Skip to main content

வாசகன் என்பவன் சமையல்காரன் அல்ல ஜெயமோகன்



வாசகத் தகுதி குறித்த ஜெயமோகனின் தவறான நம்பிக்கைகளின் விளைவே விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் எனும் அமைப்பு என அண்மையில் அவரது வாசகர்களின் தகுதிப் பட்டியலைப் படிக்கையில் புரிந்து கொண்டேன்.
வாசிப்பு தொடர்ந்து மாறி வரும் நிலை, அதில் என்ன தகுதி இருக்க முடியும்? ஒருவர் தொடர்ந்து சமையலைக் கற்றுக் கொண்டு அனுபவம் மற்றும் படிப்பால் சமையல்காரரானால் அது ஒரு திறன். ஆனால் வாசிப்பு ஒரு திறன் அல்ல. அதற்கு நிரூபணம், சரியான நிகழ்த்துமுறை, தகுதிச்சான்றிதழ் ஒன்றும் கிடையாது. சமையல்காரன் தான் சமைத்த உணவை கொண்டு வந்து உங்களிடம் காட்ட முடியும். அவனது படைப்பே அவனது திறனின் நிரூபணம். ஆனால் ஒரு வாசகனால் அப்படி எதையும் கொண்டு வந்து காட்ட முடியாது.

 நான் ஜெயமோகனின்விஷ்ணுபுரம் வாசகர் வட்டகருத்தரங்குகளின் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைத்ததே இதனால் தான். அவர்கள் வாசிப்பை கருத்துரைப்பதாகப் புரிந்து கொள்கிறார்கள். எழுத்தானின் சொந்தக் கதையே படைப்பு எனும் ஒரு அடிப்படை நம்பிக்கை அங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆக, எழுத்தாளனின் வாழ்க்கை, அவனது பின்னணி, கருத்துக்கள் ஆகியவற்றை ஒரு பக்கம் தொகுத்தும் கொள்கிறார்கள். இதைக் கொண்டு ஒரு பிரதியை அர்த்தப்படுத்த முயல்கிறார்கள். சாகசப்பிரியர்களான அடுத்த சிலர் ஒரு படைப்பை அதன் வரலாற்றுச் சூழல், பாத்திர அமைப்பு, உருவகம், தர்க்கச் சரடு என பகுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஒரு திருப்தி வந்து விடுகிறது. ஆனால் குழந்தையை விடுத்து பொம்மைக்கு சோறூட்டி குழந்தையை பட்டினியிட்டுக் கொல்வதே தாம் செய்வது என அவர்களுக்குப் புரிவதில்லை. ஆங்கிலத்தில் dont throw the baby out with the bath water என்பார்கள். அதாவது குளிப்பாட்டுகிற ஆர்வத்தில் தண்ணீருடன் சேர்த்து குழந்தையையும் வெளியே எறிந்து விடுவது. இவர்கள் எவ்வளவு அனாயசமாக கம்சனைப் போல குழந்தையைக் கொல்கிறார்கள் எனப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்து விட்டது.
 வாசிப்பின் பெரும் திளைப்பு நிலை, பரவசம், பித்து நிலை, இவற்றை தர்க்கத்துக்கு உட்படுத்தும் தத்துவப்பயிற்சி (கடைசியான இது அவசியமில்லை என்றாலும்) அவர்களுக்கு வாய்ப்பதில்லை. ஏனென்றால் கோர்வையாக தர்க்கபூர்வமாக விளக்குவதே வாசிப்பு என ஜெயமோகன் இவர்களை நம்ப வைத்து விடுகிறார் போல. இவர்கள் வாசகர்கள் அல்ல, வாசிப்பில் இருந்து விடுபட்ட, வாசிப்புடன் பிணக்கம் கொண்டு விவாகரத்துப் பெற்றவிமர்சனப் போராளிகள்”. இவர்கள் புத்தகங்களைக் காதலிப்பார்கள், ஆனால் புத்தகங்களுக்குள் உள்ள பித்தை, மௌனத்தை, அதர்க்கத்தை வெறுப்பார்கள். இவர்கள்விஷ்ணுபுரம் விமர்சகர் வட்டம்எனப் பெயரை மாற்றிக் கொள்வதே தகும்
ஜெயமோகனை எது வெறுப்பூட்டியதோ, சீண்டியதோ தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த வாசகப் பரப்பும் இந்த மேற்சொன்ன வாசக விரோதிகளாக மாற வேண்டும் என அவர் விரும்புகிறார் என இதிலிருந்து தெரிகிறது.
 ஒரு பெரும் வாசகனுக்குப் புலப்படாததது - புரிவதல்ல, புரியாததே சரியான வாசிப்பு எனும் உண்மை - ஒரு எளிய ஆரம்ப நிலை ஆளுக்கு சட்டெனப் புரியும். பரவலான வாசிப்பு பல சமயங்களில் வாசிப்புக்கு எதிராக செயல்படும். அது வாசிப்பை ஒரு உத்தியாக மாற்றி விடும். இதற்கு நான் ஆயிரம் உதாரணங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னுடைய இலக்கிய மாணவர்களில் சிறந்த வாசகர் எப்போது அதிகம் படித்த சிறந்த மாணவனாக இருப்பதில்லை. அவர்கள் அபிப்ராயம் உதிர்ப்பவர்கள் மட்டுமே. மிகக்குறைவாக வாசிக்கும் ஒருவர் அற்புதமான வாசகராக இருப்பதை எத்தனையோ முறைக் கண்டிருக்கிறேன். ஒரே ஒரு பொது இயல்பை இத்தகையோரிடம் காண்பதென்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இயல்பிலே இருக்கும் என்பது, ஆனால் கிறுக்கர்கள் எல்லாரும் நல்ல வாசகர்கள் அல்ல.

