Skip to main content

இந்தித் திணிப்பின் கதை: காங்கிரஸ்-பாஜக வித்தியாசம்



 1937இல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைத்தது (ஆங்கிலேயரின் கண்காணிப்பின் கீழ் தான்). ராஜாஜி இங்கு இந்தி படிப்பதை கட்டாயமாக்க, பெரியார் தலைமையில் இரண்டு ஆண்டுகள் இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன, இரு போராளிகள் இறந்தனர், ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டனர். 1939இல் காங்கிரஸ் கட்சி ஆட்சி விலகியதுடன், சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை ரத்து செய்தார்.

 1963இல் அதிகாரபூர்வ மொழிகள் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி 1965க்குப் பிறகு இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் ஆட்சி மொழியாகபயன்படுத்தப்படலாம்”. இந்தபடலாம்தான் தென்னக்கத்தில் இந்தி திணிப்பு அச்சத்தை பரவலாக தோற்றுவித்தது. 1964இல் பிரதமர் நேரு காலமானார். லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். காங்கிரஸுக்குள் இருந்த இந்தி ஆதவாளர்கள் என்னதான் அழுத்தம் அளித்தாலும், நேரு ஒரு மிதவாதி, அவர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நீட்டிப்பதில் எதிரானவர் அல்ல, ஆனா; சாஸ்திரி அப்படியானவர் அல்ல. அவர் தான் இந்தியை மாநிலங்களில் கட்டாயமாக்கப் போவதாக, இந்தியை மத்திய அரசு பணிமொழியாக்கப் போவதாக தென்னிந்தியாவில் மக்கள் அஞ்சினர். இதை ஒட்டி, 1965இல் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றையே எப்படி மாற்றி அமைத்தது, தமிழ் தேசிய அரசில் பிரக்ஞையை வலுவாக நிலைபெறச் செய்தது என அறிவோம். 1966இல் சாஸ்திரி காலமானார். அடுத்து 1967இல் காங்கிரஸ் தமிழகத்தில் முறியடிக்கப்பட்டு, திமுக வெற்றி பெற்றது, இங்கு ஏற்பட்ட வலுவான மொழிப்பிரக்ஞை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 1967இல் திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றி இந்திரா காந்தி ஆங்கிலமும் இணை மொழியாகத் தொடரும் என அறிவித்தார்.


 ஆனால் இத்துடன் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை - அண்ணாதுரையின் ஆட்சியின் கீழும் மும்மொழிக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன, அண்ணா இந்த கோரிக்கைகளை ஏற்று இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தார். அடுத்து 1986இல் பிரதமர் ராஜீவ் காந்தி தேசிய மொழிக்கொள்கையை கொண்டு வந்தார். இதன்படி எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகளில் திறக்கப்படும், இங்கு இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படும் எனக் கூறி திமுக போராடியது. 21 போராளிகள் தீக்குளித்து இறந்தனர். கலைஞர் கைதானார். இந்த போராட்டத்தின் முடிவில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என ராஜீவ் தமிழகத்துக்கு உறுதியளித்தார், விளைவாக நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் நிறுவப்படவும் இல்லை.


ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகி பாஜக வந்ததும் இந்தித் திணிப்பு என்பது இத்தகைய போராட்டங்கள், கருத்து மோதல்கள், சமரங்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளை மைய அரசு கைவிட்டு, டி-20 போல அடித்தாட ஆரம்பித்தது. 2014இல் பிரதமர் மோடி இனிமேல் அரசு அதிகாரிகள் இணையத்தில் வெளியிடும் செய்திகள், அறிவிப்புகள் இந்தியிலேயே இருக்க வேண்டும் என ஆணையிட்டார். தனது அதிகாரபூர்வ உரைகளிலும், வானொலி உரைகளிலும் மோடி இந்தியை முழுக்க பயன்படுத்தினார். இந்தி-இந்து-மோடி-தேசியம் எனும் நால்முனை இணைவு வெளிப்படையான, எந்த விவாதங்களுக்கும் உட்படாத சர்வாதிகார அரசியல் ஆனது. நீங்கள் இந்தியை கண்டித்தால் அது மோடியை கண்டித்ததாகவும், மோடியை கண்டித்தால் அது இந்துக்களை அவமதித்ததாகும், இந்துக்களை அவமதித்தால் அது தேசத்துக்கு எதிராக செயல்படும் துரோகச் செயலாகும். இன்று தமிழகத்தைத் தவிர பிற மாநில மக்கள் இந்த நான்கு கண்ணிகளில் எதற்கு எதிராகவும் பேச, எழுத, போராட அஞ்சுகிறார்கள். அப்படி ஒரு புனித கட்டமைப்பாக இந்தி இன்று உருவாகி விட்டது.


