Skip to main content

தத்துவ வாசிப்பு - செய்ய வேண்டியதும் கூடாததும்


என்னவென்று தெரியவில்லைஇரண்டு பேர் ஒரே சமயம் இன்பாக்ஸில் என்னிடம் இமானுவல் காண்டைவாசிப்பதைப் பற்றிக் கேட்கிறார்கள்ஒரு பக்கம் ஆச்சரியம்மறுபக்கம் மகிழ்ச்சிமுகநூல் வந்த பிறகு தான்மேற்கத்திய தத்துவம் படிக்க விரும்புகிற சிலரையாவது தமிழில் சந்திக்கிறேன்ஹபீப் ஹாதி எனும் ஒரு நண்பர்இமானுவல் காண்ட்

குறித்து தமிழில் ஏதாவது புத்தகம் வந்துள்ளதா எனக் கேட்டார்எனக்குத் தெரியவில்லைமுகநூல் நண்பர்கள்தெரிந்தால் சொல்லவும்!


அடுத்து ஒரு நண்பர்ராஜ் லஷ்மணன்இப்படிக் கேட்டிருக்கிறார்:


“Sir, I don't have any introduction to philosophy other than knowing a brief version of some philosophers mill, Locke, kant. Where should I start my philosophical reading, would it be good if I start with kant. Thanks in advance sir.”


என் பதில் இது:


1) தத்துவம் வாசிப்பதற்கும்இலக்கியம் வாசிப்பதற்கும் முறைமைகள் ஒன்றே - ஒன்று வரலாற்று ரீதியாகஒழுங்குவரிசையில் படிக்கலாம்மேற்கத்திய தத்துவம் என்றால் சாக்ரடீஸில் இருந்து துவங்கலாம்மூலநூல்வாசிப்பே சிறந்ததுஏனென்றால் அறிமுக நூல்கள் படித்தால் அவை தரும் கண்ணோட்டத்தின் வழியே ஒருதத்துவத்தை தொகுக்கத் தோன்றும்இருந்தாலும் ஒரு ஆறுதலுக்காகதன்னம்பிக்கையை பெறுவதற்காக Very Short Introduction போன்ற தொடர்களில் இருந்து ஒன்றை எடுத்து படிக்கலாம்ஆனால் மூலநூலைப் படிக்கும்போது பெரும்பாலும் இந்த மிகச்சுருக்க அறிமுகங்கள் சொல்வது தவறு எனத் தோன்றும்இதைத் தவிர்க்கமுடியாது.


2) வரலாற்று ரீதியாக என்றேனே அதற்கென தத்துவ வரலாறு நூல்கள் பல உள்ளனஜாலியான வாசிப்புக்கு வில்டியூரெண்டை சொல்லலாம்சுருக்கமானதர்க்க ரீதியான அறிமுகத்துக்கு பெர்ண்ட்னெண்ட் ரஸலின் தத்துவவரலாற்றை பரிந்துரைக்கலாம்என் இளமையில் நான் ரஸலை கிட்டத்தட்ட வழிபட்டே வந்தேன்அவர் காட்டும்கெத்துபோகிற போக்கில் சிலரை புறமொதிக்கி செல்வதுஸ்டைலான மொழிரத்தினச் சுருக்கமாகப் பேசுவதுஎன்னைக் கவர்ந்தனஆனால் ரஸலின் எழுத்தில் உள்ள குறைகள் பின்பே எனக்கு விளங்கியதுரஸல் ஒருபொருண்மைவாதிஅவரது கண்ணோட்டத்துக்கு ஒத்து வராத தத்துவ அறிஞர்களை நமது பேஸ்புக் மேதாவிகள்செய்வதைப் போல முத்திரை குத்தி கழித்துக் கட்டி விடுவார்நீட்சேயின் பக்தர்கள் அவர் தனது History of Western Philosophyயில்  நீட்சேய்க்கு வழங்கி உள்ள அறிமுகத்தைப் படித்தால் ரத்த வாந்தி எடுப்பார்கள்அல்லது பக்கத்தில் வருகிற யாரையாவது நாலு சாத்து சாத்துவார்கள்அந்தளவுக்கு பித்துக்குளித்தனமாகஇருக்கும் அதனால் ரஸல் எனும் பிள்ளையாரை முச்சந்தியில் போட்டு உடைத்து விட்டேன்அவரை நான்அதிகமும் பரிந்துரைப்பதில்லை.


