Skip to main content

விஷ்ணுபுரம் ஒரு ஆர்.எஸ்.எஸ் நாவலா?

இந்த கேள்விக்குள் போகும் முன் முகநூலில் இதைப் பற்றி 'காலச்சுவடு' கண்ணன் எழுதியுள்ளதை பகிர்கிறேன்:

"முப்பது வருடங்களிருக்கும். வீட்டு மொட்டைமாடியில் ஒரு 
நார்க்கட்டிலில் அமர்ந்தபடி ஜெயமோகனுடன் பேசிக்
கொண்டிருக்குதேன். சரியாகச் சொல்வதென்றால் 
பேசக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடன் அதிகப் பழக்கம் இல்லாத காலகட்டம் (கடைசிவரை ஒட்டவில்லை என்பது வேறு செய்தி). ராமஜென்மபூமி இயக்கம் பற்றி உணர்ச்சிப்பிழம்பாக பேசிக்கொண்டிருந்தார். என் அசுவாரசியம் முகத்திலேயே வழிந்திருக்க வேண்டும். எனவே என்னைப்போன்ற 'மேற்கத்தியச் சிந்தனை' 
மரபினர்மீது கொஞ்சேநேரம் பொழிந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் 
தனக்கு வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவது இன்றும் ஒரு உணர்வுபூர்வமான விஷயம்தான் என்றார். அப்படிப்பேசும் ஒரு தமிழ் எழுத்தாளரை அப்போதுதான் 
முதலில் பார்த்தேன். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர்தான்  இப்போதும் இருக்கிறார். 


ராமஜென்மபூமி இயக்கம் உருவாகியிராவிட்டால் ஜெயமோகனின் 
படைப்புலகின் ஒரு முக்கியக் கூறு  உருப்பெற்றிருக்காது.  அல்லது இப்படிச் சொல்லலாம். ராம ஜென்ம பூமி இயக்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் 'இந்து எழுச்சி'யின்  வழி உருவான மனம்தான் 'இந்திய ஞான மரபு' என்பதான படைப்புலகை உருவாக்கியது. எனவேதான் அதற்குத் தமிழில் முன்னோடிகள் யாருமில்லை. 
ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வேறுயாரும் தமிழ் இலக்கியத்திற்கு வரவில்லை என்பதால் பின்னோடிகளுமில்லை. 

கார்கில் யுத்தமும் அதை பாஜக அரசு தேசியவெறியாக வளர்த்தெடுத்த லாவகமும் நடந்திராவிட்டால் ஜெயமோகன் எனும் சமூக அரசியல் கருத்தாளருக்கு அத்தலைமுறையில் விசிறிகள் உருவாகியிருக்கமுடியாது. IPKF இலங்கையில் யாரையும் வன்பாலுறவு செய்யவில்லை 
என்பதையோ இந்தியாவுக்கு எதிரான மதச் சிறுபான்மையினரின் சதிகளைப் பற்றிய பினாத்தல்களையோ செரிக்க தேசிய வெறி இருத்தல் வேண்டும். (இதற்கும் தேசப்பற்றுக்கும் சம்பந்தமில்லை).  
 
பெண்ணியம், தலித்தியம், இடதுசாரிக் கருத்தியல் சார்ந்து சிலர்
கவனம்பெற்றுவிடுவதாக ஆக்ரோஷப் பதிவுகளைப் பார்க்கும்போது 
இதை நினைவில் கொள்க. 

விஷ்ணுபுரம் நாவலின் அச்சாக்கத்திற்கும் விநியோகத்திற்கும் 
ஆர்.எஸ்.எஸ். நேரடியாக உதவிசெய்தது. இதுபற்றி இன்னொரு 
சந்தர்ப்பத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளைப்  பார்க்கலாம்."

அடுத்து என் எதிர்வினை:

ஜெயமோகனுக்குள் ஒரு சங்கி உண்டு, ஆனால் சங்கிகளை ஏற்காத தரப்புகளும் அவருக்குள் உண்டு. நிறைய உள்முரண்கள் கொண்ட படைப்பாளி அவர். ஜெயமோகன் இந்து தேசியவாதத்தைக் கடந்து எவ்வளவோ எழுதி இருக்கிறார். அவரை கண்ணன் இப்படி ஒரு இந்துத்துவ புனைவெழுத்தாளராக  சுருக்குவது அநீதி. 

 மேலும், கண்ணன் குற்றம் சாட்டுவதைப் போல "விஷ்ணுபுரம்" ஒன்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சார நாவல் அல்ல. (அது எப்படி வெளியிடப்பட்டது என்பது வேறு கதை) அது இந்திய சுதந்திரத்துக்குப் பின்பான அரசியல் மாற்றங்களை ஒரு நீதிக்கதையாக (parable) முன்வைக்கிற, இந்து, தத்துவ மரபுகளின் மோதல்களை, தத்துவ இயக்கத்தின் சாரமின்மையை மார்க்வெஸின் "நூற்றாண்டுகளின் தனிமை" நாவலின் பாணியில் சித்தரிக்கிற, மிக முக்கியமாக மானுட இருப்பு குறித்து கவித்துவமான கேள்விகளை எழுப்புகிற ஒரு படைப்பு. தமிழில் அதற்கு முன்போ பின்னரோ அப்படி ஒரு இலக்கிய பிரதி உருவாகவில்லை. அவ்வளவு பெரிய சவாலை ஒரு எழுத்தாளன் துணிந்து மேற்கொண்டதில்லை. அதற்கே ஜெயமோகனுக்கு நாம் கைத்தட்டலாம்.
 இவ்விசயத்தில் கண்ணனுடன் முழுக்க மாறுபடுகிறேன். நாம் இலக்கியத்தை இப்படி அரசியல்படுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்! 
முக்கியமாக, ஒருவரைத் தாக்க அவரது படைப்புலகை பயன்படுத்தக் கூடாது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...