Skip to main content

விவசாயிகள் மசோதா - கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம்





முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள்.

அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள்.

இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும் பறிபோகிறது.


ஜெயரஞ்சன் சொல்வதைப் போல இது பிரம்மாண்டமான கார்ப்பரேட்டுகளுக்கு நேரடிக் கூலிகளாக விவசாயிகளை மாற்றப் போகிறது. இனி எந்த மாநிலத்தில் எந்த உணவுப்பொருளின் விலையையும் அந்த மாநிலமல்ல, இந்த சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளின் வியாபார காந்தங்களே தீர்மானிப்பர். இந்த நிறுவனங்களே கதியென ஆகிய பின்னர் இவர்கள் விலையை சரியான நேரத்தில் தரவில்லை எனில் விவசாயிகளுக்கு அரசிடம் உதவி கோர முடியாது. மத்தியஸ்த இடத்தில் மாநில அரசு இருக்காது. அதை ஒரு அம்பானியோ அதானியோ தான் தீர்மானிப்பார். உணவுப்பொருட்களை மொத்தமாய் வாங்கி பதுக்குகிற பணியை ஒரு பெரிய கார்ப்பரேட் செய்தால் பின்னர் அதன் விளைவு எவ்வளவு பாரித்ததாக இருக்கும்?

அது மட்டுமல்ல, ஒரு மாநில மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களை விடுத்து எவற்றினால் ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் கூடுதல் லாபம் வருமே அதை மட்டுமே அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் பயிரிடும் கட்டாயத்துக்கு ஆட்படலாம். 


அவகடோ எனும் பழம் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ, சிலே போன்ற நாடுகளில் இருந்து பெருமளவுக்கு ஏற்றுமதியாகின. இதற்குத் தோதாக அவிகடோ எடைக்குறைப்புக்கு ஏற்ற பழம் என ஒரு கதை பரப்பட்டது. விளைவாக இதன் தேவையும் விலையும் கன்னாபின்னாவென ஏறியது. மெக்ஸிகா, சிலேவில் பாரம்பரிய விவசாயம் கைவிடப்பட்டு, எங்கு பார்த்தாலும் அவகடோ பயிரிட்டார்கள். இந்த அவகடோவைப் பயிரிடுவதற்கு ஒருநாளைக்கு அங்கே 9.5 பில்லியன் நீரை பயன்படுத்த வேண்டும். இதனால் இந்த நாடுகளில் சூழல் சீரழிந்து, தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. எல்லா நதிகளும் வற்றி விட்டன. வெப்பம் அதிகமாகி அடிக்கடி புயல்மழை வரத் தொடங்கியது. மக்களால் எதிர்க்க முடியாதபடிக்கு கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களையும் நீர்வளத்தையும் கட்டுப்படுத்துகின்றன. அரசு எதிலும் தலையிடாமல் முதலாளிகளிடம் கட்டிங் வாங்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அத்தகைய நிலைதான் இந்தியாவிலும் இனி கார்ப்பரேட் விவசாயச் சூழலில் ஏற்படும். ஒரு மாநிலத்தின் மக்களுக்குத் தேவையான உணவுப்பொருளை இனி பயிரிட முடியாது. இதுவரை எளிதில் வாங்கி சாப்பிட்டவை இனி கிடைக்காது. இங்கு உற்பத்தி ஆகிற பொருட்கள் வெளியே அனுப்பப்படுவதால் அதுவும் நமக்குக் கிடைக்காது. ஒவ்வொரு மாநிலத்தையும் தம் வியாபார இலக்குக்கான ஒரு சோதனைக் களமாக அம்பானி, அதானிகள் மாற்றுவார்கள்.   


