Skip to main content

ஒரு இறைமறுப்பாளன் பண்டிகைகளின் போது வாழ்த்தலாமா?

சதுர்த்தி, தீபாவளி மட்டுமல்ல கிறித்துமஸ், ஈகைப் பண்டிகை போன்றவற்றுக்கும் முற்போக்காளர்கள் வாழ்த்துவது தவறு! அது நோய்க்கூறை பழித்து விட்டு நோயை வணங்குவது போலாகும்.
இச்சமூகத்திலுள்ள சாதி, பாலின, பொருளாதாரம் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகள், பேதங்கள் அனைத்தும் இறைநம்பிக்கையில் இருந்தே விளைகின்றன. பல்வேறு அதிகார அமைப்புகள் முன் மனிதன் வக்கற்றவனாக கைக்கட்டி நிற்க, அவன் தன்னம்பிக்கை இல்லாதவனாக குடும்பத்தின் அடிமையாக மாறி நிற்கக் காரணமும் இறைநம்பிக்கையே.

இறைவனுக்கும் சமூக அநீதிகளுக்குமான (சூழலியல் அழிவுக்குமான கூட) தொடர்பு என்பது இறை எனும் புள்ளியில் இருந்தே மனிதன் ஒவ்வொன்றையும் essentialize செய்யத் தொடங்கினான் என்பதில் இருக்கிறது. இறைவனில் இருந்தே சமூகப் படிநிலை, அடிமைமுறை, ஆண்-பெண் பேதம், குடும்ப அமைப்பு, முதலீட்டியம், அங்கிருந்து சமூக அரசியல் கட்டமைப்புகள், தேசம், தேசியம், இனவாதம் (இந்தியாவில் தீண்டாமை போன்றவை), தேசியவாதம், பாசிசம், இந்துத்துவா என அனைத்தும் தோன்றின. 
நம்மில் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ஒரு முள்ளைப் போல் இருக்கும் குற்றவுணர்வு, பயம், தாழ்வுணர்வு, அதன் விளைவான பாலியல் குற்றங்கள், கொலை உள்ளிட்ட குற்றங்கள், அவற்றின் மறுபக்கமாக விளங்குகிற மன அழுத்தம் போன்ற நோய்களும் அங்கிருந்தே தோன்றின. உளவியல் மட்டுமல்ல உடல் பிரச்சனைகளுக்கும் காரணம் நாம் இந்த உடலை essentialize செய்ததே. ஆனால் இந்த உண்மையை மறைக்க மருத்துவம் எனும் துறை தோற்றுவிக்கப்பட்டது, மருத்துவர்களின் சகோதரர்களாக ராணுவங்கள், காவல்துறையினர் தோன்றினர் - ஒரு சாரார் தேசத்துக்கு வெளியே யுத்தம் செய்தால் மற்றவர்கள் தேசத்தினுள் மக்களையே விரோதிகளாய் பாவித்து துணுக்குற வைத்தார்கள். ராணுவத்தினர் மற்றமையை தேச விரோதியாக்கி நம்மை தேசபக்தர்களாக கருத வைத்தால், காவலர்கள் மக்களை குற்றவாளிகளாக்கி பரஸ்பரம் ஐயம் கொண்டு பிரிந்து கிடக்க செய்தனர்.
 இறைநம்பிக்கையை உடைக்காமல் இதில் எதையும் சரி செய்ய முடியாது. 

இறைவனை வணங்குகிறேன் எனும் இடத்தில் இருந்தே எனக்கும் வாழ்வுக்குமான, எனக்கும் காலத்துக்கும், உலகுக்கும், சமூகத்துக்குமான உடைவு, அதனாலான எதிர்வு தோன்றி விடுகிறது. அதற்கு மேல் இந்த வாழ்வை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியாமல் போய் விடுகிறது. (ஹைடெக்கர் இதைப் பற்றி ஆழமாகப் பேசி இருக்கிறார்). இறை எதிர்ப்பு என்பது மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு மட்டுமல்ல, அது ஒரு ஆழமான தத்துவ நிலைப்பாடு. இறை நம்பிக்கை என்பது வாழ்வின் மீதான அவநம்பிக்கை, அதன் ஆழமான தளத்தில். 

