Skip to main content

இந்தி தெரிந்த நடிகர்களால் ஏன் பாலிவுட்டில் சாதிக்க முடியவில்லை?

 



பல மொழித் திறன் கொண்டோரை நமக்குத் தெரியும். அவர்களால் ஏகப்பட்ட மொழிகளைப் புரியவும் அவற்றில் பேசவும் ஓரளவுக்கு முடியும். ஆனால் எந்த மொழியிலும் அவர்களுக்கு தனித்த ஆளுமையோ நிபுணத்துவமோ இராது. ஏனென்றால் ஒரு மொழியை தக்க வைக்க அதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஏழெட்டு மொழிகளில் ஒரே சமயம் அனுதினமும் உரையாடும் சூழல் பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஆகையால், தினமும் பயன்படுத்தும் ஒன்றிரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகள் காலப்போக்கில் உதிர்ந்து விடுகின்றன. அதாவது மொழி என்பது அறிவியல், வரலாறு போல படித்தால் வாழ்நாளெல்லாம் மூளையில் தகவல் தொகுப்பாக நிலைக்காது. என் மாணவர்கள் சிலரிடம் இந்த சிக்கலைக் கண்டிருக்கிறேன் - அவர்களுக்கு பிரஞ்சு ஓரளவுக்குத் தெரியும், ஆனால் சரளமாக பேச முடியாது, இந்தி, மலையாளத்தில் பேச முடியும், ஆனால் எழுத வராது, இம்மொழிகளில் அவர்களின் சொல்வளமும் மிக சொற்பமாகவே இருக்கும். மொழிக் கற்பித்தல் கோட்பாட்டில் இதை immersion என்பார்கள். நீருக்குள் மூழ்கி இருப்பதைப் போல ஒரு மொழிக்குள் நீங்கள் இருக்க வேண்டும், அதையே கேட்க வேண்டும், அதிலேயே பேச வேண்டும், அதையே படிக்க வேண்டும். இல்லாவிடில் நீர் காய்ந்து விடுவதை போல மொழியும் உலர்ந்து மறைந்து விடும். வடிவேலுவின் ஜோக் ஒன்றில் சரிவர பார்க்க முடியாத ஒரு காரோட்டி “வரும் ஆனா வராது” என்பாரே, அப்படித்தான் இந்த பன்மொழித் திறனும் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, மொழியியல் ஆய்வு சொல்லுகிறது.


எனில், மூன்றாவதாக நம் பிள்ளைகள் கற்கிற பிரஞ்சோ இந்தியோ சமிஸ்கிருதமோ எப்படி அவர்களின் திறனாக நீடிக்கும்? அவர்கள் தினமும் யாருக்காவது சமிஸ்கிருதத்தில் காதல் கடிதம் எழுதுவார்களா? அவர்கள் தமிழகத்தில் உள்ள தம் நண்பர்களுக்கு தினமும் இந்தியில் வாட்ஸாப் பண்ணுவார்களா? அவர்கள் தம் தாயிடம் சென்று பிரஞ்சில் “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என சொல்வார்களா? ஆங்கிலத்திலாவது சொற்பமாகவேனும் நாம் வகுப்பில் உரையாட கட்டாயம் ஏற்படுகிறது, வேலையிடங்களில் ஆங்கிலம் கட்டாயமாகிறது, பெரும்பாலான தகவல்களை நாம் கூகிளில் ஆங்கிலத்திலே தேடிப் படிக்கிறோம். ஒரு வேலைக்கான நேர்முகத்தில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிற கேள்வியில் இந்தியில் பதில் சொல்ல முடியுமா? நீங்கள் பீகாருக்கு கல் சுமக்க போகாத பட்சத்தில் அப்படியான ஒரு இந்தி நேர்முகம் சாத்தியமில்லை.

