் கொடுக்கிறது; ஆறுதலளிக்கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள் - நேற்று பஷீரின்அனுராகத்திண்டே தினங்கள்எனும் நாவலை மலையாளத்தில் ஒலிநூலாகக் கேட்டேன். நாவல் ரொம்ப பலவீனமாக இருப்பதாக, பஷீரின் வழக்கமான ஆழம் இல்லையே எனத் தோன்றியது; ஆனால் பஷீரின் நாவல் அப்படி ஏமாற்றமளிக்கும் என என்னால் நம்பவும் முடியவில்லை. இதுவரை நான் படித்துள்ள எல்லா பஷீர் படைப்புகளும் பட்டாசு தான். ஒருவேளை என் வாசிப்பு தவறோ, என் உள்மனம் திறந்து கொள்ளவில்லையோ, நான் சரியாக கவனிக்கவில்லையோ என குழம்பினேன். அடுத்து நான் மலையாள இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள ஒரு நண்பரிடம் இந்நாவலைப் பற்றி விசாரித்தேன். பஷீரின் அதிகம் பேசப்பட்ட நாவல் அல்ல இது என அவர் சொன்ன போது தான் நிம்மதி கிடைத்தது. ஆக, இவ்வளவு பேசுகிற எனக்கும் ஒரு வாசகனாக என் முன்னுள்ள பிரதி ஏற்கனவே இருக்கிற அதே பிரதி தானா எனும் அச்சம் உள்ளது
இந்த அச்சமே வாசகன் எனும் மாயாவிக்கு ஒரு முகத்தை, மீசை, தாடியை, சாதியை, மதத்தை, கொள்கைப் பின்புலத்தை அளித்து தூலமான ஒருவனாக உருவாக்க செய்கிறது. அடுத்து அவனுக்கு ஒரு மொழியையும் கற்றுக்கொடுத்துஇப்படித்தான் நீ பேச வேண்டும், அப்போதுதான் ஒரு வாசகனாக உன்னைப் பொருட்படுத்துவேன்என மிரட்ட செய்கிறது.
இந்த அச்சம் நானும் நீங்களும் சாகும் வரைத் தொடரும். தீர்விருக்கிறதா? ம்ஹும், எனக்குத் தெரிந்து இல்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...