3) சரி எந்த வரிசையில் படிப்பதுஎப்படியும் படிக்கலாம்சாக்ரடீஸ்பிளேட்டோஅரிஸ்டாட்டில் என எடுத்துக்மொண்டாலே அணுகுமுறைகண்டுபிடிப்புகள்தர்க்கத்தை பயன்படுத்தும் விதத்தில் அவ்வளவு வித்தியாசங்கள்அவர்களுக்கு இடையில் ஒரு தொடர்ச்சியை கண்டுபிடித்து ஒரு வரலாற்றை கற்பனை செய்யலாம்எனக்குஇந்த வகை வாசிப்பில் உடன்பாடில்லைபௌத்தத்துக்கும் அத்வைதத்துகுமானநாகார்ஜுனருக்கும்தெரிதாவுக்குமான ஒற்றுமைகளைத் தேடுவதைப் போன்ற வியர்த்தமான செயல் இதுஆகையால் வரிசையாகப்படித்தாலும் ஒவ்வொரு அறிஞரையும் தனித்துவமாக கண்டு படித்தாலே ஆழமாய் போக முடியும் என்பதே என்நம்பிக்கை


4) மூலநூலைப் படித்தால் புரியுமா?

அது உங்கள் முதிர்ச்சியைப் பொறுத்ததுஅதாவது பயிற்சி அல்லமுதிர்ச்சிநான் ஏற்கனவே சொன்னதைப்போல அரிஸ்டாட்டிலை நன்கு வாசித்துப் பயின்றால் அதை வைத்து சாக்ரடீஸையோ ஹைடெக்கரையோபுரிந்து கொள்ள முடியாதுஆனால் வாழ்க்கையை குறித்து ஆழமாய் அந்த நூல்களைக் கொண்டு வாசிக்கத்தெரிய வேண்டும்தொடர்ந்து தீவிரமாக தத்துவத்தை பரிசீலிக்கும் மனம் அமைப்பு வேண்டும்நான் பதின்வயதில் இருந்தே தத்துவத்தில் கால்களை அளைந்து வருகிறேன் என்றாலும் எனக்கு அந்த முதிர்ச்சி வரநாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டதுஆனால் என்னுடைய மாணவனான ஆயுஷுக்கு அது 20 வயதிலேயேஅமைந்து விட்டதுஅவன் என்னுடன் இணைந்து ஹைடெக்கர் குறித்து நூல் எழுதினான்இப்போது நாங்கள்நாகார்ஜுனரைப் பற்றி ஒரு நூலை எழுதி வருகிறோம்அவன் வயதில் எனக்கு அந்த முதிர்ச்சி சத்தியமாகஇல்லைநான் அப்போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டும்பெண்களைப் பற்றி கவலைப்படும் கொண்டும்அவ்வப்போது இலக்கிய கிரீடத்தை தனிமையில் சூடிப் பார்த்துக் கொண்டும் இருந்தேன்

நான் சாக்ரடீஸை அன்று படித்த போது அவரது வாதத்திறன் என்னைக் கவர்ந்ததுஇரு பத்தாண்டுகளுக்க்குப்பிறகு படித்த போது அவர் ஒரு சூன்யவாதிபின்நவீன விளையாட்டுக்காரர்களுக்கி இணையானவர் எனப்புரிந்ததுநீட்சேயை அப்போது படித்த போது அந்த கவித்துவத்தில் சொக்கிப் போனேன்ஆனால் தொடர்ந்துவாசிக்க வாசிக்கவே அவரது சொற்களுக்குப் பின்னுள்ள அரசியல் விளங்கியதுஅவர் விளக்குகிற இருப்பு மீதுவெளிச்சம் விழுந்தது.

ஆகையால்வயதுக்கும் தத்துவ வாசிப்புக்கும்உங்கள் முதிர்ச்சிக்கும் சம்மந்தமில்லதகவல் அறிவுபகுத்தறிவுபோன்றவையும் தத்துவத்துக்கு உதவாதுநீங்கள் தானாய் கனிய வேண்டும்அதுவரை சும்மா வாசித்துக்காத்திருங்கள்.


5) அடுத்துஎல்லா தத்துவங்களையும் ஒரே தட்டில் வைத்து படிக்காதீர்கள்உங்கள் மன அமைப்புக்கு ஏற்றதேடலுக்கு விடை தருகிற சிலர் இருப்பார்கள்உங்கள் மனம் அவர்களை நோக்கி அதிகமாய் ஈர்க்கப்படும்அவர்களையும் அவர்களைப் போன்றோரையும் அதிகமாய்ப் படியுங்கள்அங்கிருந்து உங்களை ஈர்க்கிறஉங்களுக்கு முக்கியமான தத்துவப்பள்ளியை அடையாளம் காணுங்கள்.தா., நான் ஆரம்பத்தில்அத்வைதத்தை படிக்க முயன்றேன்ஆனால் பௌத்தம் - சூனியவாதம் - படிக்கும் போது கிடைக்கும் உற்சாகம்மகிழ்ச்சிஅறிவுக்கிளர்ச்சி எனக்கு அத்வைதம் பற்றி வாசிக்கும் போது இல்லைஏனென்றால் நான் இயல்பில்ஒரு மறுப்புவாதிஒன்றை கட்டி எழுப்புவதை விட உடைத்து எறிவதில் களிப்பு அடைகிறவன்எனக்கு ஏற்றவர்நாகார்ஜுனரேநான் அவரை தெரிதாடெலூஸ் போன்றோர் வழி எதேச்சையாய் கண்டடைந்தேன்ஆனால்நீங்கள் அம்பேத்கர் வழி பௌத்தத்துக்குள் வந்தால் அது வேறொன்றாக இருக்கும்அதே போல கடந்தபத்தாண்டில் நான் அதிகமும் விரும்பி வாசித்தது ஜெர்மானிய தத்துவவாதிகளையே என அண்மையில்சட்டெனத் தோன்றியதுஅப்படி அமைந்து விட்டதுஉங்களுக்கு இதைப் போல கீழைத்தேய தத்துவங்கள்பிரஞ்சு தத்துவம்அல்லது ஆங்கிலேய தத்துவ மரபுடனோ ஒரு தொப்புள் கொடி உறவிருக்கலாம்


