Skip to main content

ஒரு கல்வியாளனாக என் சித்தாந்தமும் ஆன்லைன் வகுப்புகளும் (1)


ஆன்லைன் வகுப்புகள் மீது ஒரு அவநம்பிக்கை ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் போகப் போக அவற்றின் மீது ஒரு நன்மதிப்பு ஏற்பட்டு விட்டது. சில காரணங்கள்:


1) உட்கார்ந்த இடத்தில் இருந்தே பேச முடிகிறது, அடித்துப் பிடித்து வகுக்குப்பறையை அடைய வேண்டாம்.

2) ரொம்ப கத்த வேண்டியதில்லை - ஐம்பது பேர் கொண்ட வகுப்பானாலும் 120 பேர் உள்ள வகுப்பானாலும் ஒரே ஒலி அளவை தக்க வைக்கலாம். தொண்டைக்கு நல்லது.

3) போரடித்தால் மாணவர்கள் ஹெட்போனைக் கழற்றி வைத்து ஓய்வெடுக்கலாம் (நான் அவ்வப்போது அவர்களிடம் கேள்வியை கேட்டு சோதிப்பேன் என்றாலும்) - இது ஜனநாயகபூர்வமானது என நம்புகிறேன்.

4) குறிப்புகளைப் பகிர்வது - திரையைப் பகிர்வது - ரொம்ப ரொம்ப ஈஸி. கரும்பலகையில் எழுதுவது, கணினியை திரையிடப் இணைத்துக் காட்டுவதில் உள்ள சிரமங்கள், நேர வீணடிப்புகள் இல்லை.

5) வகுப்பில் யாரும் புத்தகம் கொண்டு வரவில்லை என அதகளம் பண்ண முடியாது - கணினித்திரையே / முகநூல் திரையே புத்தகம்.

6) மாணவர்களுக்கு வினாடி வினா போன்ற கேள்விகளை கூகிள் கிளாஸ்ரூமில் அளிக்க முடிகிறது. mentimeter ஒரு ஜாலியாக கருத்து பகிரும் விளையாட்டு. இப்படி பல சங்கதிகள் ஆன்லைன் வகுப்புகளை வண்ணமயமாக்குகின்றன.

7) எல்லா வகுப்பிலும் 8-10 பேர் அதிகமாய் உரையாடுவார்கள், முப்பது பேர் கவனிப்பார்கள், மௌனமாக, மிச்ச பேர் பாதிக்குப் பாதி காதில் வாங்குவார்கள், அவர்களில் ஒரு சிலர் வாங்கியபடியே கண்ணயர்வார்கள். ஆன்லைன் வகுப்பும் இப்படித்தான் என்பதால் பெரிய ஏமாற்றமில்லை.


ஏன் ஏமாற்றமில்லை? இங்கு தான் மாணவன் குறித்த என் சித்தாந்தம் வருகிறது.


ஒரு கல்வியாளனாக, ஆசிரியனாக என் அணுகுமுறை, கொள்கையை இங்கு குறிப்பிட வேண்டும் - என் பணி அனைவருக்கும் ஒன்றை புரியும்படியாக செய்வது என நான் நம்பவில்லை. அது போதகரின் பணி. நான் போதகன் அல்ல. மேலும் அறிவு என்பதை மிட்டாய் அல்ல, யாருக்கும் உடைத்துக் கொடுக்க முடியாது என நினைக்கிறேன். அறிவுத்தேடலில் நான் ஒரு பங்கேற்பாளன் எனில் மாணவன் மற்றொரு பங்கேற்பாளன். விவாதிக்க, யோசிக்க, பயில அறிவு பெருகும் (அது நிரந்தரமாய் தங்காது, அப்படித்தங்கினால் அது அறிவாகாது). அதை 60-70 மணிநேரங்களில் யாருக்கும் கையளிக்க முடியாது. அறிவு என்பது ஒரு பண்டமல்ல, அதை வாங்க, விற்க முடியும் என இன்று ஏற்பட்டுள்ள நம்பிக்கை மூடத்தனமானது, கல்வியாள வணிகர்கள் பரப்பி வரும் மூடநம்பிக்கை அது


என்னிடம் ஒரு மாணவன் கற்க வந்தால் நான் அவனை ஒரு சக-சிந்தனையாளனாக, சக-எழுத்தாளனாக கூட சேர்த்துக் கொள்வேன். என்னுடன் பயணிப்பவன் மட்டுமே என் மாணவன். என்னுடன் ஒரு வருடமாவது பயணித்தால் அது ஒரு சில கட்டுரைகள் / கதைகள் / நாவல் எழுதுவான். அவன் இதையெல்லாம் செய்ய நினையாவிடினும் செய்வான். இல்லாவிட்டால் அவன் என் மாணவன் அல்ல, வழிப்போக்கன். அவனுக்கும் நான் வகுப்பெடுப்பேன், ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.


