Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு இறைமறுப்பாளன் பண்டிகைகளின் போது வாழ்த்தலாமா?

சதுர்த்தி, தீபாவளி மட்டுமல்ல கிறித்துமஸ், ஈகைப் பண்டிகை போன்றவற்றுக்கும் முற்போக்காளர்கள் வாழ்த்துவது தவறு! அது நோய்க்கூறை பழித்து விட்டு நோயை வணங்குவது போலாகும்.
இச்சமூகத்திலுள்ள சாதி, பாலின, பொருளாதாரம் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகள், பேதங்கள் அனைத்தும் இறைநம்பிக்கையில் இருந்தே விளைகின்றன. பல்வேறு அதிகார அமைப்புகள் முன் மனிதன் வக்கற்றவனாக கைக்கட்டி நிற்க, அவன் தன்னம்பிக்கை இல்லாதவனாக குடும்பத்தின் அடிமையாக மாறி நிற்கக் காரணமும் இறைநம்பிக்கையே.

இறைவனுக்கும் சமூக அநீதிகளுக்குமான (சூழலியல் அழிவுக்குமான கூட) தொடர்பு என்பது இறை எனும் புள்ளியில் இருந்தே மனிதன் ஒவ்வொன்றையும் essentialize செய்யத் தொடங்கினான் என்பதில் இருக்கிறது. இறைவனில் இருந்தே சமூகப் படிநிலை, அடிமைமுறை, ஆண்-பெண் பேதம், குடும்ப அமைப்பு, முதலீட்டியம், அங்கிருந்து சமூக அரசியல் கட்டமைப்புகள், தேசம், தேசியம், இனவாதம் (இந்தியாவில் தீண்டாமை போன்றவை), தேசியவாதம், பாசிசம், இந்துத்துவா என அனைத்தும் தோன்றின. 
நம்மில் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ஒரு முள்ளைப் போல் இருக்கும் குற்றவுணர்வு, பயம், தாழ்வுணர்வு, அதன் விளைவான பாலியல் குற்றங்கள், கொலை உள்ளிட்ட குற்றங்கள், அவற்றின் மறுபக்கமாக விளங்குகிற மன அழுத்தம் போன்ற நோய்களும் அங்கிருந்தே தோன்றின. உளவியல் மட்டுமல்ல உடல் பிரச்சனைகளுக்கும் காரணம் நாம் இந்த உடலை essentialize செய்ததே. ஆனால் இந்த உண்மையை மறைக்க மருத்துவம் எனும் துறை தோற்றுவிக்கப்பட்டது, மருத்துவர்களின் சகோதரர்களாக ராணுவங்கள், காவல்துறையினர் தோன்றினர் - ஒரு சாரார் தேசத்துக்கு வெளியே யுத்தம் செய்தால் மற்றவர்கள் தேசத்தினுள் மக்களையே விரோதிகளாய் பாவித்து துணுக்குற வைத்தார்கள். ராணுவத்தினர் மற்றமையை தேச விரோதியாக்கி நம்மை தேசபக்தர்களாக கருத வைத்தால், காவலர்கள் மக்களை குற்றவாளிகளாக்கி பரஸ்பரம் ஐயம் கொண்டு பிரிந்து கிடக்க செய்தனர்.
 இறைநம்பிக்கையை உடைக்காமல் இதில் எதையும் சரி செய்ய முடியாது. 

இறைவனை வணங்குகிறேன் எனும் இடத்தில் இருந்தே எனக்கும் வாழ்வுக்குமான, எனக்கும் காலத்துக்கும், உலகுக்கும், சமூகத்துக்குமான உடைவு, அதனாலான எதிர்வு தோன்றி விடுகிறது. அதற்கு மேல் இந்த வாழ்வை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியாமல் போய் விடுகிறது. (ஹைடெக்கர் இதைப் பற்றி ஆழமாகப் பேசி இருக்கிறார்). இறை எதிர்ப்பு என்பது மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு மட்டுமல்ல, அது ஒரு ஆழமான தத்துவ நிலைப்பாடு. இறை நம்பிக்கை என்பது வாழ்வின் மீதான அவநம்பிக்கை, அதன் ஆழமான தளத்தில். 