இந்த நிறுவனங்கள் இடையே ஒரு புரிந்துணர்வு இருக்குமென்பதால் வாங்கும் விலையில் பெரிய வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்வார்கள்; முதலில் நல்ல விலைக்கு வாங்கி மொத்த சந்தையையும் இடைத்தரக வர்த்தகர்களிடம் இருந்து பறித்து விட்டு தாம் மட்டுமே ஒரே போக்கிடம் எனும் நிலையை உருவாக்கிய பின்னர் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள் - வெங்காயத்தை அதானி / அம்பானி மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதிக விற்பதாய் முடிவெடுத்தால் விவசாயிகளால் அவரை எதிர்த்து யாரிடம் போக முடியும்? மாநில அரசால் அதை எதிர்க்க முடியுமா? வழக்காடு மன்றம் தான் செல்ல முடியும். ஆனால் அங்குள்ள ரப்பர்-முதுகு சங்கி நீதிபதிகள் என்ன பதிலளிப்பார்கள் எனத் தெரியாதா? 


ஒருமுறை மடியை அவிழ்த்து சரணடைந்து விட்டால் பின்னர் வேறெந்த பெரிய நிறுவனமும் விவசாயிகளுக்கு கூடுதல் விலையைத் தர மாட்டார்கள். சிறுவணிகர்களோ வேறு வர்த்தகத்துக்கு பெயர்ந்திருப்பார்கள். கசாப்புக்கு அனுப்பப்பட்ட மாட்டின் நிலைதான் நம் விவசாயிகளுக்கும் ஏற்படும். பேரம் பேசுவது போக ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்க முடியாது.  


எந்த மாநிலத்திலும் யாரும் உணவுப்பொருட்களை வாங்கி விற்கலாம் என திறந்த சந்தை உருவானால் போட்டி ஏற்படும், போட்டிச்சூழலில் விவசாயிக்கு கூடுதல் லாபம் வரும் என்பது பச்சைப் பொய். இன்றைய நவதாராளவாதச் சூழலில் போட்டியென்பது ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும், பின்னர் ஒரே விலை தான்.


அதுமட்டுமல்ல, அரசு இதுவரை விவசாயிகளுக்கு அளித்து வரும் குறைந்தபட்ச ஆதார விலையும் மெல்ல மெல்ல கைவிடப்படும். நீங்களாச்சு அம்பானி/அதானியாச்சு என அரசு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்.


மோடி அரசு தனது பிரதான விசுவாசம் பெருவர்த்தக நிறுவனங்களிடத்தே என மீண்டும் காட்டியுள்ளது. மோடி எவ்வளவு குரூரமானவர் என்றால் விவசாயிகளின் விதைப்பையை வெட்டிவிட்டு அவர்களுக்கே வாழ்த்துக்கள் சொல்வார்?

அதிமுக அரசு எந்தளவுக்கு வெட்கம் கெட்டது எனில் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தன் எஜமான்களுக்கு சலாம் போடும்? இவர்கள் ஊழல் செய்து குவித்த பல்லாயிரம் கோடி பணம் அலாவுதீனின் பூதம் போல மத்திய அரசிடம் அடிமைப்பணி செய்ய வைக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தில் வாழவே நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.

Comments

Murugan R.D. said…
கட்டுரையும் ஓகே
ஆளுங்கட்சிய விமர்சிக்கிறதுலாம் ஓகே
ஆனா வேற எந்த மாநில அரசு இதை கடுமையாக எதிர்க்கிறதுனு சொல்ல முடியுமா, எதிர்த்தாலும் அவர்கள் மாநிலங்களில் இந்த சட்டத்தை வரவிடாமல் தடுக்க முடியுமா?

நீங்க திராவிட தீவிர ஆதரவாளரா இருக்கீங்கன்னு தெரியுது,, அதே திமுக இப்ப ஆட்சியில் இருந்தால் என்ன செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க,,,

அரசியல்வாதிகளை மிரட்ட பல துறைகளையும் நுணுக்கமாக பயன்படுத்தும் மத்தியஅரசின் கிடுக்கிப்பிடியையும் மீறி (ஒரு வேளை ஆட்சியிலிருந்திருந்தால்) திமுக நீங்க எதிர்பார்ப்பது போல மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருக்குமா,,

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...