Skip to main content

இந்த புத்தகத்தின் நோக்கம் என்ன?




இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு ஒரு தேன்மிட்டாயைப் போல இருக்கிறது - பார்க்க சிவப்பாய் அழகாய், உள்ளே ஜீரா வடிய, சுவையாய், ஆனால் உள்ளே பொத்தலாய், சத்தின்றி உள்ளது. நமது பிரதமர் ஜியின் பல உணர்ச்சி பொங்கும் பேருரைகளைப் போல, நிறைய அறிவிப்புகள், முழக்கங்கள், நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்களுடன் இதுவும் தோன்றுகிறது. ஜியின் அறிவிப்புகள் ஒன்று ‘ராவோடு ராவாக பொட்டியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு காலி பண்ணு’ என பணமதிப்பிழப்பைப் போல மாரடைப்பை வரவழைப்பதாக இருக்கும், அல்லது ‘நாளைய விடியலோடு உங்கள் இருப்பில் பத்து லட்சம் டெபாசிட் ஆகும், வசந்தம் தோன்றும், தேனும் பாலும் வீதிகளில் ஓடும், வல்லரசுகளுக்கே வல்லரசாக நாம் இருப்போம்’ என தேர்தல் வாக்குறுதிகளாய் சர்க்கரை லெவலை ஒரேயடியாக ஏற்றுவதாக இருக்கும், இந்த கல்விக்கொள்கையோ முதலாவதை இரண்டாவதுக்குள் வைத்து மடித்து வைத்து நீட்டுகிறது. அநேகமாய் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்த ‘520’ பீடாவுக்கு மயங்கி சாய்ந்து விட்டன, என்னவொரு அற்புதமான கல்வித்திட்டம் இது, புரட்சி வருகிறது, இந்தியா வல்லரசாகிறது என ஆங்கில நாளிதழ்கள் புகழாரம் சூட்டி மன்னருக்கு சாமரம் வீசுகின்றன. தமிழகம் மட்டுமே இந்த பீடாவுக்குள் இருக்கும் போதை விஷத்தை, அரசியலை, கண்டுணர்ந்து எதிர்த்து நின்று போராடுகிறது.

 இதற்கான காரணங்கள் நாம் (1) ஏற்கனவே கல்வியிலும் பொருளாதார வளர்ச்சியில் சிகரம் ஏறி நிற்பது, (2) மொழி அரசியலின், தேசியத்தின் சாதக பாதகங்களை நாம் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே தெரிந்து வைத்திருப்பது, (3) தமிழ் தேசியவாதிகள் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் துவங்கி இன்றைய திராவிட அரசியல் இயக்கங்களை வரை இம்மண்ணில் அணையாது பாதுகாத்து வைத்துள்ள தமிழ் தேசியக் கனல், (4) மற்ற (வடக்கத்திய) மாநிலங்களைப் போலல்லாது நம்மவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவது, வெளிநாடுகளுக்கு அதிகமாய் வேலைக்கு படையெடுக்கும் திறன் படைத்திருப்பது, இந்தி ஆதிக்க மாநிலங்களில் போலல்லாது நமக்கு ஆங்கிலம் குறித்த தாழ்வுணர்ச்சி குறைவாக இருப்பது, (5) ஒரு தேசம், ஒரு மதம், ஒரே மொழி எனும் ஆணைக்கு மண்டியிடாமல் எதிர்த்து நிற்கும் அளவுக்கு இங்கு முற்போக்கு அரசியல் பார்வை உயிர்ப்புடன் இருப்பது.

இந்த நூலுக்கான ஆதாரப் புள்ளியும் மேற்சொன்ன காரணங்களிலேயே இருக்கிறது.

 சுருக்கமாய் சொல்வதானால், இந்த தேசிய கல்விக் கொள்கையின் பிரச்சனையே பிரதானமாய் இதன் அரசியல், நாம் இவ்வளவு மூர்க்கமாய் இதை எதிர்க்கக் காரணமும் நமது அரசியலே. குறிப்பாய், மும்மொழிக் கொள்கை, மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பறித்து, நம்மை மத்தியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் இமையசைவுக்கு காத்து கைகட்டி நிற்க வைக்கும் இதன் நோக்கம், தனியார் பள்ளிகளைப் பின்பற்றி சிறார்களை கடுமையாய் ஒடுக்குகிற தேர்வு முறைமைகளை இது கொண்டு வருவது மற்றும் பாடத்திட்டத்தினுள் தொழிற்கல்வி எனும் பெயரில் இது கொண்டு வரும் அபத்தமான மாற்றங்கள் போன்றவை.


எந்த ஐயமும் தேவையில்லை. இச்சிறிய நூல் இந்த மோசமான அரசியலை அலச, விவாதிக்க, அம்பலபடுத்த எழுதப்பட்ட ஒன்று. அதே நேரம் இந்த தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் சுட்டியிருக்கிறேன். இதன் சில சாதகமான அம்சங்களையும் குறிப்பிட வேண்டிய என் கடமையையும் உணர்ந்து முன்வைத்திருக்கிறேன்.


வாங்க, உரையாடுவோம்.


புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...