ஒரு மாணவன் எழுத்தாளன் அல்லவே என நீங்கள் நினைக்கலாம். இல்லை, என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு அறிவுத்தேடல் கொண்ட மாணவனும் சிந்தனையாளனே, மொழியில் இயங்குபவனே, அடிப்படையில் அவன் எழுத்தாளனே. ஒரு நல்ல சமூகத்தில் 90% பேராவது எழுத, சமூக கலாச்சார உரையாடலில் பங்களிக்க வேண்டும். அதுவே மேம்பட்ட விடுதலை பெற்ற சமூகமாக இருக்கும். இது என் சித்தாந்தம்.

 நான் இதை எப்போதும் மறைமுகமாக வகுப்பில் என் மாணவர்களுக்கு உணர்த்துவேன் - நான் ஒரு எழுத்தாளன், அதற்கு அடுத்தே ஒரு ஆசிரியன், நான் உங்களையும் என் வழியில் அழைத்து செல்லவே வந்திருக்கிறேன், வந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு சமம், வந்தால் மட்டுமே உங்களை என் உயிராக மதிப்பேன்.


ஆனால் நமது தவறான சமூகப்பொருளாதார அமைப்பு காரணமாக மிகச்சில மாணவர்களே என்னுடன் என் பாதையில் வருவார்கள். என் ஆறு வருட ஆசிரிய வாழ்வில் எனக்கு மூன்று மாணவர்களே அப்படி அமைந்தார்கள். இவர்களில் ஆயுஷே என் சிறந்த மாணவன் - அவன் என்னுடன் இரண்டு புத்தகங்கள் எழுதினான். இப்போது நாங்கள் சேர்ந்து நாகார்ஜுனரின் பௌத்த தத்துவம் பற்றி ஒரு நூலை எழுதி வருகிறோம். அவன் ஏன் சிறந்த மாணவன் என்றால் அவன் (1) எழுத்தாளனாகி விட்டான் (அதன் வழியாக பண்பட்ட, சமூகப்பொறுப்புள்ள மனிதன் ஆகி விட்டான்), (2) ஒரு புதிய சிந்தனையைக் கற்றறியும் போது என்னால் பல சமயங்களில் அவனிடம் சந்தேகம் கேட்குமளவுக்கு அவன் தெளிவாக சிந்திக்கிறான், அவன் எனக்கு சமமாக, பல சமயங்களில், என்னை விட மேலாக இருக்கிறான். அடுத்தொரு மாணவன் தமிழில் கவிதைகள் எழுதினான், தொடர்ந்து இலக்கிய நூல்கள் வாசித்தான், ஊடகங்களில் பணி செய்தான், இப்போது திருமணமாகியிருக்கிறது. மூன்றாவது மாணவன் தத்துவ வாசிப்பில் ஈடுபட்டிருந்தான், குறிப்புகள் எழுதி எனக்குக் காண்பித்து வந்தான். அவனிடம் இப்போது நான் தொடர்பில் இல்லை

இந்த மூவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது - நான் எதேச்சையாக சாக்ரடீஸ் பற்றி ஆங்கில வகுப்புகளில் பேசப் போக அதனால் தூண்டுதல் பெற்று என்னிடம் விவாதிக்க, ஐயம் கேட்க வந்து நண்பர்கள் ஆனவர்கள் இவர்கள். சாக்ரடீஸ் இப்படி எனக்கு ராசியாக இருக்கிறார்


சரி, மிச்ச மாணவர்கள்? அவர்களிடமும் என்னுடைய சிந்தனையின், கருத்துக்களின் தாக்கம் இருக்கும், அதனால் சமூகத்துக்கு பயனிருக்கும் என நம்புகிறேன்


ஒரு மாணவருக்கு ஒரு புதிய விசயத்தைகற்றுக்கொடுப்பதாக நம்புவது ஒரு ஆபாசம், அவமதிப்புச் செயல் - மாணவரைக் கீழாகவும் ஆசிரியரை மேலாகவும் கருதும் ஒரு படிநிலை இதனால் உருவாக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் மொழியில் நாம் அனைவரும் சமம். அதனாலே என்னால் எழுதவும் அதை மற்றொருவரால் படித்து புரிந்து கொள்ளவும் முடிகிறது, என்னால் பேசவும் அதைக் கேட்டு ஒரு மாணவனால் சிந்திக்கவும் எதிர்வினையாற்றவும் முடிகிறது. ஆனால் கற்றறிவித்தல் என்பது ஒரு போலியான கட்டுமானம். மாறாக உரையாடலும் அதன் வழி இரு பக்கத்திலும் கிடைக்கும் தெளிவுமே சாத்தியம் - ஆசிரியனும் மாணவனும் ஒரே சமயம் மொழியில் கருத்துக்கள் தோன்ற துணை போவதன் வழி தெளிவு பெறுகிறார்கள். (அவன் கேட்பதே மொழிப்பங்கேற்பு தான்.)


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...