சரி ஒரு வாசகன் சொல்லும் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது?
ஒரு வாசகன் கருத்து சொல்லும் போது, எதிர்வினையாற்றும் போது - அது உங்கள் நாவல் டி.ராஜேந்தர் படம் பார்த்தது போல இருக்கிறது, ரொம்ப தமாஷாக / உணர்வுபூர்வமாக வடிவேலு / கௌதம் மேனனின் காதல் படக்காட்சிகளைப் போல இருந்தது என்பதிலிருந்து அற்புதமான இசையைக் கேட்டது போல இருந்தது எனச் சொல்லி முன்னுக்குப் பின் முரணாய் மனதில் எழும் எண்ணங்களைக் கொட்டுவது வரை எப்படி இருந்தாலும் - அதை ஒரு கருத்துக் கூறுதலாக நான் பார்ப்பதில்லை. அது ஒரு உணர்வு வெளிப்பாடு மட்டுமே. அந்தளவிலே அது அழகானது. ஆனால் அவனே தன் மேதைமையைக் காட்ட விமர்சன சொரூபம் எடுக்கும் நான் அவனது ஈகோவைத்தான் அங்கு பார்ப்பேன்
மொழி என்பது பல்வேறு மிதக்கும் குறிப்பான்களால் ஆனது. ஒன்று சொல்லப்படும் போது அதற்கு முன்பு வந்த ஒன்றில் சாய்ந்து நின்று, தன்னை அதுவாகக் காட்டியே இது அர்த்தம் பெறுகிறது. எந்த வாக்கியத்திலும் உண்மை இருப்பதில்லை. ஆக, சொல்லப்படும் எதுவும் ஒரு கருத்தாக முக்கியம் அல்ல. இந்தப் பிரச்சனையை உணர்ந்தே ஒரு உலர்ந்த உணர்ச்சியற்ற தர்க்க மொழியில் கோட்பாட்டு, கல்விப்புல உரையாடல்கள் நிகழ்கின்றன. ஆனால் இலக்கியத்தில் அவற்றுக்கு மதிப்பில்லை.

வாசகன் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அழகான குழந்தை. அவனிடம் அப்போது ஒரு களங்கமின்மை இருக்கும். அவன் உளறுவதெல்லாம், அது அன்பார்ந்த பாராட்டோ வசையோ, எனக்கு சுகமான கவிதையே. அவன் தெளிவாக விமர்சன மொழியில் தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு தோரணையில் பேசும் போது தான்அட அம்பியின் உடம்பில் அந்நியன் வந்து விட்டானேஎன நான் சுதாரிப்பேன். ஆனால் ஜெயமோகனோஅந்நியன்வந்ததும் துள்ளிக்குதிக்கிறார்இவன் தான் எனக்கு வேணும் என்கிறார். “அம்பிபொய், “அந்நியனேஉண்மை என்கிறார். இவன் இருந்தால் அவன் இருக்க மாட்டான், அவன் இருந்தால் இவன் இருக்க மாட்டான் சார். எல்லாவற்றையும் விட முக்கியமாய், இவன் இருந்தால் நாம்இருக்கமாட்டோம். எச்சரிக்கை!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...