Skip to main content

ஹைடெக்கர் குறிப்புகள் (4)



இருப்பு என்றால் என்ன?

நான் இருக்கிறேன் என்பதே இருப்பு. “இருக்கிறேன்என்றால் வாழ்தலா? இல்லை. தத்துவத்தில் இதற்கு வேறொரு பொருள் உண்டு. எதுவாக எப்போது எப்படி இருக்கிறேன் என்பதே தத்துவத்தில் உங்கள் இருப்பு.

இருப்பு குறித்த விவாதம் என்பது நமது இந்திய மரபில் குறிப்பாக பௌத்ததில் வருகிறது - மிகவும் குறிப்பாக நாகார்ஜுனரின்மூலமத்யமகாகாரிகையில்”. இந்நூலில் நாகார்ஜுனர் பொருட்களின், மனிதர்களின், உயிர்களின் இருப்பு பற்றி விவாதிக்கும் போது இந்த இருப்புகள் சாரமற்றவை என்கிறார்


மேற்கில் இது குறித்து முதலில் தீவிரமாக தனது மெய்யியல் நூலில் விவாதித்தவர் அரிஸ்டாட்டில். அவர் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு பொருட்களின் இருப்பு குறித்து விவாதித்து விட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்த சாரமான மாற்றமில்லாத இருப்பு உண்டு என ஒரு முடிவுக்கு வந்தார். .தா., ஒரு கோப்பையில் நீங்கள் மது அருந்துகிறீர்கள் என்றால் அப்போது மது அருந்தப்படும் கோப்பை எனும் இருப்பு அதற்கு வருகிறது. அது மதுக்கோப்பை ஆகிறது. ஒரு கப்பல் வெறுமனே கப்பல் ஆவதில்லை, அதில் நாம் பயணிக்கும் போதே அந்த இருப்பை அது கொள்கிறது. இதை அவர் “present at hand” என்றார். ஆனால் அரிஸ்டாட்டில் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் என்றாலும் அவர் இருப்பை ஒவ்வொரு பொருளின் சுபாவம் என சுருக்கினார். கப்பலில் செல்லும் மனிதனின் இருப்பு என்னவாகிறது என அவர் கேட்கவில்லை. கப்பல் அவருக்கு வெறுமனே ஒரு கருவி, மனிதனை அது பாதிப்பதில்லை.




இருப்பு குறித்து பேசியவர்களில் அடுத்து 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த டெகார்ட் முக்கியமானவர் - இவர்நான் சிந்திக்கிறேன், ஆகையால் இருக்கிறேன்எனும் பிரசித்தமான மேற்கோளுக்காக நினைவு கூரப்படுபவர். அவர் தான் முதன்முதலில்சிந்திக்கும் இருப்புகள்எனும் சிந்தனைக்கு வழிகோலினார். அவரைப் பொறுத்தவரையில் ஒரு கோப்பையை நாம் மதுவருந்த பயன்படுத்தவதனால் அல்ல அதை மதுவருந்த பயன்படுத்துவதாய் ஒருவர் கருதுவதாலே அதன் இருப்பு மதுக்கோப்பையாகிறது. அதாவது பயன்பாடல்ல, சுயமே இருப்பை தீர்மானிக்கிறது. மற்றொரு உதாரணம்: திருமணம் செய்ததாலே இருவர் தம்பதியாவதில்லை. பரஸ்பரம் கணவன் மனைவியாகக் காண்பதாலே, கருதுவதால் அவர்கள் கணவன் மனைவி. ஆனால் டெகார்ட்டிடமும் ஒரு பிரச்சனை உண்டு - ஒன்றை அல்லது ஒருவரை மற்றொருவர் எப்படிக் காண்கிறாரோ அதைப் பொறுத்து ஒரு இயல்பை அதற்கு / அவருக்கு அளிக்கிறார். என் நண்பனை நான் காண்கையில் அவனுக்கு நான் நண்பன் எனும் பெயரை அளிக்கிறேன், அவன் எனது நட்பின் நீட்சியாக இருக்கிறான். அந்த கணத்தில் அவனுக்கு என தனித்த இருப்பு இல்லை, அல்லது அவனது இருப்புக்கு என் மீது தாக்கமில்லை. டெகார்ட் சிந்திக்கிற மனிதனுக்கு அதிக இடமளித்து அவனது நீட்சியாகவே மொத்த உலகையும் பார்த்தார்


இப்படி அவர் ஒவ்வொன்றுக்குமான பின்னணியை, சூழலைப் பொருட்படுத்தவில்லை என்பதை ஹைடெக்கர் விமர்சித்தார். .தா., மின்விசிறி ஓட நான் அதன் கீழ் அமர்ந்திருக்கிறேன். மின்விசிறி மற்றும் எனது இருப்புகளை பரஸ்பரம் தீர்மானிக்கிறோம், அதோடு அன்றைய சீதோஷ்ண நிலை, அந்த அறை, அங்குள்ள காலம் என ஒவ்வொன்றும் அந்த இருப்புகளுக்கு பங்களிக்கிறது. இவை சேர்ந்து ஒரு ஒட்டுமொத்த இருப்பு, பிரிக்க முடியாத நிலையான இருப்பு தோன்றுகிறது என ஹைடெக்கர் கருதினார். வெறுமனே நான் அதை மின்விசிறியாகக் கருதுவதாலே, எனது விருப்பத்தினால் அது மின்விசிறியாகிறது எனும் டெகார்ட்டின் மானுட மைய வாதத்தை அவர் ஏற்கவில்லை.


இறுதியாக ஹசர்ல் நமது பிரக்ஞையை அனுபவமாக பொருட்களுடனான உறவில், அவற்றை நாம் எப்படி முன்கூட்டியே தீர்மானித்தபடி பார்க்கிற விதத்தில் தோன்றுவதாக சொன்னார். அவரையும் ஹைடெக்கர் பின்னணிக்கு இடமளிக்காத காரணத்தால் நிராகரித்தார்.


இருப்பை ஹைடெக்கர் இரண்டு சுவாரஸ்யமான உதாரணங்களால் விளக்கினார்:

1) ஒரு காதலியைப் பார்க்க செல்லும் ஆண் அவன் ஒரு தாவரவியல் அறிஞனாக இருந்தாலும் செடிகொடியை அல்ல பூங்கொத்தையே கொண்டு செல்வான். ஏனெனில் அது அவனது காதலின் இருப்பில் ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது.

2) ஒருவர் சுத்தியலால் அடிக்கும் போது அவர், அவரது, கை, அடிக்கப்படும் ஆணி, சுவர் மற்றும் சுத்தியல் இணைந்து ஒரு இருப்பை உண்டு பண்ணுகிறது. இதனாலே ஒருவர் சுத்தியலால் ஒரு பெண்ணை அடித்தால் செய்தித்தாளில் a woman was hammered என எழுதப்படும் என்கிறார் ஹைடெக்கர்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...