முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும்



விமர்சனத்தில் தொல்படிம விமர்சனம் என ஒரு தனி வகைமை உண்டு. இது ஒவ்வொரு பிரதியிலும் மிக நுட்பமாக ஒரு புலப்படாத படிமம் செயல்படுகிறது என்கிறது; இந்த தொன்மம் ஏற்கனவே நம் பண்பாட்டு மனத்தில் ஊறிக்கிடக்கிறது. இந்த படிமத்தை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கையாளும் போது அது மிகுந்த ஆற்றலுடன் வாசகனிடம் சில விசயங்களை தெரிவிக்கிறது. நம் மொழி இப்படியான படிமங்களின் தொகுப்பினால் உருவாகியது. ஆனால் இந்த தொன்மமானது நம்மிடம் உரையாடும் விதம் மிக மிக சிக்கலானது.


உதாரணத்திற்கு, கோட்ஸே ராமரை, ராம ராஜ்ஜியத்தை நம்பினார். காந்தியும் நம்பினார். ராம ராஜ்ஜியத்தை மீட்கும் பொருட்டு கோட்ஸே காந்தியை சுடும் போது காந்தி “ஹே ராம்” என முனகியதாய் சொல்வார்கள். காந்தியின் இந்த ராமனும் துப்பாக்கியுடன் நின்ற கோட்ஸேயின் ராமனும் பொதுவாக ஒன்றுதான், ஆனால் இருவரின் மனதுக்குள்ளும் அவர்கள் வேறுவேறு. அயோத்யா கலவரங்களுக்குப் பிறகு இந்த ராமன் ஒரு வரலாற்றுப் பாத்திரமாக கட்டமைகப்பட்டான். இது நிலத்துக்கும், கோயிலுக்குமான உரிமையை உறுதிப்படுத்த இந்துத்துவ சக்திகளுக்கு அவசியப்பட்டது. ஆனால் அவர்கள் “ஜெய் ஶ்ரீராம்” எனக் கூவும் போது இதே ராமன் ராமாயணத் தொன்மத்தின் பாத்திரமான ராமனாகி விடுகிறான். அவன் இப்படி முரணான நிலையில் (வரலாற்றுப் பாத்திரமாகவும் கற்பனைப் பாத்திரமாகவும்) ஒரே சமயம் இருக்கிறான். இப்போது நீங்கள் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் கேட்டால் அவர் “வரலாற்று ராமன் பொய், தொன்ம ராமனே உண்மை” என்பார். ஒரு இந்துத்துவரிடம் கேட்டால் அவர் “இறைநம்பிக்கையாளர் சொல்வதும் உண்மை, நாங்கள் சொல்வதும் உண்மை” என்பார். என்னிடம் கேட்டால் இரண்டுமே பொய் என்பேன். குழப்பமாக இருக்கிறதா? தொல்படிமங்கள் மொழியில் திரண்டு வரும் போது இந்த குழப்பம் இயல்பாகவே எழுகிறது - நம் மனத்தின் ஆழத்துக்குள் தொல்படிமங்கள் பயணிக்க பயணிக்க அவை முகமற்ற உருவற்ற முழுக்க உணர்ச்சிகளால் ஆன ஒரு வடிவாகின்றன. வரலாற்றில் இருந்து, தொன்மத்தில் இருந்து ராமன் கடலில் கரைக்கப்பட்ட பிள்ளையாரைப் போல உருவற்ற ஒரு ஆதி உருவமாகிறான். இதே உளவியல் தான் இலக்கிய வாசிப்பிலும் நிகழ்கிறது - வாசிக்க வாசிக்க தொல்படிமம் சுலபத்தில் புலப்படாத மற்றொன்றாகிறது. வாசித்து முடித்து தர்க்கரீதியாக யோசிக்கையில் அது மீண்டும் சுட்ட மண் பொம்மையாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...