Skip to main content

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: ஒரு எளிய அறிமுகம் (1)


ஆகஸ்ட் இரண்டாம் தேதி கலசலிங்கம் பல்கலையின் இணையவழி கருத்தரங்கில் நான் பேசிய உரைக்கான குறிப்புகளை இங்கு சிறு பகுதிகளாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


வரலாற்றினூடாக ஒரு நாவலாசிரியனின் பிம்பத்தின் பயணம்:


நாவல் ஆசிரியன் என்பவன் பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடர்கதைகள் வழியாக சமூக, குடும்ப, வரலாற்றுப் பிரச்சனைகளை, தனிமனிதர்களுக்கும் சமூகத்துக்குமான மாறி வரும் உறவுகளை சித்தரித்தவன். ஐரோப்பா காலனிய படையெடுப்பை துவங்கி, அங்கு தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் தேசம் குறித்த கற்பனைகள், கருத்தியல்களை வளர்த்தெடுப்பவனாக, அதற்கு வடிவம் அளிப்பவனாக நாவலாசிரியன் மாறுகிறான். அடுத்து குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு துவங்கி இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பம் வரை நாவலாசிரியன் ஒரு சமூக, அரசியல் விமர்சகனாக, மக்கள் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் அலசுகிறவனாக, அதற்காக போராடுகிறவனாகவும் இருந்தான்


பின்னாளில்அன்புள்ள டாக்டர்” / agony aunty போன்ற பத்திகள், கேள்வி-பதில் பகுதிகள், அரசியல் சமூக, உளவியல் பத்திகள் மெல்ல மெல்ல நாவலாசிரியனின் இந்த இடத்தை எடுத்துக் கொண்டன. கலாச்சார விழுமியங்கள், கேள்விகள், சமூகத்தில் அவ்வபோது எழும் அலைகள், தத்தளிப்புகள், தடுமாற்றங்கள் (குற்றங்கள், படுகொலைகள், ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள், தேசியம், எழுச்சி,போராட்டங்கள்) ஆகியவற்றை பேசுவதற்கு, படிக்க விரும்பாத பெரும்பகுதி ஜனங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சினிமா எனும் சக்தி வாய்ந்த ஊடகம் தோன்றியது. சினிமாவுக்குப் போட்டியாக பின்னர் டிவியும், டி.விக்கு மாற்றாக இணையம், கைப்பேசி, ஸ்மார்ட் டிவி, யுடியூப், சமூக வலைதளங்கள் ஆகியவை தோன்றின. இப்போது மக்களே தம்மை அவ்வப்போது அலைகழிக்கிற, கவர்கிற, கோபப்படுத்துகிற விசயங்களை தாமே செய்தியாக்கி, தாமே அலசி, தாமே ஒரு முடிவுக்கும் வருகிறார்கள். பத்திரிகைகள், இலக்கியம், நாவல், சினிமா, டிவி ஆகியவற்றில் இருந்து இன்று மக்களே ஒரு சுய-ஊடகம் ஆகிறார்கள்.


வரலாற்றில் இந்த இடம் நாவலாசிரியனுக்கு சிக்கலானது - பத்தொன்பதாம் நூற்றாண்டில் டிக்கென்ஸ் நாவலை சமூக இடர்களை, தீமைகளை அம்பலப்படுத்தும் ஒரு தளமாக பயன்படுத்தினார். கார்க்கி தொழிலாளர் போராட்டத்தை உத்வேகப்படுத்தும் ஒரு கருவியாக்கினார். ஜேன் ஆஸ்டின், வெர்ஜினியா வூல்ப் போன்றோர் தத்தமது காலத்தில் பெண்கள் சந்தித்த நெருக்கடிகளை உளவியல், பாலின, மொழி, கலாச்சார, சமூக விழுமிய தளங்களில் வைத்து பேச நுட்பமான உரையாடல் களமாகவும் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்தினர். யாரும் பேச மறுத்த பாலியல் சிடுக்குகளை, டார்வினும் பிராயிடும் சந்திக்கும் இடத்தில் ஆண்-பெண் உறவு இனி என்னவாகும், ஒரு தூய மிருக நிலையில் காதல் பகட்டில்லாத ஒரு உறவாக மலருமா போன்ற கேள்விகளை டி.எச் லாரன்ஸ் எழுப்பினார்.


