Skip to main content

இது நியாயமா அழகிகளே?


வனிதா விஜயகுமாரின் யுடியூப் சேனலில் அவர் லைவாக செய்த 40 நிமிட ஒப்பனை அலங்காரத்தை நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பொதுவாக மேக் அப் மீது பெரிய மரியாதை இல்லை என்பது மட்டுமல்ல மேக் அப் அணிந்த பெண்களை அருகில் வைத்துப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வரும். ஆனால் நேற்று அந்த லைவ்வைப் பார்த்ததில் இருந்து மேக் அப் மீது ஒரு தனி மரியாதையே வந்து விட்டது. எவ்வளவு லேயர்கள், அதில் என்னவொரு கலை நுணுக்கம்

தன்னுடைய முக அமைப்பு, நிறம், குற்றங்குறைகள் தெரிந்து அதற்கு ஏற்ப ஒப்பனைப் பொருட்கள் வாங்கி பொறுமையாக ஒவ்வொன்றாகப் பூசிய முகத்தை ஒரு ஓவியத்தைப் போல மெருகேற்றுவதற்கு நிதானத்துடன் நிறைய கற்பனையும் வேண்டும். பொதுவாக புருவத்துக்கு மை பூசுவார்கள் என நினைத்திருந்தேன், ஆனால் வனிதா ஒருவித அடர்சிவப்பை லேசாய் தேய்க்க ஒரு ஆர்ப்பாட்டமான ஸ்டைல், ஒரு குறும்புத்தனம் அந்த முகத்துக்கு வந்து விட்டது. பின்னர் இமையில் நீலம், கன்ன எலும்புகளை தனித்துக்காட்ட ஒரு ஹைலைட்டர், மொழுமொழுவென தோலைக்காட்ட ஒரு கிரீம், பளபளவெனக் காட்ட மற்றொன்று, மினுமினுவெனக் காட்ட மற்றொன்று என பார்க்கப் பார்க்க அதிசயித்தபடி இருந்தேன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது அவர் தன் கண்ணுக்குக் கீழ் பூசின கன்சீலர் தான். அதைத் தேய்த்ததும் அவரது கண்ணுக்குக் கீழ் உள்ள அந்த கறுப்பு அரைவட்டம் அப்படியே காணாமல் போய் விட்டது
ஒப்பனையை துவங்கும் முன்னர் அவர் தன் முகத்தைக் காட்டினார் - அது ஒரு வெள்ளைக்காகிதத்தைப் போல டெரராக இருந்தது. உதடுகள் சிலருக்கு பழுப்பாக, சிலருக்கு கறுப்பும் சிவப்பும் கலந்திருக்கும். இவருக்கு உதடுகளும் வெளிறி இருந்தன. ஆனால் ஒப்பனை முடிந்ததும் 50% உருமாறி விட்டது அந்த முகம். லிப் ஹைலைட் பென்ஸிலும், லிப் கிளாசும் அணிந்ததும் அந்த உதடுகள் இரு பூவிதழ்களைப் போலஎன்னைக் கொஞ்சு கொஞ்சுஎனக் கேட்டன.

மிக சுமாரான முகத்தோற்றம் கொண்ட வனிதாவுக்கே மேக் அப் இவ்வளவு அதிசயங்கள் செய்யுமென்றால் ஒரு அசல் அழகியை அது எங்கோ தூக்கி சென்று விடும் என்பதில் சந்தேகமில்லை.
 இங்கே இன்னொரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும் - நேற்று இந்த லைவ்வைப் பார்த்த பின்னர் பெண்கள் எவ்வளவுதான் அழகியாய் பிறந்தாலும் இயல்பில் அழகில்லை எனத் தோன்றியது. அவர்கள் தம்மை அழகியாய் காண்பிக்க நிறைய மெனக்கெடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கவிதையை ஒவ்வொரு சொல்லாக திருத்தி, வாக்கியமாக வெட்டி எடிட் செய்வதைப் போல முகத்தில் ஒரு பெருங்காவியத்தையே தினமும் இயற்றுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் இப்படி ஒரு பெண் தன் அழகை செயற்கையாய் வடிவமைப்பது ஆணினத்துக்கு செய்யும் அநியாயம் அல்லவா என்றும் கேட்கத் தோன்றியது.

ஒரு உதாரணம்:
ஒரு பார்க்கத்தக்கப் பெண் தன் காதலனைப் பார்க்க செல்லும் போதெல்லாம் இது போல மேக் அப் அணிந்து தன்னை அழகியாய் உருமாற்றிக்கொண்டு போகிறாள். ஆனால் அந்த பையனோ சும்மா முகம் கழுவி அதே அழுதுவழியும் தோற்றத்தில் அவளைக் காண வருகிறான். அவள் முன் வந்ததும் தான் ஒரு வெண்கல விளக்கின் முன் இருக்கும் கற்சிலை போல இருண்டு விடுவதாக அவனுக்கு தோன்றுகிறது. அவன் அவளை ஒருவித மிரட்சியுடன், மயக்கத்துடன் தினமும் நோக்குகிறான். சுமார் இரண்டு வருடங்கள் இப்படி ஓடுகின்றன. அவர்கள் திகட்டத் திகட்ட காதலிக்கிறார்கள். அவன் அவளை மேக் அப் இன்றி ஒருநாள் கூடப் பார்த்ததே இல்லை. அவர்கள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்த பின்னரே மேக் அப் இல்லாத அவளது முகத்தை அவன் முதன்முதலாக பார்க்க நேர்கிறது. அப்போது அவனுக்கு இது அதிர்ச்சியாக இருக்காதா? காலையில் ஒரே படுக்கையில் விழிக்கும் போதுயார் இந்தப் பெண்?” என ஒரு நொடித் தோன்றினால் என்ன செய்ய? (அவன் அதை வெளியே சொல்ல மாட்டான் என்பது வேறுவிசயம்.)
 மேக் அப் அணிவது அவளது உரிமைதான் என்றாலும், ஒரு பெண் அவளது உடல்தோற்றம் மட்டுமே அல்ல என்றாலும், இப்படி தொடர்ந்து உருமாறி செல்வது ஒருவித ஏமாற்றுதல் இல்லையா? “ஐயோ இந்த பெண்ணையா இரண்டு வருடங்களாய் பார்த்தோம்?” என அவன் மனதுக்குள் குழம்பினால் நாம் அவனை பழிசொல்லவா முடியும்?

என்ன சொல்றீங்க?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...