Skip to main content

மூக்குத்தி அம்மன்



கல்ட் அமைப்பு ஒன்று குறித்த படம், எங்கு பார்த்தாலும் வேளிமலை தெரிகிற பச்சைபசேலான எங்களூர் நாகர்கோயிலில் எடுக்கப்பட்டது ஆகிய காரணங்களுக்காக சுமாராகவேனும் இருக்கும் என நான் வெகுவாக எதிர்பார்த்த படம்மூக்குத்தி அம்மன்”. அதனால் தீபாவளியன்று முதல் வேலையாக அதைப் பார்க்க உட்கார்ந்தேன். ஏங்கல்ஸ் ராமசாமி எனும் ஆர்.ஜெ பாலாஜி முன் மூக்குத்தி அம்மன் தோன்றுகிற அந்த காட்சி வந்ததும் இந்த படம் நிச்சயம் படுத்து விடும் எனப் புரிந்து போனது. ஏனென்றால் படம் அங்கிருந்து அல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?

 ஒரு படத்தை அதன் முதல் 8 நிமிடங்களுக்குள் ஆரம்பித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு முதல் முப்பது நிமிடங்களை பாத்திர அறிமுகங்களுக்கே செலவழிக்கிறார்கள். இண்டெர்வல் பிளாக்கின் போது பிரதான பாத்திரம் அல்லது நாயகன் எதிர்கொள்ளும் ஒரு எதிர்பாராத தடையை காட்ட வேண்டும். ஆனால் நம்மவர்கள் அப்போதுதான் நாயகனின் இலக்கையே காட்டுவார்கள். கதையில் ஒருவரது விழைவே இயக்குவிசையாக இருக்க வேண்டும். இதில் அப்படி ஒன்றே இருப்பதாகத் தெரியவில்லை. நாயகன் பல சமயங்களில் அம்மனுக்கு டம்மியாக இருக்கிறான். அம்மனின் விழைவை பற்றியதே கதையெனில் அம்மனுக்கு சகல சக்தியும் உள்ளது. அவருக்கு தடைகள், சிக்கல்கள் இருக்க முடியாது. ஆக கதையே இருக்க முடியாது. இந்த கதையை எழுதியவர்மை டியர் குட்டிச்சாத்தானையாவதுஒரு மாடலாக வைத்திருக்கலாம். அதாவது சின்னச் சின்ன வித்தைகள் செய்வது தவிர வேறெந்த ஆற்றலும் இல்லாத ஒரு எளிய சிறுதெய்வம். அந்த தெய்வத்தின் களங்கமின்மை, அதன் சவால்கள் என கொண்டு போயிருந்தால் அம்மன் மீது ஒரு இரக்கம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு நம்பகத்தன்மையும் அதிகமாகும்.

 அல்லதுகடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்கதையை இதன் இயக்குநர் படித்திருக்கலாம். அதில் சிவபெருமான் சாமான்யராக வரும் போது நிகழும் பகடியே சுவாரஸ்யம். அதைப் போல அம்மனை மக்களோடு மக்களாக உலவ விட்டிருக்கலாம், நயனுக்கு நவீன உடைகளை அளித்து கதையை வண்ணமயமாக்கி இருக்கலாம். “இப்ப என்னாங்கிற?” போன்ற தொனியை அம்மனாக அவர் பேசும் செந்தமிழுடன் முரணாக்கினாலே நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த அம்மன் ஏதோ மாலில் இறுக்கமான ஜீன்ஸுடன் உட்கார்ந்து பானிபூரி தின்கிற இளம்பெண்ணைப் போல படம் முழுக்க எனக்கென்ன எனத் தோன்றுகிறார். அவ்வப்போது முகம் சிவக்கிற கொடுமை வேறு.


அல்லது பழைய பாணி அம்மன் படங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுக்க வேண்டுமென்றால், ஒரு பக்தி சொரூபமாக, சரியான நேரத்தில் இறுதியில் மட்டும் காட்சி கொடுக்கிறவராக அம்மனைப் படைத்திருக்கலாம். ஆனால் இப்படத்தில் இரண்டுங்கெட்டானாக இருக்கிறது.


சிறுதெய்வமொன்று பெருதெய்வ வியாபாரியான ஒரு கல்ட் சாமியாரை எதிர்க்கக் கிளம்புகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான ஒற்றை வரி. ஆனால் அதை கதையாக்குவதில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ரொம்ப குழந்தைத்தனமாக அபத்தமாக முடிந்து விட்டது


நயன்தாரா என்னதான் கஜகஜ என ஒரு அம்மன் கெட்டப்பில் வந்தாலும்என்னை ஏதாவது பண்ணேன்என்கிற மாதிரி ஒரு மஜாவான உடல்மொழியைக் காட்டுகிறார். இது உறுத்தலாக இருக்கிறது


மற்றொரு பிரச்சனை: ஒரு கல்ட் அமைப்பு தீயது, நில ஆக்கிரமிப்பை செய்கிறது, அதனால் அதை எதிர்க்க வேண்டும் என்பது கதையாகாது. அந்த ஆக்கிரமிப்பினால் நேரடியாக பாதிக்கப்படும் ஒருவன் அதை மீட்க செய்வதே கதையாக இருக்கும். அவசர உப்புமா போல அவசர கதையொன்றை தயாரித்து நயனின் தோற்றம் மற்றும் பாலாஜியின் நகைச்சுவையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார்கள்.


