Skip to main content

இலக்கியமும் சாதியும்



பிராமண அழகியல் எனும் கற்பிதம் நீண்ட நாட்களாக இங்கு நிலவுகிறது. அதற்கு எந்த முகாந்திரமும், தர்க்கமும் இல்லை என்பதுதான் விசித்திரம்.

 பிராமணர்களின் புனைவில் ஒரு வழுவழுப்பான பிடிகொடுக்காத தன்மை, லசாராவின் தேவி வழிபாடு போன்ற ஒரு வித பெண்மை வழிபாட்டு மனநிலை, தி.ஜாவிடம் (பின்னர் பாலகுமாரனிடமும்) காணும் காமத்தை புனிதமாக்கும், புதிராக்கும், ரொமாண்டிக்காக பார்க்கும் போக்கு, எல்லா முகாம்களிலும் சென்று சமரசமாய் இருப்பதாய் சொல்லப்படுவது, “எலைட்டிசம்”, அடுத்தவர்களை சதா மட்டம் தட்டும், தன் அதிகாரத்தை ஏற்கக் கோரும்மேல்சாதித் திமிர்”, சொந்தசாதியினருடன் சுலபத்தில் சேர்ந்து முகாம் அமைப்பது இப்படி பல போக்குகளை அடையாளப்படுத்தி சாடுகிறார்கள் இந்தபிராமண அழகியலை ஒழிப்போம்போராளிகள். ஆனால் பிராமண எழுத்தாளர்கள் மத்தியில் கூட இதற்கு நேரெதிராக எழுதினவர்கள் உண்டு. நீங்கள் தி.ஜாவையும் லா..ராவையும் ஜி.நாகராஜனையும் ஒரே தட்டில் வைக்க முடியும்? தான் வாழ்ந்த காலத்திலே சொந்த சமூகத்தினரால் ஒரு பைத்தியம் என முத்திரைகுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் பாரதியார் - அவரிடம் பிற்போக்கான, முற்போக்கான கருத்துக்கள் இறைந்தது கிடக்கும். அவரை சாதியளவில் மதிப்பிடுவதென்ன கருத்தளவில் கூட - இதை ஏற்கிறவர் என - வரையறுக்க முடியாது.


என்ன கொடுமை என்றால் இதைப் படிக்கும்போதே உங்களுக்குத் தோன்றியிருக்கும் இந்த போக்குகள் எல்லா எழுத்தாளர்களிடமும், அவர்களின் முகாம்களிலும் உண்டே என

 

 உடனே நம்ஒழிப்போம்போராளிகள் பிராமணியத்தை பிற சாதியினரும் வரித்துக்கொண்டு அவர்களைப் போலவே எழுத முயல்கிறார்கள் என்கிறார்கள். இது எம்.என் ஶ்ரீனிவாசின் சமிஸ்கிருதவாதத்தை சமூகவியலில் இருந்து உருவி இலக்கியத்தில் பயன்படுத்தும் முயற்சி. ஆனால் இலக்கியத்தின் நோக்கமேதன்னைக் கடந்து செல்வதுஎன்பதால் இலக்கியத்தில் சமிஸ்கிருதவாதமெல்லாம் இல்லை என்பேன். அதாவது ஒரு மத்தியசாதி / தாழ்ப்பட்ட சாதி படைப்பாளி பிராமண வழக்கை பயன்படுத்தினால், பிராமண மதச்சடங்குகளை பின்பற்றினால் அது பிராமணியத்தை தழுவுவது ஆகும். ஆனால் இலக்கியத்தில் இது அப்படியல்ல என இலக்கியம் குறித்து அடிப்படை அறிவு கொண்ட யாரும் சொல்வார்கள்.


இந்த நோக்கு ரொம்ப ஆபத்தானது என நினைக்கிறேன் - நீங்கள் பிராமணர்களின் படைப்புகளில் வெளிப்படுவதுபிராமண அழகியல்எனச் சொன்னால் அது மறைமுகமாக ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதி அழகியலையே தன் படைப்புகளில் வெளிப்படுத்துகிறான் என ஆகி விடும். அதை யாருமே ஏற்க முடியாது.

