Skip to main content

பெரியாரின் Fight Club

"சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது. கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது ... சிறிதும் பயனற்றது."
- பெரியார்
பெரியார் ஏன் சிறுவயதுப் பெண்ணை தன் முதிய வயதில் மணமுடித்தார் எனும் கேள்விக்கான பதில் மேற்சொன்ன கூற்றில் உள்ளது.
பெரியார் சொல்லும் கட்டுப்பாடானது சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் சமூக உளவியல் கட்டுமானங்கள். 
சொல்லப்போனால் திருமணத்தை நம்புவதும் அபத்தமே. அது தரும் சட்டரீதியான பாதுகாப்பைத் தவிர என பெரியார் நம்பியிருப்பார் என அவரது "பெண் ஏன் அடிமையானாள்?" நூலைப் படிக்கையில் தோன்றுகிறது.

திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை, அதைத்தாண்டி திருமணத்தில் எந்த புனிதமும் இல்லை என அவர் சொல்லுகிறார். அதில் லட்சியங்களுக்கும் இடமில்லை. திருமணம் பரஸ்பர ஆதரவுக்கான, பாதுகாப்புக்கான, குழந்தைப் பேறுக்கான, பணத்துக்கான ஒரு உடன்படிக்கையாகவும் இருக்கலாம். சம்மந்தபடும் ஆண்-பெண்ணுக்கு ஏற்புடையதெனில் அது சரியே. இல்லையெனில் உடைத்து விடலாம். ஒரு வர்த்தக உடன்படிக்கையின் போது நடப்பதுதான் திருமணத்திலும் நடக்கிறது. 

இந்த அனார்க்கிசக் கருத்தை ஏற்க முடியாதவர்களே பெரியார் இளம்வயதுப் பெண்ணான மணியம்மையை மணமுடித்ததைச் சாடுகிறார்கள். திருமணத்தை ஒரு சமூகக்கட்டமைப்பாக முன்னெடுத்து, அதை வைத்து இன்றுள்ள அரச, பொருளாதார இயக்கங்களைக் குறித்த மாயைகளைக் கட்டமைப்பது, நியாயப்படுத்துவது அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. பெரியார் இந்த பாவனைகளை உடைத்தார்.

 இங்கு அனேகமாய் எல்லா திருமண உறவுகளும் உள்ளுக்குள் ஒரு 'குறுகின'  நோக்கத்துக்கு உட்பட்ட, எளிய தேவைகளை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட  உடன்படிக்கையாய் தான் இருக்கிறது - பெண்ணுக்கு ஆண் எல்லாம் செய்வது, ஆணுக்குப் பெண் எல்லாம் செய்வது என இருப்பதில்லை; அது ஒரு கனவு, எதார்த்தமில்லை.

திருமணத்தின் மீது ஏற்றப்பட்ட லட்சியங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை உடைத்தாலே பெண்கள் - கூடவே ஆண்களும் - விடுதலை பெற்று விடுவார்கள்.

ஒரு extreme ஆன உதாரணம் தருகிறேன்.
 செக்ஸ் இல்லாத திருமணங்கள் இங்கே எத்தனை? மிக மிக அதிகமாய். ஆனால் வெளியே ஒரு நாடகத்தை போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். செக்ஸ் இல்லாவிட்டால் என்ன குழந்தைக்காக வாழ்வோம், வசதிக்காக, பாதுகாப்புக்காக வாழ்வோம் என சமாதானம் கொள்கிறோம். ஆனால் வெளிப்படையாக இதைச் சொல்லாமல் நாடகத்தைத் தொடர்கிறோம். இதை மறைக்காமல் பேசி வைத்துக் கொண்டால் - திருமணம் ஒரு சாதாரண ஒப்பந்தம் மட்டுமே என நம்பிக்கொண்டால் - இப்போதுள்ள பல மனக்கசப்புகளில் இருந்து கொலைக்குற்றங்கள் வரை ஆண்-பெண் உறவில் இராது. வாழ்க்கையில் பசப்பு, சுய ஏமாற்று, பாசாங்கு, அதனாலான துன்பங்கள் இராது. யாரையோ மனதளவில் அண்டியிருந்து பின்னர் நாசமாய்ப் போக வேண்டி வராது.