அரசு உங்களுக்கு ஒரு யானையை எப்படி பயிற்சி அளித்து, உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சொல்லித் தருகிறது. ஆனால் பயிற்சிக்கு உங்கள் முன் யானை இல்லை. பாகனாக தேர்ச்சி பெற்ற பின் உங்களிடம் தொரட்டி மட்டுமே இருக்கும், என்றாவது ஒருநாள் நிஜ யானையைக் காணும் போது பயத்தில் ஒளிந்து கொள்வீர்கள். 

இந்தி கற்றால் என்ன வேலை கிடைக்கும் என்கிற கேள்விக்கே நான் வரவில்லை - அதை எப்படி தக்க வைப்பது, எப்படி பயன்படுத்தாமல் நினைவில் தேக்குவது எனும் கேள்வியையே கேட்கிறேன். மலையாளிகளில் பலரும் ஓரளவுக்கு உடைந்த இந்தியில் பேசுவார்கள், அவர்களால் வடக்கிந்தியாவில் சமாளிக்க முடியும். பாலிவுட் படம் பார்க்க முடியும். வேறேன்ன பயன்? அவர்களால் இந்தியில் ஒரு புத்தகம் எழுத முடியுமா? சொந்தமாய் ஒரு நாவலோ கவிதையோ இந்தியில் எழுதுகிற, இந்திக்காரர்களால் கொண்டாடப்பட்ட எத்தனை மலையாளி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? மோகன்லாலால் இந்தியில் பேசி அங்கு சல்மான்கான், ஷாருக்கான் அளவுக்கு உயர முடியுமா? பிரகாஷ் ராஜால் தமிழுக்கு வந்து தமிழைக் கற்று பெரும் நடிகராக முடிகிறது, ஆனால் அவரால் ஏன் பாலிவுட்டில் கால்பதிக்க முடிவதில்லை. திராவிட மொழிகளுக்கு இடையிலான இந்த கொடுக்கல் வாங்கல் ஏன் ஹிந்துஸ்தானி மொழிகளிடம் சாத்தியமாவதில்லை? ஏனென்றால் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் அருகாமையில் இருக்கிறோம், தமிழகத்தில் மற்ற மூன்று மொழிக்காரர்களும் தமிழில் சரளமாக புழங்கியபடி இருக்கிறார்கள். ஆனால் பிராந்திய அருகாமை இல்லாததாலே இந்த ஊடுபாவல் இந்தி பெல்ட் மக்களுடன் சாத்தியமாவதில்லை. ஆம், திலீப் குமாரைப் போன்ற ஒரு எழுத்தாளர் தமிழில் மிகுந்த ஆளுமையுடன் செயல்பட்டார். ஆனால் எதார்த்தத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சௌகார்பேட்டைக்காரர்கள் தம் சொந்த மாநிலத்துக்கு சென்று வாக்களிப்பதே நடக்கிறது. அவர்கள் என்னதான் தமிழில் பேசினாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல, தமிழர்களாக தம்மை அடையாளப்படுத்துவதோ கருதுவதோ இல்லை. ஒரு நாயுடு இங்கு பெரியார் ஆவதைப் போல, ஒரு மேனன் எம்.ஜி.ஆனதைப் போல, ஒரு பல்வீந்தர் சிங்ங்கோ, ஒரு ஜெயினோ தம்மை தமிழராகக் கருதி அரசியல் தலைவர் ஆவது இல்லை. இதுதான் மொழி அடையாளத்துக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குமான தொடர்பு. இது இப்படி இருக்க, இந்தியைக் கற்றுக் கொள்வது உங்களுக்கு ஒரு மொழியை புதிதாக சொந்தமாக்கும், ஆனால் அந்த மொழியின் அடையாளமோ, சமூகமோ, நிலப்பரப்போ உங்களுக்கு சொந்தமாகாது. இந்தியை கற்கும் தென்னகத்தோர் என்றுமே அதில் வெளிநபர் தான். இந்திக்கே இதுதான் நிலை என்றால் சமிஸ்கிருதத்தின் நிலை அதை விட பரிதாபம்.

புத்தகத்தை கிண்டிலில் வாங்க

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...