Skip to main content

நாம் ஏன் சுயமரியாதையற்ற பிச்சைக்காரர்களாக இருக்கிறோம்?



கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் நேற்று ஒரே நாளில் 1300 தொழிலாளிகள் (நமது விகடன் பாணியில்) வேலை நீக்கம் செய்யப்பட்ட சேதி அதிர்ச்சி அளிப்பதுடன் ஆத்திரத்தையும் மூட்டுகிறது. லாபம் இல்லாவிட்டால் ஒரு தொழிற்சாலை யூனிட்டை மூடுவது நிர்வாகத்தின் சுதந்திரம், ஆனால் போதிய அவகாசம் அளிக்காமல் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை, எளிய மக்களை, இப்படி வீட்டுக்கு அனுப்பி வயிற்றில் அடிப்பது அநீதி மற்றுமல்ல சட்டவிரோதமும் கூட. இந்த தொழிற்சாலை இப்படி செய்யப்போகிற விசயம் அரசுக்கும் தெரியும், ஆனால் எல்லா அரசுகளையும் போல கர்நாட அரசும் இப்படியான ஒரு பிரச்சனை வரும் போது முதலாளிகளுக்கே கூஜா தூக்குகிறது.

ஒரு வாரத்துக்கு முன்பே தொழிற்சாலையில் இருந்து எந்திரங்களை நிர்வாகம் அகற்றியபோது உள்ளூர் தாசில்தார் சென்று விசாரித்துள்ளார். அப்போது நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்யும் திட்டமில்ல தமக்கில்லை எனப் பொய் சொல்லியுள்ளனர். எந்த நிர்வாகமும் இத்தகைய முடிவுகளை ஒரே நாளில் எடுக்காது, ஆனால் தொழிலாளிகளின் கேள்விகளை எதிர்கொள்ள அஞ்சி கடைசி நாள் வரை இதை ரகசியமாய் காக்கின்றனர். இதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை இந்த முட்டாள் முதலாளிகள் புரிந்து கொள்வதில்லை. குறைந்தது ஒரு மாத அவகாசமாவது அளித்து தொழிலாளிகளிடம் நிலைமையை பொறுமையாய் விளக்கி ஆற்றுப்படுத்துவது நிர்வாகத்தின் பொறுப்பு. சட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் எங்குமே இப்படி நடப்பதில்லை. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கூட ஒருநாள் முன்பு ஊழியரை அழைத்து நாளையில் இருந்து வேலைக்கு வர வேண்டாம் என மனிதவளத்துறை மேலாளர் சொல்வது தான் நடக்கிறது. இந்த திமிர்த்தனத்துக்கு ஒரே காரணம் தனியார் துறை தன்னை அரசையும் அரசியலமைப்பையும் விட மேலான சக்தியாக நினைக்கிறது என்பதே. அந்தளவுக்கு அதிகாரத்தையும் இடத்தையும் அவர்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம்.

