Skip to main content

வெபினார்களின் வரவு



வெபினார் (இணையவழி கருத்தரங்கம்) என்ற சொல்லை நான் கேள்விப்படுவதே இந்த நாடடங்கு காலத்தில் தான். நேரடிக் கருத்தரங்கு போல பலரை சந்திக்க, உரையாட, கவனிக்க இதில் வாய்ப்பிருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கருத்தரங்குகள், கூட்டங்கள் இப்போது இணையவழியாக நடக்கின்றன - பத்து மடங்கு அதிகமாக என நினைக்கிறேன். ஸூம், கூகிள் மீட், மைரோசாப்ட் டீம்ஸ் போன்ற பல செயலிகள் வழியாக. இவற்றை சகஜமாக பயன்படுத்தும் அளவுக்கு நாம் மாறியிருக்கிறோம். (இன்னொரு பக்கம், பொழுதுபோக்கு தளத்தில், இன்ஸ்டாகிராம், யுடியூப் போன்ற தளங்களில் பிரபலங்கள் தினம் தினம் பேட்டி கொடுத்தும் நேரடியாக பேசியும் வருகிறார்கள்.) இதில் நிறைய சௌகர்யங்கள்

1) கருத்தரங்குகளுக்கு காசு கட்ட வேண்டாம் (முன்பு குறைந்தது 500 ரூ வசூலித்தார்கள்.); பயணிக்க வேண்டாம். நான் தூங்கி எழுந்து அப்படியே வெபினார்களில் பார்வையாளனாய் கலந்து கொள்கிறேன், பல்தேய்த்து, காபி குடித்து, சிற்றுண்டி அருந்தி, அப்பப்போ டிவியை வேறு பார்த்துக் கொண்டு கருத்தரங்க உரைகள், விவாதங்களையும் கவனிக்க முடிகிறது. இது ஏன், கட்டுரை எழுதிக் கொண்டு கூட கருத்தரங்கை கவனிக்க முடிகிறது. ஒருமுறை இரண்டு சுவாரஸ்யமான வெபினார்கள் ஒரே சமயத்தில் நடந்தன - நான் இரண்டு கருவிகளில் லாக் இன் செய்து ஹெட்போன்களை காதுக்கு ஒன்றாய் நுழைத்து இரண்டு உரைகளையும் ஒரே சமயம் கேட்டேன்; ஒன்றில் முக்கியமான கருத்து வரும் போது மற்றொன்றின் ஒலியளவைக் குறைத்து கவனித்தேன்; இரண்டிலும் கேள்விகள் எழுப்பி விவாதத்தில் கலந்து கொண்டேன். இப்படி வானமே எல்லை, பைத்தியம் பிடிக்காதவரை.


2) இந்த வெபினார்களில் வெளிநாடுகளில் இருந்து, பல ஊர்களில் இருந்து பிரசித்தமான சிந்தனையாளர்களை, சாதனையாளர்களை பேச வைக்கிறார்கள்; இவர்களை ஒரு நேரடி கருத்தரங்கில் கலந்து கொள்ள வழக்கமாய் வெபினாரில் பேசுவதை விட ஐந்து / பத்து மடங்கு அதிக செலவாகும் - விமான / ரயில் கட்டணம், தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவு. பயணித்து சில நாட்களை செலவழித்து வர வேண்டும் என்பதால் நல்ல பேச்சாளர்களை, கலைஞர்களை சுலபத்தில் சம்மதிக்க வைக்க முடியாது. வெபினாரில் அந்த சிக்கலெல்லாம் இல்லை - இன்று பெங்களூர் ஜோதி நிவாஸ் கல்லூரி நடத்திய வெபினாரில் இயக்குநர் கௌதம் மேனன் பேசினார், அரைமணி நேரம் அறிமுக உரை நல்கி விட்டு, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு இயல்பாக நேர்மையாக பதிலளித்தார், அவரது அறையில் இருந்த கிடார்கள், புத்தகங்கள், அவரது கண்களில் நாம் எப்போதும் பார்க்கும் உக்கிரம், குரலில் அந்த மென்மை, எல்லாரையும் சமமாக பாவிக்கும் போக்கு என ரம்மியமாக ரசிக்கும்படியாக இந்த இணையவழி சந்திப்பு இருந்தது. ஆனால் இதுவே நேரடியான கருத்தரங்கு என்றால் எளிதில் அவரைப் போன்றவர்களை வேலை நெருக்கடிக்கு இடையில் வரும்படி ஒப்புக்கொள்ள வைக்க முடியாது. நிறைய கெஞ்ச வேண்டும், கடைசி நேர ரத்துகள் இருக்கும்.

3) அதை விட முக்கியமாய் மரபான கருத்தரங்குகளில் அவரைப் போன்ற பிரபலங்கள் வரும் போது அவர்களைச் சுற்றி ஆசிரியர்கள், நிர்வாகிகள் என ஒரு அதிகார வட்டம் தோன்றி, சாமான்யர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்து விடும்; வெபினார்களில் இந்தசமூக இடைவெளி’, அதிகாரப் படிநிலை இல்லை. அவர்களது அறையில் பக்கத்தில் உட்கார்ந்து கேட்பதை போல இருக்கிறது.

