முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கியமும் சாதியும்



பிராமண அழகியல் எனும் கற்பிதம் நீண்ட நாட்களாக இங்கு நிலவுகிறது. அதற்கு எந்த முகாந்திரமும், தர்க்கமும் இல்லை என்பதுதான் விசித்திரம்.

 பிராமணர்களின் புனைவில் ஒரு வழுவழுப்பான பிடிகொடுக்காத தன்மை, லசாராவின் தேவி வழிபாடு போன்ற ஒரு வித பெண்மை வழிபாட்டு மனநிலை, தி.ஜாவிடம் (பின்னர் பாலகுமாரனிடமும்) காணும் காமத்தை புனிதமாக்கும், புதிராக்கும், ரொமாண்டிக்காக பார்க்கும் போக்கு, எல்லா முகாம்களிலும் சென்று சமரசமாய் இருப்பதாய் சொல்லப்படுவது, “எலைட்டிசம்”, அடுத்தவர்களை சதா மட்டம் தட்டும், தன் அதிகாரத்தை ஏற்கக் கோரும்மேல்சாதித் திமிர்”, சொந்தசாதியினருடன் சுலபத்தில் சேர்ந்து முகாம் அமைப்பது இப்படி பல போக்குகளை அடையாளப்படுத்தி சாடுகிறார்கள் இந்தபிராமண அழகியலை ஒழிப்போம்போராளிகள். ஆனால் பிராமண எழுத்தாளர்கள் மத்தியில் கூட இதற்கு நேரெதிராக எழுதினவர்கள் உண்டு. நீங்கள் தி.ஜாவையும் லா..ராவையும் ஜி.நாகராஜனையும் ஒரே தட்டில் வைக்க முடியும்? தான் வாழ்ந்த காலத்திலே சொந்த சமூகத்தினரால் ஒரு பைத்தியம் என முத்திரைகுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் பாரதியார் - அவரிடம் பிற்போக்கான, முற்போக்கான கருத்துக்கள் இறைந்தது கிடக்கும். அவரை சாதியளவில் மதிப்பிடுவதென்ன கருத்தளவில் கூட - இதை ஏற்கிறவர் என - வரையறுக்க முடியாது.


என்ன கொடுமை என்றால் இதைப் படிக்கும்போதே உங்களுக்குத் தோன்றியிருக்கும் இந்த போக்குகள் எல்லா எழுத்தாளர்களிடமும், அவர்களின் முகாம்களிலும் உண்டே என

 

 உடனே நம்ஒழிப்போம்போராளிகள் பிராமணியத்தை பிற சாதியினரும் வரித்துக்கொண்டு அவர்களைப் போலவே எழுத முயல்கிறார்கள் என்கிறார்கள். இது எம்.என் ஶ்ரீனிவாசின் சமிஸ்கிருதவாதத்தை சமூகவியலில் இருந்து உருவி இலக்கியத்தில் பயன்படுத்தும் முயற்சி. ஆனால் இலக்கியத்தின் நோக்கமேதன்னைக் கடந்து செல்வதுஎன்பதால் இலக்கியத்தில் சமிஸ்கிருதவாதமெல்லாம் இல்லை என்பேன். அதாவது ஒரு மத்தியசாதி / தாழ்ப்பட்ட சாதி படைப்பாளி பிராமண வழக்கை பயன்படுத்தினால், பிராமண மதச்சடங்குகளை பின்பற்றினால் அது பிராமணியத்தை தழுவுவது ஆகும். ஆனால் இலக்கியத்தில் இது அப்படியல்ல என இலக்கியம் குறித்து அடிப்படை அறிவு கொண்ட யாரும் சொல்வார்கள்.


இந்த நோக்கு ரொம்ப ஆபத்தானது என நினைக்கிறேன் - நீங்கள் பிராமணர்களின் படைப்புகளில் வெளிப்படுவதுபிராமண அழகியல்எனச் சொன்னால் அது மறைமுகமாக ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதி அழகியலையே தன் படைப்புகளில் வெளிப்படுத்துகிறான் என ஆகி விடும். அதை யாருமே ஏற்க முடியாது.

