Skip to main content

பிரசாந்த் பூஷணும் உச்சநீதிமன்றமும்




பிரசாந்த் பூஷண் நீதிபதிகளிடம் வருமானத்துக்கு அதிகமான சொத்திருப்பதாய் குறிப்பிட்டது ஊர் உலகம் அறிந்த உண்மையே. யாருக்கும் அதை சொல்லும் துணிச்சல் இருக்கவில்லை, அதைப் பற்றி பேசுவது ஜனநாயகம் மீது நமக்குள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் ஒரு கனவாக கலையச் செய்திடுமோ எனும் பயமும் இருந்தது. ஆனால் பிரஷாந்த் பூஷண் இந்த போலித்தனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்டத்தை கலைத்து விட்டார். மற்றொரு பக்கம் அரசுத்தரப்பும் அவரைத் தண்டிப்பதை விரும்பாத நிலையில் (அது வேறொரு அரசியல்) நீதிபதிகளின் இருக்கை “தயவு செஞ்சு மன்னிப்பு கேட்டிருய்யா” எனக் கெஞ்சும் இடத்துக்கு வந்து விட்டனர். 
இதில் வினோதம் என்னவெனில் தண்டனை அளிக்கும் போது ஒருவர் குற்றவாளி ஆகிறார், ஆனால் அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டதாய் ஆவதில்லை. தண்டனை அளிப்பது ஒருவர் மீது அதிகாரத்தை நிலைநாட்டும் செயல் மட்டுமே. ஆனால் மன்னிப்பு வேண்டுவது ஒரு தற்காலிக சமத்துவத்தை நிலைநாட்டும் செயல். இன்றைய பின்-உண்மை (post-truth) சமூகத்தில் திட்டுவது, விமர்சிப்பது, மன்னிப்பு கேட்பது எல்லாம் மேம்போக்கான சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. ஒருவர் பொதுவெளியில் பாராட்டுவதும் கூட வெறும் “லைக்” பட்டனை அழுத்தும் காரியம் போல ஆகிவிட்டது.
 நீதிபதிகளின் இருக்கை எதிர்பார்ப்பது: (1) “பிரஷாந்த் பூஷன், யோவ், நீ எங்களை சமமாக நடத்துப்பா, அசிங்கப்படுத்தாதே, நான் உன் மீது தண்டனை விதிக்காம விட்டு விடுறேன்” - இது ஒரு சமரசப் பேச்சு வார்த்தை. பிரசாந்த் பூஷண் இதற்குத் தன் மனசாட்சி ஒப்புக்காது எனக் கூற, (2) “மன்னிப்பு கேட்டுடுப்பா, நீ அதை நம்பாம இருந்தாலும் பரவாயில்ல” என்கிறார்கள். ஒருவேளை பூஷண் மன்னிப்பையே கேட்டாலும், அந்த மன்னிப்புக் கோரலை நீதிபதிகளும் பொருட்படுத்த மாட்டார்கள், மக்களும் நம்ப மாட்டார்கள். ஆனால் அது status quoவை நிலைநாட்ட பயன்படும்.
இந்த நாடகத்தின் பின்னால் இவ்வளவு அவலமும் உண்டு.

(கேவலமா இல்லியா குமாரு!)

நீதிபதிகளின் இந்த அட்டூழியத்துக்கு ஒரு தீர்வு இல்லையா?
உண்டு!

நீதிமன்றத்தை மக்களின் எதிர்வினைப்படி மறுவடிவமைக்க வேண்டிய நாள் நெருங்கி விட்டது. நமக்குத் தேவை ஒரு சட்டமாற்றம்: ஒவ்வொரு வருட இறுதியிலும் ஒரு நீதிபதியின் சேவையை மதிப்பீடு செய்யும் ஒரு பணியை ஒரு பொது அமைப்பு மேற்கொள்ள வேண்டும் - அந்நீதிமன்றத்துடன் தொடர்புள்ள வக்கீல்கள், அங்கு வழக்காட, வழக்குத்தொடுக்க வந்தவர்கள், தொடுத்தவர்கள், மனித உரிமை அமைப்புகள் என போதுமக்களும் சட்டவல்லுநர்களும் ஓட்டளிக்க வேண்டும். குறைவான வாக்குகளைப் பெறும் நீதிபதி ஐந்து வருடங்களுக்கும் மிகக்குறைவான வாக்குகளைப் பெறுபவர் பத்து வருடங்களுக்கு அதிகமாகவும் நீதிபரிபாலனம் செய்யத் தடை விதிக்கப்பட வேண்டும். இந்த சட்டமாற்றம் வந்தால் இன்று தனியார் துறையில் பலரும் எதிர்கொள்ளும் பணி மதிப்பீடு முறைமை நீதித்துறையிலும் கொண்டு வரப்பட்டால், நீதிபதிகளின் ஊழல், அகந்தை, அதிகார துஷ்பிரயோகம், அடித்து துவைக்கப்பட்டவர்களை சிகிச்சையின்றி ரிமாண்ட் செய்யும் அநீதிப்போக்கு, உச்சநீதிமன்ற சங்கி நீதிவான்கள் மத்திய அரசுக்கு பூச்சொரிந்து மணியடிப்பதும், அதைக்கொண்டு பின்னர் கவர்னர் ஆக ஆசைப்படுவதும் ஒரு முடிவுக்கு வரும்.
பின்குறிப்பு: ஒருபோதும் காவல்துறையினருக்கு இந்த பணி மதிப்பீட்டு உரிமை அளிக்கப்படலாகாது. அதிகாரத் தரப்பை சேராதவர்களுக்கு மட்டுமே அது அளிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு அளிக்கலாமா?
நிச்சயமாக! தமக்கு நீதி வழங்கப்படவில்லை எனத் தோன்றினால் அவர்கள் ஏன் நீதிபதிக்கு கம்மியான ரேட்டிங் வழங்கக் கூடாது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...