 மதத்தையும் இறைநம்பிக்கையையும் குழப்புகிறேன் என சொல்லாதீர்கள், ரெண்டுமே ஒன்றுதான். புத்தர் நமக்கு என்ன சொல்லித் தந்தார், எதையுமே உடை, சுக்குநூறாக உடை, ஒன்று சேர்த்து அர்த்தம் கொள்ளத்தக்க உருவகமாக்காதே என. 
நம்மால் அவ்வழி நிற்க முடியவில்லை என்பதே இன்று மானுட குலம் அனுபவிக்கும் அத்தனை இழிவுகளுக்கும் ஆதாரக் காரணம்.
 பெரியாரின் அனார்க்கிஸம் சொல்வதும் இதையே. அது பிடிக்கவில்லை எனில் நீங்கள் நீட்சேயிடம் செய்யலாம். கர்த்தரைக் கொண்டு இந்த உலகை எப்படி போலியான விழுமியங்களால், இரக்கம், கனிவு, பணிவு சரி-தவறு எனும் ரெட்டை நாவுப் பேச்சால் கட்டமைத்தார்கள் இறையியலாளர்கள், இவற்றின் பின்னால் ஒளிந்திருப்பது காலம் மீதான, நீதி, நிஜம் மீதான அச்சமே  என அவர் செறிவான தத்துவப் பின்புலத்தில் அம்பலப்படுத்தினார்.

இந்த காரணத்தாலே எந்த பண்டிகையின் போதும் நான் வாழ்த்துவதில்லை. சமூகநீதி பேசுவோரும் இதைப் பின்பற்றுவதே தகும். இல்லாவிட்டால் அது பச்சைப் பாசாங்காகி விடும். (திமுகவினரின் தவறு இது)

வெகுஜனத்தின் நம்பிக்கைகளை பழித்தலாகாது என்பது வேறு, அதை வணங்கி வாழ்த்துவது வேறு. முதலாவது நாகரீகம், இரண்டாவது போலித்தனம். 

ஒரு பக்கம் இஸ்லாமிய, கிறித்துவப் பண்டிகைகளில் பங்கேற்று கைநனைத்து விட்டு இந்து நம்பிக்கைகளை பழிப்பதும் பாசாங்கே. (திகவினரின் தவறு இது)

எனக்கு இறைநம்பிக்கை இல்லை, அதனால் நான் வழிபட மாட்டேன், நீங்க வழிபடுவதிலும் இடைநிற்க மாட்டேன்  ... என இழுபதும் பயனற்றது. இறைநம்பிக்கை ஏதோ சப்பாத்தியா, தோசையா தேர்வு போலாகி விடுகிறது. (நடுநிலையாளர்களின் தவறு இது)
நீதிக்கும் அநீதிக்கும் இடையில் தேர்வே இல்லை.

மாறாக, நம்பாததன் காரணத்தை சொல்லி நம்பிக்கையாளர்களிடம் விவாதித்து பரிவுடம் விளக்க வேண்டும். ஒருவர் கண்ணீர் விட்டு அழும் போது, அவமானத்தில் குறுகும் போது இதற்குக் காரணம் உன் இறைநம்பிக்கையே என புரிய வைக்க முயல வேண்டும். 

 இறைமறுப்பாளர் தன்னை அறத்தின் பாலானவன் என நம்ப வேண்டும். 'இருக்கு ஆனா இல்ல' என ஜல்லியடிக்கக் கூடாது. வாழ்த்துவது, பம்முவது, புனித நூல்களில் செக்ஸை அம்பலப்படுத்துகிறேன் என்றெல்லாம் குழப்பக் கூடாது. இறைமறுப்பை அநீதி மறுப்பாக, அதிகார எதிர்ப்பாக அவர் முன்வைக்க வேண்டும்!

ஆகையால் நண்பர்களே, கொழுக்கட்டை சாப்பிடுவோம், அது ஆரோக்கியமான உணவு. ஆனால் பிள்ளையார் என்றில்லை எவரையும் வணங்க வேண்டாம்.

Comments

No mean No for every religion I like this Approach.this is the honest approach. Same Time if you follow a Religion give the same Respect to Other Religion also

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...