 

4) அடுத்து, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை - தற்சமயம் எங்களுடைய ஆங்கிலத்துறை ஒரு கருத்தரங்க இணையவழி நடத்தி வருகிறது; பிரபலங்கள் யாருமில்லை; துறையின் பேராசிரியர்களே பேச்சாளர்கள். அதற்கே ஆயிரத்துக்கும் மேலான பேர் பங்கேற்க பதிவு செய்து கொண்டு ஐநூறுக்கும் மேலானோர் கலந்து கொண்டு வருகிறார்கள். நினைக்க வியப்பாக இருக்கிறது; ஒரு மரபான கருத்தரங்கை நடத்த ஆறு மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு, செலவழித்து, நூறு மடங்கு அதிகமாய் உழைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இப்படி செய்தும் ஐநூறு பங்கேற்பாளர்களை எல்லாம் கற்பனை பண்ண முடியாது. கட்டுரை வாசிக்க மட்டுமே பெரும்பாலானோர் வருவார்கள். ஆனால் இதெல்லாம் அதிகமாய் இல்லாமல் சுலபத்தில் பெரிய தாக்கத்தை வெபினார் மூலம் செய்ய முடிகிறது, முயற்சியும் ஊக்கமும் மட்டும் போதும்.

5) கடைசியாக வெபினார்களின் தளம் என்பது இணையமே என்றாலும் அது பௌதீகமாக நிகழ்வது நமது வீடுகளில் தான் - இன்றைய வெபினாரில் ஒரு பெண் பங்கேற்பாளர் குறிப்பிட்ட ஒரு தகவல் என்னைப் பெரிதும் யோசிக்க வைத்தது: பெண்ணியம் குறித்து வெபினாரில் பேசப்பட்ட கருத்துக்களை அப்பெண்ணுடன் அவரது கணவரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்; ‘இப்படியெல்லாம் இருக்கிறதா, நான் கேள்விப்பட்டதே இல்லையேஎன பெண்ணுரிமை பற்றி அவர் சொல்கிறார். இதுவே மரபான கருத்தரங்கு என்றால் மனைவி ஒரு பக்கம் கல்வித்துறை விவாதங்கள் இருப்பார், கணவர் தன் வேலை, தன் பிரச்சனைகள் என இன்னொரு பக்கம் போய்க்கொண்டு இருப்பார். தன் பெண்ணியக் கோபங்கள் குறித்து அவர் யோசிப்பவை எல்லாம் கணவரின் காதுக்கே போகாது. இந்த வெபினார்கள் இருவரின் உலகங்களையும் இணைக்கிறது. இது ஒரு நல்ல விசயம் - அறிவுப்பரவலில் ஒரு ஜனநாயகபூரவமான மாற்றம். இணையவழி வகுப்புகளிலும் இது நடக்கிறது - மாணவர்கள் ஸ்பீக்கரில் கேட்கிறார்களில் எனில் பேசப்படும் கருத்துக்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் விசயத்தில் அவர்களின் இணையர்களும் தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். இப்படித்தான் சமூக மாற்றம் நிகழ முடியும்.


இணையத்துக்குள் அறிவும் கலையும் இலவசமாக இருப்பதாலே வெபினாரிலும் (வேறு வழியின்றி) காசு வசூலிக்கப்படுவதில்லை எனப் புரிந்து கொள்கிறேன், இல்லையென்றால் கோப்பு, சாப்பாடு, டீ, பேச்சாளர் செலவு என கணக்குக் காட்டி ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 500-1000 என வசூலித்து லாபம் ஈட்ட நினைக்கும். கொரோனா நாடடங்கு விலகியதும் கருத்தரங்க சந்தை மீண்டும் களைகட்டும், வசூலும் தூள் பறக்கும். அறிவுத்துறைகள் ஒரு சிறிய எலைட்டான வட்டத்துக்குள் முடங்கும். அப்படி நிகழக் கூடாது என்பதே என் வேண்டுகோள்


தமிழ் இலக்கியவாதிகள் தனியாக இத்தகைய இணையவழி சந்திப்புகளை செய்து கொண்டு வருகிறார்கள். டி. தர்மராஜ் யுடியூபில் வழங்கிய தத்துவ அறிமுக உரைகள் மிகவும் பயனுடையதாக இருந்தன. (ஆனால் அந்த வரிசை சரியாக விளம்பரப்படுத்தப்படவில்லை.) நிறைய பேர் பங்கேற்கும் வெபினார்களை ஒருங்கிணைக்க நம் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுக்கு கட்டமைப்பு வசதி (அதுவும் பெரிதாகத் தேவையில்லை என்றாலும்) இல்லை. உயிர்மை, காலச்சுவடு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற கலாச்சார அமைப்புகள் (பதிப்பகம் என அவர்களை சுருக்கி விட முடியாது) இலக்கியம், அரசியல், சமூகம், தத்துவம் ஆகிய தளங்களில் வெபினார்களை திட்டமிட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். புத்துணர்வு, நம்பிக்கை, படைப்பூக்கம் என இலக்கிய உலகம் மீண்டு வர இது உதவும்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...