தாய்மொழியை ஒருவர் எப்படி இப்படி வினோதமாய், எந்த வட்டார, செவ்வியல் சாயலும் இல்லாமல் பேச முடியும்? வெளிநாடுவாழ் தமிழர்கள் கூட இப்படி நம் அண்ணாமலையைப் போல ஜுனூன் தமிழ் பேசுவதில்லையே.
அதாவது தப்பாக தமிழைப் பேசும் தமிழர்கள் உண்டு, தலைவர்கள் உண்டு. தமிழ், தமில், வலர்ச்சி எனப் பேசுபவர்கள் உண்டு. 'என்ன' என்பதை 'இன்ன' என்பார்கள். 'அவங்க' என்பது எங்கள் ஊரில் 'அவிய' தான். வட்டார வழக்குக்குள் இதெல்லாம் ஒருவித அழகு. ஏனென்றால் ஒரு மக்கள் கூட்டமே அப்படிப் பேசுகிறது, அதற்கு ஒரு பண்பாட்டுப் பரிமாணம் உண்டு.
தமிழை இலக்கண சுத்தமாகப் பேசக் கோரவில்லை நான்.
ஆனால் அண்ணாமலை பேசுவது எந்த வட்டார வழக்கிலும் இல்லை. அவரைப் போல யாரும் "மாற்றத்தை" "மாட்டம்" எனச் சொல்லிக் கேட்டதில்லை. இது உச்சரிப்பு பிரச்சனையும் இல்லை. பேச்சின் தொனியில் ஏதோ ஒரு தாய்மொழி / அந்நிய மொழித்தாக்கம் தெரிகிறது. அதுதான் எதுவெனத் தெரியவில்லை.
ரஜினி பேசும் போது அதிகமாகவும், பிரகாஷ்ராஜிடம் சற்று குறைவாகவும் இந்த மாற்றுமொழித் தாக்கம் உச்சரிப்பில் தெரியும். அவர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார் என்பது தெரியும். கர்நாடக்காரர்கள். ஆனால் இந்த ஊரிலேயே பிறந்த அண்ணாமலை ஏன் அப்படிப் பேசணும்?
Comments