ஒரு காலத்தில் துணிச்சல், தன்னம்பிக்கை, தனித்துவம், எதிர்-சிந்தனை என ஒரு தீப்பிழம்பாகவே இருந்த லஷ்மி மணிவண்ணன் எப்படி ஆகி விட்டார் - பரப்பிரம்மம், பரம்பொருள், எல்லாம் அவன் செயல் என நாமம் ஜெபிக்கும் படி. அவருடைய மொழி முற்றிலும் சிதைந்து விட்டது - இப்போது அவர் எழுதி வரும் வைகுண்டர் ‘இதிகாசம்’ ஏதோ பக்தி விகடன் படிப்பதைப் போல இருக்கிறது.
எழுத்தாளனுக்கு எதையும் மற்றொரு கண்ணில், மாறுபட்ட நோக்கில் பார்க்கும் கூர்மை இருக்கும். அதுவே தேய்வழக்கான பார்வையில் இருந்து அவனைப் பாதுகாக்கிறது. எனக்குத் தெரிந்து நவீன படைப்பாளிகள் பக்தர்களாக இருப்பார்கள், ஆனால் படைப்பு மனத்தையும் சமூகத்திற்கு எதிர்-திசையில் வைத்திருப்பார்கள். பொதுபோக்குள் லஷ்மி மணிவண்ணனைப் போல ஒரு எழுத்தாளன் கரைவது மிகவும் வருத்தத்தை தருகிறது. ஒரு காலத்தில் அவரது கட்டுரைகளை அப்படி சிலாகித்துப் படித்திருக்கிறேன். அவரது நாவலைக் கொண்டாடியிருக்கிறேன். இவர் அந்த ஆளுமை அல்ல, இவர் அவருக்குத் தொடர்பில்லாத இரட்டை.
லஷ்மி மணிவண்ணன் மற்றொரு பாலகுமாரன் ஆவதை வாழ்த்துவதற்கு வேறு சில பெரிய கைகள் இருக்கின்றன. அடக்கொடுமையே!
Comments
It is only easy to see in mobile.
A photo and only essay title..