இது போன்ற அவலங்கள் நிகழாதிருக்க நாம் செய்ய வேண்டியது நான் ஏற்கனவே எழுதியுள்ளதுதான் - முதலில் நாம் மரியாதை என்பதை நம் சாதி, நம் மதம், நம் பெண்களின் உடல் மீது நிறுவாமல் நம் உழைப்பின் மீது கட்டமைக்க வேண்டும். இங்கு ஒரு சாதியோ மதமோ சொந்த குடும்பத்துப் பெண்ணுடலோ அவமதிக்கப்பட்டால் கொதித்தெழுகிறோம். போராடுகிறோம். வழக்குப் பதிவு செய்கிறோம். கலவரங்கள் செய்கிறோம். ஆனால் நமது உழைப்பு காலில் இட்டு நசுக்கப்படும் போது இதில் பாதி கோபத்தைக் கூட காட்டுவதில்லை. ஏனென்றால் உழைப்பை நாம் நேரடியான பொருள் மதிப்பில்லாத ஒரு விசயமாகப் பார்க்கவே பழகி இருக்கிறோம்; சம்பளம் வாங்கும் போது அதை நமக்கு உரிமையான ஒன்றாக அல்ல ஒருவித பரிசாக, தேவ வரமாகப் பார்க்கிறோம். அல்லது உழைப்பிலும் அதன் கூலியிலும் ஒரே போல மதிப்பைக் காணாத பொறுப்பற்றவர்களாக இன்றைய ஊழியர்கள் பலரும் மாறியிருக்கிறோம். இன்னொரு பக்கம், படித்த படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலைகளை மனநெருக்கடியில்லாமல் செய்கிறோம். .டி படித்து விட்டு ஊடகங்களில், பி.பி.ஓக்களில் குப்பை கொட்டுகிறோம். இதனாலே ஒரு துறையில் சேர அதற்கு கல்வி பயிலும் போது கூட அதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதில்லை. படிக்கிற படிப்புக்கான விழுமியங்கள், லட்சியங்கள் குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை. மருத்துவம் படித்து விட்டு கூச்சமின்றி ஒருவர் பெருமுதலாளிகள் மக்களை சுரண்டுவதற்கு துணை போகிறார்; இறந்து போய் ஒரு மாதமான ஒரு முதல்வர் சௌக்கியமாக இருக்கிறார், இட்லி, சட்னியும் சாப்பிட்டார் என ரிப்போர்ட் எழுதுகிறார். நீதியுணர்வு செத்து விட்டது. அறிவும் திறனும் அவசியம் இல்லை, எதையாவது செய்து வேலையில் பிழைத்துக்கொள்ளலாம் என நம்புகிறோம். இந்த சிக்கல்களுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான் - சாதி, மத, குடும்ப அடையாளத்துக்கு நாம் அளிக்கும் மதிப்பை உழைப்புக்குக் கொடுப்பதில்லை.
 பணப்பெருக்கத்தில் முதலீடுக்கு உள்ள பங்கை மிகைப்படுத்தி மூளைச்சலவை செய்ததன் விளைவாக நாம் சுயமரியாதை இல்லாதவர்களாக மாறியுள்ளது மட்டுமல்ல ஒரு நவீன சமூகமாக மாற முடியாமல் தவிக்கிறோம். நவீன சமூகம் தனிமனிதர்களால் ஆனது, சாதி, மதத்தால் அல்ல. இங்கு வேலையை இழக்கிற, பணமில்லாத ஒருவன் குடும்பத்தை, சமூகத்தில் தனக்குள்ள இடத்தை இழக்கிறான். அந்த பயத்தில் இன்று கணிசமானோர் வாழ்கிறோம். இந்த பயத்தை பயன்படுத்தி அமைப்புகள் நம்மைக் கூடுதலாக சுரண்டுகின்றன.

இதற்கான முதல் தீர்வு நமது உழைப்புக்கு கூலியை மட்டுமல்ல மதிப்பை, பாதுகாப்பைக் கோருவது. அதை உறுதி செய்யும் பொறுப்பை நம் பிரதிநிதிகளிடம் கோருவது. வலிமையான தொழிற்சங்கங்களை அமைப்பது, சாதி, மதம், போலி தேசியம், அரசு அளிக்கும் நல உதவிகளின் அடிப்படையில் அல்லாமல் நம் உழைப்புக்கு போதுமான கௌரவமும் மதிப்பும் அளிக்கப்படுகிறதா எனப் பார்த்து கட்சிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பது. அடிப்படையில், உற்பத்தியில் அனைவருமே சமம், அங்கு முதலாளி, தொழிலாளி பேதமில்லை என நம்புவது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான மொத்தப் பொறுப்பையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு பாதிக்கு மேல் முதலீட்டை ஏற்றுக்கொண்டு தொழிற்துறையை கட்டுக்குள் கொண்டு வருவது; தனியார் துறை அரசின் முதலாளி என்பதை மாற்றி அரசும் மக்களுமே அனைத்தும் முதலாளி எனும் நிலையைக் கொண்டு வருவது. அது நிகழும் வரை இந்த தேசத்தில் ஏகப்பட்ட வளமும் பணமும் இருக்கும், ஆனால் 3% தவிர எல்லாரும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். இந்த 97% தம்மை இந்த நவீனக் கங்காணிகள் செருப்பால் அடித்தாலும் எதிர்க்கும் சுரணை அற்றவர்களாக இருப்போம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...