முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும்



விமர்சனத்தில் தொல்படிம விமர்சனம் என ஒரு தனி வகைமை உண்டு. இது ஒவ்வொரு பிரதியிலும் மிக நுட்பமாக ஒரு புலப்படாத படிமம் செயல்படுகிறது என்கிறது; இந்த தொன்மம் ஏற்கனவே நம் பண்பாட்டு மனத்தில் ஊறிக்கிடக்கிறது. இந்த படிமத்தை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கையாளும் போது அது மிகுந்த ஆற்றலுடன் வாசகனிடம் சில விசயங்களை தெரிவிக்கிறது. நம் மொழி இப்படியான படிமங்களின் தொகுப்பினால் உருவாகியது. ஆனால் இந்த தொன்மமானது நம்மிடம் உரையாடும் விதம் மிக மிக சிக்கலானது.


உதாரணத்திற்கு, கோட்ஸே ராமரை, ராம ராஜ்ஜியத்தை நம்பினார். காந்தியும் நம்பினார். ராம ராஜ்ஜியத்தை மீட்கும் பொருட்டு கோட்ஸே காந்தியை சுடும் போது காந்தி “ஹே ராம்” என முனகியதாய் சொல்வார்கள். காந்தியின் இந்த ராமனும் துப்பாக்கியுடன் நின்ற கோட்ஸேயின் ராமனும் பொதுவாக ஒன்றுதான், ஆனால் இருவரின் மனதுக்குள்ளும் அவர்கள் வேறுவேறு. அயோத்யா கலவரங்களுக்குப் பிறகு இந்த ராமன் ஒரு வரலாற்றுப் பாத்திரமாக கட்டமைகப்பட்டான். இது நிலத்துக்கும், கோயிலுக்குமான உரிமையை உறுதிப்படுத்த இந்துத்துவ சக்திகளுக்கு அவசியப்பட்டது. ஆனால் அவர்கள் “ஜெய் ஶ்ரீராம்” எனக் கூவும் போது இதே ராமன் ராமாயணத் தொன்மத்தின் பாத்திரமான ராமனாகி விடுகிறான். அவன் இப்படி முரணான நிலையில் (வரலாற்றுப் பாத்திரமாகவும் கற்பனைப் பாத்திரமாகவும்) ஒரே சமயம் இருக்கிறான். இப்போது நீங்கள் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் கேட்டால் அவர் “வரலாற்று ராமன் பொய், தொன்ம ராமனே உண்மை” என்பார். ஒரு இந்துத்துவரிடம் கேட்டால் அவர் “இறைநம்பிக்கையாளர் சொல்வதும் உண்மை, நாங்கள் சொல்வதும் உண்மை” என்பார். என்னிடம் கேட்டால் இரண்டுமே பொய் என்பேன். குழப்பமாக இருக்கிறதா? தொல்படிமங்கள் மொழியில் திரண்டு வரும் போது இந்த குழப்பம் இயல்பாகவே எழுகிறது - நம் மனத்தின் ஆழத்துக்குள் தொல்படிமங்கள் பயணிக்க பயணிக்க அவை முகமற்ற உருவற்ற முழுக்க உணர்ச்சிகளால் ஆன ஒரு வடிவாகின்றன. வரலாற்றில் இருந்து, தொன்மத்தில் இருந்து ராமன் கடலில் கரைக்கப்பட்ட பிள்ளையாரைப் போல உருவற்ற ஒரு ஆதி உருவமாகிறான். இதே உளவியல் தான் இலக்கிய வாசிப்பிலும் நிகழ்கிறது - வாசிக்க வாசிக்க தொல்படிமம் சுலபத்தில் புலப்படாத மற்றொன்றாகிறது. வாசித்து முடித்து தர்க்கரீதியாக யோசிக்கையில் அது மீண்டும் சுட்ட மண் பொம்மையாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...