 2019 செப்டம்பரில் இந்தி நிவாஸின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாஇந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைக்கக் கூடிய, உலக அளவில் இந்தியாவுக்கு தனித்த அடையாளத்தை பெற்றுத் தரக்கூடிய மொழி இந்தியே.” என்றார். இது சர்ச்சையாகி, அங்கங்கே கடுமையான கண்டனங்கள் எழ, போராட்டங்கள் வெடிக்க ஷா தான் ஒரு கோரிக்கையை மட்டுமே வைத்ததாக பின்வாங்கினார். ஆனால் புலி பின்வாங்குவது பாயத்தானே! இதைத் தான் இப்போது இந்த புதிய கல்விக் கொள்கையில் முன்வைக்கப்படும் மும்மொழிக் கொள்கை, அதை ஒட்டி சம்ஸ்கிருதத்துக்கு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, இந்தி ஆசிரியர்களை நாடு முழுக்க வேலைக்கு எடுக்க வைக்கப்படும் திட்டம், ஏற்கனவே இந்தியா முழுக்க இந்தி ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருக்கப்பட்டுள்ளது ஆகியவற்றில் நாம் காண்கிறோம். முதலில், கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி இருந்தாக வேண்டும் எனும் வலியுறுத்தல் கடுமையான எதிர்ப்பை சம்பாதிக்க அதை பாஜக அரசு திருத்தி இப்போது மூன்றாவது மொழியாக எம்மொழியும் இருக்கலாம் எனச் சொல்லி உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே மறைமுகமாய் இந்தியைத் தவிர வேறு மொழியை நம் பிள்ளைகள் தேர்வு செய்ய முடியாத நிர்பந்த நிலையையும் பாஜக அரசு உண்டு பண்ணுவதைப் பார்த்தோம். கூடுதலாக, 2019இல் அமித் ஷா அளித்த விளக்கத்தையும் இந்த மும்மொழிக் கொள்கையின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்: “தாய் மொழியை ஒரு குழந்தை கற்க வேண்டும் என்றேன், ஆனால் தாய்மொழி என்றால் இந்தி மட்டும் அல்ல. என் சொந்த மாநிலத்தை சேர்ந்த குழந்தை என்றால் அது குஜராத்தியை தாய்மொழியாகக் கற்கலாம். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தியே இருக்க வேண்டும்.” பாஜகவின் பிரதான தலைவர் ஒருவரின் கூற்று இது. பாஜகவின் நேரடியான நிலைப்பாடும் இதுவே. 2017 ஏப்ரலில் இந்திய ஜனாதிபதி நாடாளுமன்றக் குழு ஒன்றின் பரிந்துரைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார் - “இந்த பரிந்துரைப்படி மனித வள அமைச்சகம் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாக்குவதற்கு எல்லா விதமான தீவிர முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.”  என்பதே ஜனாதிபதியின் கூற்று.

2014இல் மத்திய அரசின் பரிந்துரைகளில் ஒன்றான அமைச்சர்கள் இந்தியிலே உரையாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியா முழுக்க இந்தியை கட்டாயமாக கற்றுக்கொடுக்காத பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் மற்றொரு பரிந்துரையை ரத்து செய்தார்.

பாஜகவின் இதுவரையிலான இந்த இந்தி திணிப்பு கூற்றுகளுக்கு மாறாக மும்மொழிக் கொள்கை இருக்க முடியாதில்லையா?


 காங்கிரஸ் முன்பு செய்ததைப் போல கட்டாய இந்திக் கல்வி மாநிலங்களுக்கு இல்லை என பாஜக கூறியதில்லை. ஆனால் கல்விக்கொள்கையில் கூடாரத்துக்குள் ஒட்டகத்தின் தலையைப் போல மூன்றாவது மொழி உங்கள் தேர்வு என சமத்காரமாகச் சொல்லி கொண்டு வருகிறது. இதைப் பற்றி நியூஸ் 18 சேனல் விவாதத்தின் போது எஸ்.ஆர் சேகரிடம் கேட்கப்பட்ட போது அவர் வெளிப்படையாகவேமூன்றாவது மொழிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, நிதியை சேகரிப்பது, ஆசிரியர்களை பயிற்சியளித்துக் கொண்டு வருவது மாநில அரசின் பிரச்சனை, அதை மத்திய அரசின் தலையில் உன்மத்தம் கூடாதுஎன்றார். ஆனால் சமிஸ்கிருதத்துக்கு சிறப்பு கவனம் கொடுத்து அதை வளர்ப்பதற்கான கட்டமைப்புகளை அளித்து, நிதியை வாரி வழங்கி, துரிதமாக பல லட்சம் சமிஸ்கிருத ஆசிரியர்களையும் மத்திய அரசு உருவாக்கும், அது தவறில்லை என அவர் கூறினார். இந்த முரணை நாம் கவனிக்க வேண்டும்.   

 


இப்படி சுதந்திரத்துக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சி சமிஸ்கிருதத்தையும் இந்தியையும் முன்னெடுத்தாலும் தற்போதைய பாஜக அரசைப் போல வலுக்கட்டாயமாய் மக்கள் அனைவரும் இந்தி பேசியே ஆக வேண்டும் என அவர்கள் மிரட்டவில்லை. மற்றொரு பக்கம், காங்கிரஸார் தமக்கான ஒரு நிரந்தர ஓட்டு வங்கியை இந்த இந்தி நிலப்பரப்பைக் கொண்டு அவர்கள் உத்தரவாதம் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அசலான இந்திய மொழிகள் பல.  


புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...