Skip to main content

வெட்கமாக இல்லையா உங்களுக்கு?



திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்களே அதுதான் ஜிக்கும் நடந்துள்ளது, அதை மறைக்கத்தான் இந்த 59 சீன செயலிகளின் தற்காலிகத் தடை எனும் நாடகம். ஜீயால் இத்தனை நாட்களில் ஒருமுறை கூடசீனா நம் எதிரிஎன வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அவரது pmcares நிதிக்கு 100 கோடிக்கு மேல் சீன நிறுவனங்கள் அண்மையில் பணம் கொடுத்திருக்கின்றன. இப்போது தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் கூட 30 கோடி கொடுத்திருக்கிறது. இன்று குஜராத்தில் (ஜியின் பினாமியான) அதானி 3000 கோடிக்கான ஒரு வணிக ஒப்பந்தத்தை ஒரு சீன நிறுவனத்துடன் செய்துள்ளார். பிஎஸென்னெல்லுடன் ஹுவாய் நிறுவனத்துக்குள்ள தயாரிப்பு ஒப்பந்தமும் இன்னும் ரத்தாகவில்லை. Paytmஇல் 50% மேல் அலிபாபா எனும் சீன நிறுவனம் பங்குகளை வகிக்கிறது. அதைத் தடை செய்தால் அதை பெரிதும் நம்பியிருக்கும் நம்மைப் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுவோம் என்றாலும் தேசப்பாதுகாப்பு என வரும் போது நிர்தாட்சண்ணியமாக தடை செய்ய வேண்டியதுதானே. ஜிக்கு இதில் என்ன பிரச்சனை?

 என் ஊகம் சீனாக்காரனின் கையில் அவரது குடுமி இருக்கிறது, அவர்களுடனான புரிந்துணர்வில் கோடானுகோடி பணம் அவருக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும் லாபம் உள்ளது. அதனாலே அவர்களை நேரடியாகத் தாக்கவோ ஒரேயடியாய் தடை செய்யவோ ஜிக்கு துணிச்சல் இல்லை. அது தன் விரலைக் கொண்டு தன் கண்ணையே குத்துவதைப் போல என அவர் நினைக்கிறார்


மற்றொரு பக்கம், நாம் சீனாவை ஓட ஓட விரட்டி விட்டோம் என பிரச்சாரம் தூள் பறக்கிறது. அமேசானில் எந்த பொருளைப் போய் பார்த்தாலும் அங்கு கேள்வி-பதில் பகுதியில் யாராவது ஒருவர் வந்துஇது சீனப்பொருளா?” எனக் கேட்பதைப் பார்க்கிறோம். இந்தக் கேள்வியை ஒவ்வொரு பக்கமாய் போய் காப்பி பேஸ்ட் செய்வது சங்கிகளின் சமூகவலைதளப் படையே, இதன் மூலம் மக்கள் சீனாவுக்கு எதிராய் கொதித்துப் போயிருப்பதாய் ஒரு தோற்றத்தை உண்டு பண்ண நினைக்கிறார்கள். மற்றொரு பக்கம் டிக்டாக் நிறுவனத்தின் இந்திய சி.. (குஜராத்தை சார்ந்த ஒரு காந்தி) “இது ஒரு பிரச்சனையே இல்லை, மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது, அங்கே எங்கள் தரப்பை விளக்கி நாங்கள் மீண்டு வருவோம்.” என எகத்தாளமாக டிவீட் போட்டிருக்கிறார். இந்த கெத்து எங்கிருந்து வருகிறது? பணபலம், அதிகார பலம் மற்றும் செல்வாக்கால். அரசு இப்போதைக்கு விதித்துள்ளது ஒரு பாவனையான தடை எனும் நம்பிக்கையால். நாம் தான் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கிறோமே எனும் துணிச்சலால். இதுவே இந்த அரசுநாங்கள் சீன செயலிகளை தடை செய்கிறோம், சீன வணிக நிறுவனங்களையும் உடனே தடை செய்வோம்என வெளிப்படையாக துணிச்சலாக அறிவித்திருந்தால் பேச்சுவார்த்தைக்கே இடமிருக்காதே. ஒரு சின்ன ஆள் ஒரு இந்திய தேசத்தின் தலைமைக்கே சவால் விடும்படி ட்வீட் போடும் நிலை ஏற்படாதே. ஏன் இறையாண்மைக்கு ஆபத்து என்றெல்லாம் டபாய்க்க வேண்டும்

 அதாவது இவர்களின் மன்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சீன வியாபாரிகள், முதலீட்டாளர்களிடம் கையைக் கட்டி நிற்பாராம், மக்கள் மட்டும் சீனப் பொருட்களை பகிஷ்கரித்து போராட வேண்டுமாம். இந்த லட்சணத்தில் இந்த போலி நடவடிக்கைக்குடிஜிட்டல் ஸ்டிரைக்என ஒரு பெயர் வேறு. வெட்கமாக இல்லையா உங்களுக்கு?


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...