இந்த படத்தில் எனக்குப் பிடித்தது இதன் அரசியல் மட்டும் தான். வெறுமனே சண்டை, காதல், நடுநடுவே தலித் / இடதுசாரி அரசியல், பெண்ணியம் தூவி மசாலா படங்கள் வரும் சூழலில், நித்தி எனும் ஒரு மகத்தான சப்ஜெக்ட் பிறந்து ஒரு சூறாவளியாக சுற்றின தமிழ் மண்ணில் ஏன் அதைப் பற்றியெல்லாம் ஒரு படம் கூட இன்னும் வரவில்லை? வீடு, குடும்பம், பங்காளி சண்டை, பெண்ணுடல் போன்றவற்றைத் தாண்டி இங்கே பேச நூறு நூறு கதைகள் இருக்கின்றன என்பதைமூக்குத்தி அம்மன்காட்டுகிறது. என்ன இதை ஒழுங்காக எடுத்திருந்தால் இன்னும் சில நல்ல பகடிகள் வந்திருக்கும். “மூடர் கூடம்எடுத்தாரே நவீன் அல்லதுசூப்பர் டீலக்ஸ்தியாகராஜன் குமாரராஜா கையில் எடுத்திருக்க வேண்டிய ஒற்றைவரி இது.


இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி: நாயகன் தன் தங்கையை பள்ளிக்கு கொண்டு போய் விட்டுவிட்டு அங்கு எதிர்படும் சிஸ்டரிடம் தன் தங்கை இப்போதெல்லாம் சாப்பிடுமுன் பிரேயர் பண்ணுகிறாள், ரகசியமாய் சிலுவை வரைகிறாள், “நாங்க ஆர்த்தொடெக்ஸ் ஹிந்தூஸ் சிஸ்டர்என்று புகார் சொல்லுவான். அதற்கு சிஸ்டர் நாங்கள் யாரையும் மதமாற்றுவதில்லை என்று விட்டு, அப்பெண் குழந்தையை ஒரு கிறித்துவப் பெயரால் குறிப்பிடுவார். (நகைமுரணைப் பாருங்கள்.) அப்பெயரால் பின்னர் அவன் அவளை அழைக்க அவள் திரும்பிப் பார்ப்பாள். இதை ஏன் பிடித்திருக்கிறேன் என்றால் எங்களூரில் மிஷினரி பள்ளிகளில் படிக்கும் இந்துப் பிள்ளைகளில் சிலருக்கு கிறித்துவம் மீது ஒரு பிடிப்பு வந்து விடும். இது நேரடியான மதமாற்றம் அல்ல. அந்த சூழலில் இருக்கிற மாணவர்களுக்கு அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பதின் பருவத்தில் தேவாலய இசை, சடங்குகள், விவிலியம் மீது பற்று ஏற்படும். சிலர் ரகசியமாய் வீட்டில் விவிலியத்தை வைத்து படிக்கவும், ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்கு போகவும் செய்வார்கள். எனக்குத் தெரிந்த யாருக்கும் அப்படியான பற்று மதமாற்றம் வரை சென்றதில்லை (ஆனால் காதலுக்காக கிறித்துவத்துக்கு மாறுவது என் உறவுகள் இடையிலேயே நடந்ததுண்டு.) எனக்குத் தெரிந்து இதுவும் தமிழ் சினிமாவில் பேசப்படாத ஒரு சங்கதி. ஏனென்றால், நாம் ஒன்று படங்களில் சிறுபான்மையினரே இல்லாமல் உலகமே இந்துக்களால் ஆனது என்கிற மாதிரி சித்தரிப்போம், இல்லாவிட்டால் கிறித்துவர், இஸ்லாமியர் குற்றங்குறையற்ற தூய ஆத்துமாக்கள், ஆத்ம சோதரர்கள் என ஒரு பில்ட் அப் கொடுப்போம். ஆனால் மதங்களிடையே உள்ள இந்த சின்னச்சின்ன பதற்றங்களை நகைச்சுவையுடன் தொட்டுக்காட்டுவது முக்கியம். கொஞ்சம் வலிந்து பேசினால் அது மதக்காழ்ப்பாகி விடும். இந்த படத்தில் அதை சரியாக கையாண்டிருக்கிறார்கள்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...