Skip to main content

ஜுரம் எனும் கிங்காங்கிடம் மாட்டிக் கொண்ட கதை

பெங்களூர் வந்த பிறகு ஒன்றிரண்டு முறை ஜுரம் வந்ததுண்டு. கொஞ்சமாய் படுத்துகிற 99-100 டிகிரி ஜுரங்கள். மருத்துவரைப் பார்த்ததும் பறந்தோடிப் போகிற ஜுரங்கள். ஆனால் இந்த ஜுரங்களுக்கெல்லாம் கிங்காங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் விசிட் அடித்தார். ஞாயிறு இரவு தொடங்கி 72 மணிநேர உண்ணாநோன்பு எடுக்க திட்டம். இதற்கு முன்பே நான் இடைவிட்ட விரதம் (intermittent fasting) பயின்று வந்திருந்த நாட்களில் இந்த 72 மணிநேர சங்கதியை வெற்றிகரமாக முயன்றிருக்கிறேன். சரி, அதனால் இம்முறையும் தைரியமாக செய்யலாம் என இறங்கினேன். ஆனால் ஒரு சின்ன விசயத்தை கவனிக்கவில்லை - நான் இடையிட்ட விரதத்தை விட்டு மூன்று வேளை உணவுப்பழக்கத்துக்கு வந்து பல மாதங்கள் ஆகின்றன; உடம்பு விரதம் என்றால் என்னவெனக் கேட்கும் நிலை. திடுதிப்பென நான் இறங்கியிருக்கக் கூடாது.


 முதலில் வந்தது வயிற்றுப்பிரச்சனை; அடுத்து உள்ஜுரம். நா வறளும், ஆனால் ஒரு மிடறுக்கு மேல் தண்ணீர் குடிக்க முடியாது. புத்தகம் படிப்பது போக டிவி கூட பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியாது. எழுந்து அமர்ந்தால் உடல் தள்ளாடுகிறது. காலை வேளையில் ஓரளவுக்கு உடம்பு ஸ்டெடியாக இருக்கும், மதியம் ஆனால் பேய் புகுந்ததைப் போல புரட்டிப் போடும். சரியாக ஐந்து மணிக்கு மேல் வாந்தி எடுப்பேன். இதை வைத்துக் கொண்டு தான் அருகாமை ஆளுமைகள் நேரலையில் பேசுகிறேன், தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தினேன். முடிந்ததும் தளர்ந்து விழுந்தேன்.

 தொடர்ந்து இரு தினங்கள் இப்படிப் போக, நேற்று நிலைமை கைமீறிப் போய் விட்டது. ஜுரம் கொதிக்கிறது. படுக்கவோ உட்காரவோ முடியாது. வாந்தியெடுத்தால் சரியாகி விடும், ஆனால் ஐந்து நிமிடங்கள் பெரும் அவஸ்தை. ஒரே சமயம் ஜுரம், வயிற்று வலி எனத் தாக்கியதாலோ என்னவோ தாங்க முடியாத சிரமம். ஆஸ்பத்திரி செல்லலாம் என நினைத்தால் இந்த ஊரில் தான் ஒன்பது மணிக்கு மேல் வண்டி கிடைக்காதே. பல்லவி வழக்கம் போல் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆட்டோ மேல் ஆட்டோவாக புக் செய்து, அதில் முதலாவது கேன்ஸல் ஆக இரண்டாவது டிரைவரிடம் ‘தயவு செய்து கேன்ஸல் பண்ணாதீங்க, எமர்ஜென்ஸி, ஆஸ்பத்திரி போகணும்’ எனக் கெஞ்சிட அவரும் வந்து விட்டார். நாய் ஜீனோவை வீட்டில் விட்டுப் போனால் அப்பார்ட்மெண்டி பெரிய கலவரமே வரும் அளவுக்கு குலைப்பான் என்பதால் அவனையும் அழைத்து சென்றோம். என்னால் சில அடிகள் நடக்கவே முடியவே, மூச்சு வாங்குகிறது. ஆனால் ஆஸ்பத்திரி சென்ற பிறகு மருத்துவரும் செவிலியரும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். வயிற்றுவலியும் ஜுரமும் அவர்கள் போட்ட டிரிப்ஸிலே வெகுவாக குறைந்து விட்டது.

ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்கும் போது அப்படியே கோழியைப் போல அமுக்கி மூன்று நாட்கள் அட்மிட் பண்ணி விடுவார்களோ, பர்ஸ் தாங்காதே எனும் பயம் ஒரு பக்கம், இவர்கள் பயமுறுத்துவது போல கொரோனாவாக இருக்குமோ எனும் கடுப்பு மற்றொரு பக்கம். ஆனால் ஜுரம் குறைந்ததும், நம்பிக்கை வந்து விட்டது. ஒரு மணிநேரத்தில் விட்டு விடுவோம் என்றார்கள், அப்படியே செய்தார்கள்.


இந்த சில நாட்களில் பல்லவியின் கவனிப்பும், ஜீனோவின் பாசமும் எனக்கு பெரிய ஊக்கம். என்னுடைய ஒவ்வொரு சின்னச் சின்ன உடலநலச் சரிவும் அவளுக்குப் புரியும். விரதத்தை முடித்து உணவெடுத்துக் கொள் என வற்புறுத்துவாள். என் பிடிவாதம் அதை ஒப்புக் கொள்ளாது. ஜீனோ முன்பு இல்லாத தனி அக்கறையை காட்டுவான், நான் வாந்தியெடுத்தால் அவனும் போய் வாந்தியெடுக்க முயல்வான். நான் எழுந்து உட்கார்ந்தால் உற்சாகமாகி என்னை வந்து கொஞ்சுவான். என் கால்கள் மீது படுத்துக் கொள்வான். பொதுவாக தானாக வந்து கொஞ்சும் பழக்கம் அவனுக்கு இல்லை. எனக்கு ஏதோ பிரச்சனை, என்னைத் தேற்ற வேண்டும் என நினைத்து இதையெல்லாம் செய்கிறான் எனப் புரிந்து கொண்டேன். ஆஸ்பத்திரியிலும் வார்டுக்கு வெளியிலே, வாயிலில் விழிபதித்து, அமர்ந்திருந்தான். பல்லவி மருத்துவரிடம் சிறப்பு அனுமதி அளித்து என் படுக்கைக்கு அவனைத் தூக்கி வந்தாள். அவனைத் தடவினேன். நக்கிக் கொடுத்து வாலாட்டினான். அவ்வளவுதான். அவனை நான் ‘நடிகர் திலகம்’ என்றுதான் அழைப்பேன். என்னிடம் அமைதியாக நடந்து கொள்வான், என்னைத்தவிர பிறரிடம் அநியாயத்துக்கு உணர்ச்சிகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவான். 

வீட்டுக்கு வந்து படுத்ததும் தூங்கினது தான், தூங்கினதே தெரியாத தூக்கம். காலையில் சாப்பிட்டு விட்டு மீண்டும் அப்படியொரு உடம்பை மறந்தொரு தூக்கம். ஜுரம் குறைவதன் அறிகுறி என் ரத்த சர்க்கரை குறைந்து நார்மலாவதுதான். அடுத்து, சாப்பிட, படிக்க, டி.வி பார்க்க முடிகிறது. ஆனால் இந்த ஜுரம் கண்ணாமூச்சி ஆடுகிறது, பெருமளவு அறிகுறிகள் குறைந்து விட்டாலும், உள்ஜுரம் விட்டு விட்டு வருகிறது. இதற்கு மேல் இந்த பிஞ்சு உடலைப் படுத்துவதில் ஜுரத்திற்கு எந்த பெருமையும் இல்லை எனக் கூற விரும்புகிறேன். அதற்கு களமாட  எத்தனையோ 56 அங்குல மார்பு கொண்டோர் இருக்கிறார்கள். 


கிடைத்த பாடம்: இனி எந்த முயற்சியிலும் முறையான தயாரிப்பு இன்றி குதிக்கக் கூடாது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...