சாதி அரசியலை ஒட்டி ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்வதை புதுமைப்பித்தனுக்கு ராஜ் கௌதமன் செய்துள்ளார். காலனிய காலத்தில் தோன்றிய அரசியல் சமூக நகர்வுகளை ஆதாரமாய் காட்டி எப்படி வரலாறு மாறி வந்துள்ளது, அதனால் வெள்ளாளர்களின் சமூகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள், தத்தளிப்புகள் என்ன, அவை எப்படி இலக்கியத்தில் வெளிப்படுகிறது என அவர் தரவுகளுடன் விவரிக்கிறார். இந்த வாசிப்பும் முழுக்க ஏற்புடையது அல்ல என்றாலும் அவர் உருவாக்குகிற வரலாற்றுச்சித்திரம் ஆழமானது எனும் அளவுக்கு முக்கியமானது.

இதை வைத்து நாளை ஒருவர் இங்கு ஒரு வெள்ளாள மனப்பான்மை உள்ளது, அதை எல்லா வெள்ளாள கவிஞர்கள், புனைகதையாளர்களின் படைப்பிலும் பார்க்கலாம் எனக் கூற முடியுமா? முடியாது. வெள்ளாளர்களிடம் பரவலாக பிராமணிய எதிர்ப்பும், தமிழ்தேசியப் போக்கும் உண்டு என ராஜ் கௌதமனை வைத்து ஒருவர் கூறலாம். ஆனால் இவை இரண்டும் இல்லாத வெள்ளாள எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும்

இப்படிப் பேசுவது நாடார்கள் வியாபார மனநிலை கொண்டவர்கள், செட்டியார்களில் இதிலேயே சற்று வித்தியாசமானவர்கள், தென்மாவட்டத்துக்கு சமூகத்தினர் வன்முறையாளர்கள், குமரிமக்கள் மலையாள மனப்பான்மை கொண்டவர்கள் என ஆளாளுக்கு முத்திரை குத்துவதில் போய் முடியும். இவர்களிடம் உரையாடும் போதே இந்த தேய்வழக்கை மீறி ஆயிரமாயிரம் முரண்கள் இவர்களிடமே இருப்பதே, இந்த முரண்களைக் கடந்து நம்மைப் போன்ற மனிதர்களே இவர்கள் எனக் காண்கிறோம். வாழ்க்கையிலே இப்படி எனில் இலக்கியத்தில் இவர்கள் சாதியைக் கடக்காவிடில் ஒரு ஆழமான பிரதியை உருவாக்கவே முடியாது

ஒரு சமூகத்தின் கலாச்சாரக் கூறுகள் ஒரு படைப்பாளியிடம் வெளிப்படலாம், அது அவன் வளரும் சூழலினால் தோன்றுவது, மரபணுவால் அல்ல. இங்குதான் நான் ஜெயமோகனிடம் இருந்து மாறுபடுகிறேன்: அவர் தொடர்ந்து எழுத்தாளர்களை அவர்களது சமூகப்பின்னணியை வைத்து உளவியல் வரையறை செய்கிறார் - தன்னையே நாயர் உளவியல் கொண்டவன், கட்டுப்படுத்த முடியாத கோபமும், தொடர்ந்து அலைகழியும் மனநிலையும் கொண்டவன் என்கிறார். (ஆனால் ரொம்ப நிதானமான சாதுவான நாயர்களையும் நான் கண்டிருக்கிறேன்.) அண்மையில் ராஜன் குறையை கடுமையாய் தாக்கி ஜெ.மோ எழுதின கட்டுரைகளிலும் பிராமண உளவியலை அவர் வரையறுத்து, அதுவே ராஜன் குறையிடம் வெளிப்படுகிறது என்றார். காந்தியிடம் வெளிப்பட்டது பனியா சமூகத்தின் சமரசப் பேச்சுவார்த்தை உளவியல் தந்திரமே, அதுவே பின்னர் அஹிம்சைக் கோட்பாடாக உருப்பெற்றது என்றார். இந்த சித்திரம் அபத்தமானது. ஒரு பனியா அரசியலில் வந்தால் காந்தி ஆக முடியுமா? எனில் ஏன் மற்ற பனியாக்கள் பாஜகவில் சேர்ந்து வன்முறையைக் கோரும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்? ஏன் இன்னும் ஆதரிக்கிறார்கள்? இதைச் சொல்லும் போதே ஏன் இந்துத்துவாவை கடுமையாய் எதிர்க்கும்பனியாக்களும்இருக்கிறார்களே என்றும் கேட்க வேண்டும்.