சாதி அரசியலை ஒட்டி ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்வதை புதுமைப்பித்தனுக்கு ராஜ் கௌதமன் செய்துள்ளார். காலனிய காலத்தில் தோன்றிய அரசியல் சமூக நகர்வுகளை ஆதாரமாய் காட்டி எப்படி வரலாறு மாறி வந்துள்ளது, அதனால் வெள்ளாளர்களின் சமூகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள், தத்தளிப்புகள் என்ன, அவை எப்படி இலக்கியத்தில் வெளிப்படுகிறது என அவர் தரவுகளுடன் விவரிக்கிறார். இந்த வாசிப்பும் முழுக்க ஏற்புடையது அல்ல என்றாலும் அவர் உருவாக்குகிற வரலாற்றுச்சித்திரம் ஆழமானது எனும் அளவுக்கு முக்கியமானது.

இதை வைத்து நாளை ஒருவர் இங்கு ஒரு வெள்ளாள மனப்பான்மை உள்ளது, அதை எல்லா வெள்ளாள கவிஞர்கள், புனைகதையாளர்களின் படைப்பிலும் பார்க்கலாம் எனக் கூற முடியுமா? முடியாது. வெள்ளாளர்களிடம் பரவலாக பிராமணிய எதிர்ப்பும், தமிழ்தேசியப் போக்கும் உண்டு என ராஜ் கௌதமனை வைத்து ஒருவர் கூறலாம். ஆனால் இவை இரண்டும் இல்லாத வெள்ளாள எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும்

இப்படிப் பேசுவது நாடார்கள் வியாபார மனநிலை கொண்டவர்கள், செட்டியார்களில் இதிலேயே சற்று வித்தியாசமானவர்கள், தென்மாவட்டத்துக்கு சமூகத்தினர் வன்முறையாளர்கள், குமரிமக்கள் மலையாள மனப்பான்மை கொண்டவர்கள் என ஆளாளுக்கு முத்திரை குத்துவதில் போய் முடியும். இவர்களிடம் உரையாடும் போதே இந்த தேய்வழக்கை மீறி ஆயிரமாயிரம் முரண்கள் இவர்களிடமே இருப்பதே, இந்த முரண்களைக் கடந்து நம்மைப் போன்ற மனிதர்களே இவர்கள் எனக் காண்கிறோம். வாழ்க்கையிலே இப்படி எனில் இலக்கியத்தில் இவர்கள் சாதியைக் கடக்காவிடில் ஒரு ஆழமான பிரதியை உருவாக்கவே முடியாது

ஒரு சமூகத்தின் கலாச்சாரக் கூறுகள் ஒரு படைப்பாளியிடம் வெளிப்படலாம், அது அவன் வளரும் சூழலினால் தோன்றுவது, மரபணுவால் அல்ல. இங்குதான் நான் ஜெயமோகனிடம் இருந்து மாறுபடுகிறேன்: அவர் தொடர்ந்து எழுத்தாளர்களை அவர்களது சமூகப்பின்னணியை வைத்து உளவியல் வரையறை செய்கிறார் - தன்னையே நாயர் உளவியல் கொண்டவன், கட்டுப்படுத்த முடியாத கோபமும், தொடர்ந்து அலைகழியும் மனநிலையும் கொண்டவன் என்கிறார். (ஆனால் ரொம்ப நிதானமான சாதுவான நாயர்களையும் நான் கண்டிருக்கிறேன்.) அண்மையில் ராஜன் குறையை கடுமையாய் தாக்கி ஜெ.மோ எழுதின கட்டுரைகளிலும் பிராமண உளவியலை அவர் வரையறுத்து, அதுவே ராஜன் குறையிடம் வெளிப்படுகிறது என்றார். காந்தியிடம் வெளிப்பட்டது பனியா சமூகத்தின் சமரசப் பேச்சுவார்த்தை உளவியல் தந்திரமே, அதுவே பின்னர் அஹிம்சைக் கோட்பாடாக உருப்பெற்றது என்றார். இந்த சித்திரம் அபத்தமானது. ஒரு பனியா அரசியலில் வந்தால் காந்தி ஆக முடியுமா? எனில் ஏன் மற்ற பனியாக்கள் பாஜகவில் சேர்ந்து வன்முறையைக் கோரும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்? ஏன் இன்னும் ஆதரிக்கிறார்கள்? இதைச் சொல்லும் போதே ஏன் இந்துத்துவாவை கடுமையாய் எதிர்க்கும்பனியாக்களும்இருக்கிறார்களே என்றும் கேட்க வேண்டும்.