 மதத்தையும் இறைநம்பிக்கையையும் குழப்புகிறேன் என சொல்லாதீர்கள், ரெண்டுமே ஒன்றுதான். புத்தர் நமக்கு என்ன சொல்லித் தந்தார், எதையுமே உடை, சுக்குநூறாக உடை, ஒன்று சேர்த்து அர்த்தம் கொள்ளத்தக்க உருவகமாக்காதே என. 
நம்மால் அவ்வழி நிற்க முடியவில்லை என்பதே இன்று மானுட குலம் அனுபவிக்கும் அத்தனை இழிவுகளுக்கும் ஆதாரக் காரணம்.
 பெரியாரின் அனார்க்கிஸம் சொல்வதும் இதையே. அது பிடிக்கவில்லை எனில் நீங்கள் நீட்சேயிடம் செய்யலாம். கர்த்தரைக் கொண்டு இந்த உலகை எப்படி போலியான விழுமியங்களால், இரக்கம், கனிவு, பணிவு சரி-தவறு எனும் ரெட்டை நாவுப் பேச்சால் கட்டமைத்தார்கள் இறையியலாளர்கள், இவற்றின் பின்னால் ஒளிந்திருப்பது காலம் மீதான, நீதி, நிஜம் மீதான அச்சமே  என அவர் செறிவான தத்துவப் பின்புலத்தில் அம்பலப்படுத்தினார்.

இந்த காரணத்தாலே எந்த பண்டிகையின் போதும் நான் வாழ்த்துவதில்லை. சமூகநீதி பேசுவோரும் இதைப் பின்பற்றுவதே தகும். இல்லாவிட்டால் அது பச்சைப் பாசாங்காகி விடும். (திமுகவினரின் தவறு இது)

வெகுஜனத்தின் நம்பிக்கைகளை பழித்தலாகாது என்பது வேறு, அதை வணங்கி வாழ்த்துவது வேறு. முதலாவது நாகரீகம், இரண்டாவது போலித்தனம். 

ஒரு பக்கம் இஸ்லாமிய, கிறித்துவப் பண்டிகைகளில் பங்கேற்று கைநனைத்து விட்டு இந்து நம்பிக்கைகளை பழிப்பதும் பாசாங்கே. (திகவினரின் தவறு இது)

எனக்கு இறைநம்பிக்கை இல்லை, அதனால் நான் வழிபட மாட்டேன், நீங்க வழிபடுவதிலும் இடைநிற்க மாட்டேன்  ... என இழுபதும் பயனற்றது. இறைநம்பிக்கை ஏதோ சப்பாத்தியா, தோசையா தேர்வு போலாகி விடுகிறது. (நடுநிலையாளர்களின் தவறு இது)
நீதிக்கும் அநீதிக்கும் இடையில் தேர்வே இல்லை.

மாறாக, நம்பாததன் காரணத்தை சொல்லி நம்பிக்கையாளர்களிடம் விவாதித்து பரிவுடம் விளக்க வேண்டும். ஒருவர் கண்ணீர் விட்டு அழும் போது, அவமானத்தில் குறுகும் போது இதற்குக் காரணம் உன் இறைநம்பிக்கையே என புரிய வைக்க முயல வேண்டும். 

 இறைமறுப்பாளர் தன்னை அறத்தின் பாலானவன் என நம்ப வேண்டும். 'இருக்கு ஆனா இல்ல' என ஜல்லியடிக்கக் கூடாது. வாழ்த்துவது, பம்முவது, புனித நூல்களில் செக்ஸை அம்பலப்படுத்துகிறேன் என்றெல்லாம் குழப்பக் கூடாது. இறைமறுப்பை அநீதி மறுப்பாக, அதிகார எதிர்ப்பாக அவர் முன்வைக்க வேண்டும்!

ஆகையால் நண்பர்களே, கொழுக்கட்டை சாப்பிடுவோம், அது ஆரோக்கியமான உணவு. ஆனால் பிள்ளையார் என்றில்லை எவரையும் வணங்க வேண்டாம்.

Comments

No mean No for every religion I like this Approach.this is the honest approach. Same Time if you follow a Religion give the same Respect to Other Religion also

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...