 பிராமணர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிலையை மாற்றி தம் அதிகாரத்தைப் பேண காய் நகர்த்துபவர்கள் என ஜெ.மோ சொல்வது உண்மை எனில் ஏன் நம் வரலாறு நெடுக பொறுமையின்றி வன்முறையில் குதித்து அரசியல் படுகொலைகள் செய்த பிராமணர்கள் வருகிறார்கள்? காந்தி என்கிற பனியாவைக் கொன்றது ஒரு பிராமணர் தானே? இன்றும் .பியில் உள்ள பிராமணர்கள் தமிழக பிராமணர்களைப் போல இல்லை - அண்மையில் என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே எனும் தாதா ஒரு பிராமணர். அவரை அங்குள்ள பிராமண சமூகம் ஒரு நாயக பிம்பமாக ஆக்கியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?


ஒவ்வொரு சமூகத்துக்கும் குறிப்பிட்ட மொழிப்பிரயோகங்கள், தொன்மங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள், செண்டிமெண்டுகள் இருக்கலாம். மரபுவழியாக அவர்களுக்கு ஒரு தோற்றமும் ஆளுமையும் தொகுக்கப்பட்டு உருவாகியிருக்கலாம். ஆனால் இது வெளிசமூகத்துக்கு அவர்களைப் பற்றி ஏற்படும் மனமயக்கமே. உள்ளே போய் பார்த்தால் இந்த வெளித்தோலுக்குப் பின்னே ஆயிரம் முரண்படும் வகைமைகள் இருக்கும். ஆனாலும் தமக்கென ஒரு தேய்வழக்கான பிம்பம் உருவான பின்னர் இச்சமூகத்தினரும் தம்மை அறியாமல் வெளியே இந்த பிம்பத்துக்கு, ஆளுமைத்தொகைக்கு ஏற்ப நடந்து கொள்ளத் தொடங்குவார்கள். இது சமூக உளவியல் அல்ல, சமூக பிம்பத்துடன் அவர்கள் கொள்ளும் ஒரு சமரசப் பேச்சுவார்த்தை. கமலஹாசன் தன்னைத் தொடர்ந்து பிராமணப் பின்னணியில் வரும் பரமக்குடிதேவராகக் கட்டமைக்க முயல்வதும் இப்படியான ஒரு பிரக்ஞைக்கு அப்பாலான ஒரு செயல்பாடே. இந்த இரண்டு சமூகங்களுக்கும் நடுவே தன்னை வைத்து தப்பித்துப் போகும் யுக்தியை கமல் மட்டுமல்ல நம்மைப் போன்ற பலரும் செய்கிறோம்


ஆனால் வெளியே இருந்து இதைப் பார்க்கிறவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது; தட்டையாக நம்மை சுருக்கிப் பார்ப்பதே அவர்களுக்கு அனுகூலம். என்னதான் இருந்தாலும் பிராமண புத்திதான் கமலிடம் வெளிப்படுகிறது எனத் தேடிப்பிடித்து நிரூபிக்க முயல்வார்கள், அடுத்தவரைக் குத்தும் இதே விரல் தம் கண்களை நோக்கியும் விரைவில் நீளும் எனப் புரிந்து கொள்ளாமல்.


செல்வேந்திரன் இந்த சாதி முத்திரை அஸ்திரத்தை ஜெயமோகனின் மேஜை டிராயரில் இருந்தே திருடியிருக்க வேண்டும். அதை வைத்து சு.வெவை அவர் சாதி அரசியல் கட்டத்துக்குள் சிறைவைத்து சம்பவம் செய்யப் பார்க்கிறார். இது ஒரு தனிப்பட்ட குத்துச்சண்டையாக இருக்கு வரையில் பிரச்சனையில்லை - ஆனால் இதை ஒரு இலக்கிய விமர்சன அணுகுமுறையாக அவரும், அவரை அடுத்து வேறு சிலரும் மாற்ற முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.


இலக்கியமும் வாழ்க்கையும் எப்போதும் இந்த சில்லறைத்தனங்களுக்கு அப்பாலே இருக்கிறது, இலக்கியக் காவலர்கள் தாம் தம் சில்லறைத்தனங்களைக் கடந்து வர வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.