பெரியார் இதற்கு எல்லாம் அவசியமில்லை என நினைத்தார். தன் இதயம் சொல்வதை, தன் பகுத்தறிவு ஏற்றதை செய்தார். நியாயம் என்பதை ஒழுக்கத்துடம் பிணைக்கும் போது அது போலித்தனமாகும், போலித்தனத்துக்குப் பணிவதே நம்மை பயந்து நடுங்க, ஊருக்கு அடங்கிப் போகச் செய்கிறது. திருமணம் குறித்த அரசியல் அழுத்தம் ஏற்பட பெரியார் அதையும் புறக்கணித்தார். 

ஒரு கேள்வி: ஒரு ஆண் தன் தேவைக்கேற்ப ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் அதனால் பெண் பாதிக்கப்பட மாட்டாளா? பெண்கள் கவனமாய் இருந்தால் மாட்டார்கள், பெண்களின் தரப்பில் இருந்து ஆண்களே முடிவெடுத்து அவர்களைக் காப்பாற்றுவதாய் நினைத்து முனைவது ஏமாற்றுத்தனம் என பெரியார் சொல்கிறார் - பெண் விடுதலை பெண்களின் பொறுப்பு, அதை ஆண்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். மணியம்மையின் முடிவை மணியம்மை தான் எடுக்க வேண்டும். எடுத்த பின் அதை ரத்து செய்யவும் அவருக்கு உள்ள உரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கு சமத்துவமில்லை என நினைத்தால் அவர் அதை எதிர்க்கலாம். அது அவரது பொறுப்பு. பெரியார் அவரை விடுதலை செய்கிறேன் என பொய்யுரைக்க மாட்டார். அதுதான் பெரியார். பெண்களுக்காய் யோசிக்கிற ஆண் நான் எனும் பாவனைகளைப் புனைய மாட்டார். "பெண் ஏன் அடிமையானாள்?" நூலில் இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

காந்தியால் கூட அது முடியவில்லை. கஸ்தூர்பாவிடம் இருந்து பிரிந்து, சரளாதேவி எனும் பெண்ணை மணமுடிக்க நினைத்து பின்னர் அரசியல் நண்பர்களும், ஆதரவளர்களும் அறிவுரைக்க அவர் பின்வாங்கினார். போலியாக இணைந்து வாழ்ந்தார். காந்தி தன் உண்மையை வெளிப்படையாக வைத்தவர். ஆனால் பெரியாரோ காந்தியை விட உண்மையானவர். சமரசங்களில் நம்பிக்கை இல்லாதவர் - இதனால் தான் அவரை அனார்க்கிஸ்ட் என்கிறேன். 

நாம் Fight Club போன்ற படங்களில் பார்த்து ரசித்த விசயங்களை அன்றே செய்து பார்த்தார், சிந்தனை, அரசியல் உலகில் பெரியார் - ஒரு ஆண் ஆணாக இருந்தாலே பெண்கள் தம் போக்கில் நிம்மதியாக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வார்கள். பெண்களும் பசப்பில்லாமல், ஒழுக்க பாவனைகள், லட்சிய கிரீடம் அணியாமல் தன் தேவையை தெரிவிக்கும் - ஆண் விலங்காக இருக்கும் - ஆண்களையே விரும்புகிறார்கள். (கலாச்சார விலங்குகளே பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆண் விலங்குகள் அல்ல) எல்லா பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வில் நாம் மூக்கை நுழைத்து நியாயம் பேச நினைக்கும் போதே ஆரம்பித்தது. 

பெரியார் இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர் என்பதே சிறப்பு. கோகுல் தனது ஒரு பதிவில் சொல்வதைப் போல பெரியார் ஒரு ஆல்பா மேல் தான், குற்றவுணர்வு, பயமில்லாத ஆல்பா மேல்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...