 அடுத்துஉங்கள் பாதை பொருண்மைவாதம்பொருள்முதல்வாதம் என்றால் மெய்யியல்இருத்தலியம் அதன்அசலான அமைவில் உங்களுக்கானது அல்லஉலகமும்அதன் இருப்பும் சாரமானது என உங்கள் அனுபவங்கள்கற்றுத் தந்தால் பின்நவீன காலத்து தத்துவமோசூன்யவாத பௌத்தமோ உங்களுக்கு ஏற்றது அல்லநீங்கள்தட்டுத்தடுமாறி வைதீகத்தின் வாசல் கதவை நள்ளிரவில் தட்டுவீர்கள்.


 அதாவது தத்துவ வாசிப்பை அகம்-புறம் என ஒரு வசதிக்காக பிரிப்பார்கள்இதில் நீங்கள் ஒன்றைஇதயபூர்வமாக தேர்ந்து கொள்ள வேண்டும்அடுத்து அகமும் புறமும் ஒன்றே எனும் மூன்றாவது தரப்புக்கு வந்துசேரலாம்அல்லது இரண்டாவதுடனே நின்று கொள்ளலாம்உங்கள் வாழ்க்கைப் பார்வையில் இருந்துதத்துவத்தை பிரித்து பார்க்கலாகாதுஇது முக்கியம்.


  1. அடுத்ததுமதத்தையும் தத்துவத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாதுசில அருமையான தத்துவவாசிப்பாளர்கள் மதத்தின் சகதிக்குள் மாட்டிக் கொள்வதைக் கண்டு வருந்தி இருக்கிறேன்கத்தோலிக்கநம்பிக்கைகளுக்கு இணங்காத தத்துவங்களைப் படிக்க மறுக்கும் அறிஞர்களைக் கண்டிருக்கிறேன்அதேபோலத் தான் வைதீகமும்கோவை ஞானி ஒரு பயிற்சி பெற்ற தத்துவ வாசிப்பாளர் அல்ல என்றாலும்அவர்தன் வாழ்நாள் முழுக்க கடவுள் என்கிற ஒரு சாரத்தை விட்டு வெளியேற முடியாமல் திணறியதைஅதற்குள்மார்க்ஸியத்தைதமிழ் தேசியத்தைஇலக்கியத்தை பொருத்த முயன்று ஆயுளை வீணடித்ததைப் பற்றிமுன்பு எழுதியிருந்தேன்ஒரு சிந்தனையாளன் இப்படி மரபின் காவலனாக இருக்கக் கூடாது. “மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்”, “மரபுக்கேற்ற மார்க்ஸியம்” என்றெல்லாம் கிளிஜோஸியம் காட்டக் கூடாது. அவன்கட்டுத்தளைகளை அறுத்தெறியும் தேடல் கொண்டிருக்க வேண்டும்நிரூபித்தல்களை மறுப்பதேதத்துவத்தின் நோக்கம் என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும்அதாவது தத்துவத்துக்குள் நமது அறிவின் பாரத்தைமதத்தின்சாதியின் அரசியலை கொண்டு வரக் கூடாது.
  2. இறுதியாகதனியாக வாசிக்காதீர்கள்முடிந்த அளவுக்கு கூட்டாக வாசியுங்கள்அப்போது தத்துவம்எளிதாகும்தத்துவம் என்பது நாவல் அல்லஅதை விவாதித்து விளங்கும் விதமே உருவாக்கிஇருக்கிறார்கள்பண்டைய காலத்தில் மடங்களில் அப்படித்தான் சதா வாதிட்டு மோதி தத்துவம்கற்றார்கள்இன்றும் திபெத்திய பௌத்த மரபில் இப்போக்கு உள்ளதுஆகையால் உங்களுக்காக reading buddyவாசிப்புத் துணைவனைக் கண்டுபிடியுங்கள்பரஸ்பரம் கேள்விகளைக் கேட்டு விவாதித்துஉங்களுக்குள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடிபடியுங்கள்.

வாழ்த்துக்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...