சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதைகளைப் பற்றி மாரி ராஜ் என்பவரின் விமர்சனத்தை (ஜெ.மோவின் தளத்தில் வெளியானது.) படித்த போது எழுந்த கேள்வி இது:
விஷ்ணுபுரம் அமைப்பின் மாரி ராஜ் இத்தொகுப்பின் எல்லா கதைகளையும் வாசித்திருக்கிறார் சரி, ஆனால் ஏன் நவீனத்துவ கதைகளைப் போல, அல்லது அதற்கும் பின்னாடி சென்று கதைக்கரு, அது இதுவென மானுடவாத நோக்கில் இருநூறு வருடங்களுக்குப் பின்னால் சென்று வாசிக்கிறார்? ஏன் விஷ்ணுபுரம் அமைப்பை சேர்ந்த எல்லாரும் ஒரே மாதிரி வாசிக்கிறார்கள்? நீங்கள் மிலன் குந்தெராவை கு.அழகிரிசாமியைப் போல அதே தளத்தில் வைத்து - இருவரும் ஒரே மாதிரி எழுத்தாளர்கள் எனக் கருதி - படிப்பீர்களா? இவர்கள் செய்வார்கள்.
இவர்களுக்கு ஒன்று சமகால எழுத்து, விமர்சனம் பற்றி தெரிவதில்லை அல்லாவிடில் பின்நவீனப் பார்வை, அது மொழியில் செய்யும் கலகம், இருப்பின் சாரத்தை நிராகரிப்பது, மரபின் பெருங்கதையாடல்களை எதிர்ப்பது ஆகியன பிடிக்காததால் பின்நவீன இலக்கியம்-விமர்சனம்-விவாதங்களை நிராகரித்து (கடலூர் சீனு போல) பழைய பாணியில் ஸ்கூல் குழந்தைகளைப் போலவே வாசிப்போம் என பிடிவாதம் பிடிக்கிறார்கள். இது ஒரு இலக்கிய அமைப்பு அல்ல, ஜுராசிக் பார்க் :)
இந்த பார்க்கின் ஆய்வகத்தில் இருந்து தொடர்ந்து குட்டி டினோசர்கள் புறப்பட்டு வந்தபடியே இருக்கிறார்கள். அவர்களிடம் சுரேஷ்குமார் இந்திரஜித் போன்றோரின் எழுத்துக்கள் மாட்டினால் கடித்து வைக்கிறார்கள்.
அரசியலில் இந்துத்துவா ஒருவகை மீட்புவாதம் என்றால் இலக்கியத்தில் இவர்கள் மற்றொரு வகை.
Comments