 பிராமணர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிலையை மாற்றி தம் அதிகாரத்தைப் பேண காய் நகர்த்துபவர்கள் என ஜெ.மோ சொல்வது உண்மை எனில் ஏன் நம் வரலாறு நெடுக பொறுமையின்றி வன்முறையில் குதித்து அரசியல் படுகொலைகள் செய்த பிராமணர்கள் வருகிறார்கள்? காந்தி என்கிற பனியாவைக் கொன்றது ஒரு பிராமணர் தானே? இன்றும் .பியில் உள்ள பிராமணர்கள் தமிழக பிராமணர்களைப் போல இல்லை - அண்மையில் என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே எனும் தாதா ஒரு பிராமணர். அவரை அங்குள்ள பிராமண சமூகம் ஒரு நாயக பிம்பமாக ஆக்கியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?


ஒவ்வொரு சமூகத்துக்கும் குறிப்பிட்ட மொழிப்பிரயோகங்கள், தொன்மங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள், செண்டிமெண்டுகள் இருக்கலாம். மரபுவழியாக அவர்களுக்கு ஒரு தோற்றமும் ஆளுமையும் தொகுக்கப்பட்டு உருவாகியிருக்கலாம். ஆனால் இது வெளிசமூகத்துக்கு அவர்களைப் பற்றி ஏற்படும் மனமயக்கமே. உள்ளே போய் பார்த்தால் இந்த வெளித்தோலுக்குப் பின்னே ஆயிரம் முரண்படும் வகைமைகள் இருக்கும். ஆனாலும் தமக்கென ஒரு தேய்வழக்கான பிம்பம் உருவான பின்னர் இச்சமூகத்தினரும் தம்மை அறியாமல் வெளியே இந்த பிம்பத்துக்கு, ஆளுமைத்தொகைக்கு ஏற்ப நடந்து கொள்ளத் தொடங்குவார்கள். இது சமூக உளவியல் அல்ல, சமூக பிம்பத்துடன் அவர்கள் கொள்ளும் ஒரு சமரசப் பேச்சுவார்த்தை. கமலஹாசன் தன்னைத் தொடர்ந்து பிராமணப் பின்னணியில் வரும் பரமக்குடிதேவராகக் கட்டமைக்க முயல்வதும் இப்படியான ஒரு பிரக்ஞைக்கு அப்பாலான ஒரு செயல்பாடே. இந்த இரண்டு சமூகங்களுக்கும் நடுவே தன்னை வைத்து தப்பித்துப் போகும் யுக்தியை கமல் மட்டுமல்ல நம்மைப் போன்ற பலரும் செய்கிறோம்


ஆனால் வெளியே இருந்து இதைப் பார்க்கிறவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது; தட்டையாக நம்மை சுருக்கிப் பார்ப்பதே அவர்களுக்கு அனுகூலம். என்னதான் இருந்தாலும் பிராமண புத்திதான் கமலிடம் வெளிப்படுகிறது எனத் தேடிப்பிடித்து நிரூபிக்க முயல்வார்கள், அடுத்தவரைக் குத்தும் இதே விரல் தம் கண்களை நோக்கியும் விரைவில் நீளும் எனப் புரிந்து கொள்ளாமல்.


செல்வேந்திரன் இந்த சாதி முத்திரை அஸ்திரத்தை ஜெயமோகனின் மேஜை டிராயரில் இருந்தே திருடியிருக்க வேண்டும். அதை வைத்து சு.வெவை அவர் சாதி அரசியல் கட்டத்துக்குள் சிறைவைத்து சம்பவம் செய்யப் பார்க்கிறார். இது ஒரு தனிப்பட்ட குத்துச்சண்டையாக இருக்கு வரையில் பிரச்சனையில்லை - ஆனால் இதை ஒரு இலக்கிய விமர்சன அணுகுமுறையாக அவரும், அவரை அடுத்து வேறு சிலரும் மாற்ற முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.


இலக்கியமும் வாழ்க்கையும் எப்போதும் இந்த சில்லறைத்தனங்களுக்கு அப்பாலே இருக்கிறது, இலக்கியக் காவலர்கள் தாம் தம் சில்லறைத்தனங்களைக் கடந்து வர வேண்டும்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...