முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனவாதமும் இட ஒதுக்கீடும்

கறுப்பர் ஜார்ஜ்  பிளாயிட் அமெரிக்க போலீசாரால் நசுக்கிக் கொல்லப்படும் காட்சி

ஜார்ஜ் பிளாயிடின் கொடூரமான படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வெடிக்கும் போராட்டங்கள், கலவரங்களைப் பார்க்கும் போது இந்த போராளிகள் ஏன் இந்திய சாதி எதிர்ப்பு வரலாற்றில் இருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளக் கூடாது எனத் தோன்றுகிறது. வெறுமனே இனவாதம் வன்முறை, பாகுபாடு ஆகியவற்றை ஒழிக்க வெறுமனே கூப்பாடு இடாமல் அங்கு அவை தோன்றுவற்கான காரணம் என்னவென யோசிக்கலாம் - முக்கியமாக கறுப்பர்கள் பல அரசுத்துறைகளில் பிரதிநுத்துவம் பெறாதது. இதற்கு அடுத்து பொருளாதார ஏற்றத்தாழ்வு. இதற்கு ஒரு சிறந்த தீர்வே தீர்வு இட ஒதுக்கீடு.

 30-40% கறுப்பர்களுக்கு காவல்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற நோக்கில் முதலில் போராட்டங்களை வடிவமைக்கலாம். (அப்போது தான் 25%மாவது தருவார்கள்.) அடுத்து வேறு துறைகளில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடலாம். இது அங்கு அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்படும் இனவெறுப்பை மட்டுப்படுத்த பெருமளவு உதவும். சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆண்டானாக இருக்கும் போது அவர்களிடம் அறத்தை, சமத்துவத்தைக் கோருவது ஒரு அபத்தம். சமத்துவம் அமைப்பளவில் இருந்தால் மட்டுமே நடவடிக்கைகளிலும் இருக்கும். அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இட இதுக்கீடு மட்டுமே தீர்வு.

தென்னாப்பிரிக்காவில் சுலபத்தில் இதை நடப்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். பிற நாடுகளில் இந்த திசை நோக்கி போராட்டங்களை நகர்த்தினால் இனவாதம் பெருமளவு ஒழிந்து விடும். ஏனென்றால் சாதியை ஒழிப்பதை விட இனவாதப் பாகுபாட்டை ஒழிப்பது சுலபம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.