 இவை அத்தனையையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தன் நாவல்களில் விரிவாக அலசக் கூடிய மகத்தான படைப்பாளியாக தல்ஸ்தாய் விளங்கினார். தல்ஸ்தாயிடம் நாம் விடை காண முடியாத கேள்விகளே இல்லை. ஒரு பெண் சுதந்திரமாக முடிவெடுத்தால், அதனால் அவளது குடும்பம் உடைந்தால், பரவாயில்லை என அவள் ஒரு விட்டுவிடுதலையான காதலை நாடினால் என்னவாகும் எனும் கேள்வியை அவர் ரஷ்யாவின் மத்திய வர்க்கம், மேற்தட்டினரின் பாசாங்கான வாழ்க்கை, அரசு எந்திரத்தின் சுயநலம், போலித்தனம், விழுமியங்களை, சமூகக் கட்டுப்பாடுகளை சற்றும் பொருட்படுத்தாமல் இருக்கும் ஆண்கள் சமூகத்தால் எந்த கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் இருப்பது, ஒரு பெண்ணின் சின்னச்சின்ன முடிவுகள் மீது ஒட்டுமொத்த சமூகமும் செலுத்தும் மிகப்பெரிய அழுத்தம், கட்டற்ற வாழ்க்கையில் ஈடுபடும் கலைஞர்களின் நிலை, இதையே பொருளாதார தளத்தில் விவசாயத்தில் செயல்படுத்தி நிலவுடைமை அடிமைகளான கூலிகளுக்கு சம உரிமை அளிக்க விரும்பும் ஒரு மேற்தட்டு இளைஞனின் நிலை, ஒழுக்கத்தின், மதத்தின், குடும்பத்தின் நிர்பந்தங்களின் மத்தியில் ஒரு தனிமனுஷியின் இருப்பு என்னவாகிறது ... இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை தல்ஸ்தாய் எழுப்புவார். அத்தனை கேள்விகளையும் ஒரு மணமான பெண் ஓடிப்போகிற ஒற்றை வரி மீது வைத்து வெற்றிகரமாய் ஆழமாய் அலசி ஒட்டுமொத்தமான ஒரு தத்துவார்த்த முடிவுக்கு வந்திருப்பார். அந்த தத்துவத்தை நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அதற்கு முரணான பல கருத்தியல்களை அதே அளவுக்கு வலுவாக அவர் பரிசீலித்திருப்பார். அதாவது இத்தனை ideas மத்தியில் அவற்றுக்கான counter-ideas-உம் வலுவாக இருக்கும். இன்றும் நான் எந்த நாவலைப் படித்தாலும்அட இதைத்தான் தல்ஸ்தாய் ஏற்கனவே பேசிட்டாரேஎனத் தோன்றாமல் இருக்காது. அதனால் தான் அவரை நான் நாவல்களின் கடவுளாக நினைக்கிறேன்.


தல்ஸ்தாய் வாழ்ந்த காலத்தில் இயங்கிய மற்றொரு மகத்தான நாவலாசிரியர் தஸ்தாவஸ்கி. இருவருமே மேற்தட்டு சமூகத்தில் தோன்றியவர்கள். ஆனால் தல்ஸ்தாய் தஸ்தாவஸ்கியை விட அதிக பணம் படைத்தவராக, பல்லாயிரம் ஏக்கம் நிலங்களுக்கு, பல ஊர்களுக்கு, அந்த ஊரில் வாழும் கூலிகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். தான் வாழ்ந்த காலத்தில் அவர் தன் நாவல்கள் மூலமாகவும் நிறைய பணம் பெற்றார். ஒரு கட்டத்தில் கிறித்துவம் போதிக்கும் எளிமை, இரக்கம், பரோபகாரம் போன்ற நல்ல விழுமியங்களை நாடி தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். இனம், மதம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதன் பரஸ்பரம் நேசிக்க வேண்டும் எனும் கொள்கையைக் கொண்டார். அதற்காக தன் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை தண்ணீராக செலவழித்தார். வயோதிகத்தை எட்டிய நிலையில் அவர் தன் மனைவி, குழந்தைகளிடம் இருந்து மனதளவில் விலகி தன் பண்ணையில் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தனக்காக செருப்பை தானே தைத்து பயன்படுத்தினார். ஒரு குடியானவனைப் போல ஆடை அணிந்தார். அவரது காப்பிரைட் வருமானம் ஏழைகளுக்கான தொண்டில் பறிபோவது கண்டு பொறுக்காமல் அவரது மனைவி சோபியா சண்டை போட தள்ளாடும் வயதில் வீட்டில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்துக்கு சென்றார். அவரது மனைவியும் மக்களும் எத்தனையோ கெஞ்சியும் திரும்ப செல்ல மறுத்து விட்டார். இந்த சம்பவங்கள் ஊடகங்களால் பரபரப்பாக பதிவு செய்யப்பட்டு. இரண்டு நாட்களில், நவம்பர் 20, 1910இல் தல்ஸ்தாய் ரயில் நிலையம் ஒன்றில் உடல் நலிவுற்று இறந்து போனார்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...