Skip to main content

இப்போது பேசாதே எனும் அதிகாரம்



எப்போது ஒருவரை மதிப்பிட்டு எழுதலாம் என்பதைக் குறித்து அடிக்கடி எனக்கு சொல்லப்படும் அறிவுரை ஒருவர் காலமாகும் போது இதைத் தவிர்க்க வேண்டும் என்பது. காரணம் மக்கள் மனம் புண்படலாகாது என்பது. இதையே நீங்கள் ஒருவர் விருது வாங்குவது போன்ற சாதனைகள் படைக்கும் போதும் சொல்லலாம். ஒரு நடிகருக்கு பத்மஶ்ரீ வழங்கப்படும் தருணத்தில் நீங்கள் சுலபத்தில் அவரை விமர்சனபூர்வமாய் மதிப்பிட முடியுமா? அவரது ரசிகர்கள் கொந்தளித்துப் போய் விட மாட்டார்களா? ஆனால் இந்த இரண்டையும் விட்டால் அவரைப் பற்றி பேச வேறு சிறந்த தருணம் ஏது?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை ஒரு துயர நினைவு நாளாக சில இஸ்லாமியர் அனுஷ்டிப்பதுண்டு. எமர்ஜென்ஸி இயற்றபட்ட நாள் வரும் போது அதைப் பற்றி விமர்சனக் கட்டுரைகள் நாளிதழ்களில் வருவதுண்டு. இப்படி நாம் நினைவுகொள்ளத்தக்க எத்தனையோ தினங்கள் வரலாற்றில் உண்டு. அப்போது பேசுகிறவற்றை எப்போதும் பேசலாம் தான், ஆனால் அப்போது பேசும் போது கிடைக்கும் கவனமும் முக்கியத்துவமும் மற்ற சந்தர்பங்களில் இராது. இது ஒரு கருத்தை நோக்கி கவனம் திரும்ப வேண்டும் எனும் நோக்கமே அல்லாது கருத்தாளர் மீது திரும்ப வேண்டுமென்பதல்ல. ஒருவரது மறைவும் அப்படியான ஒரு சந்தர்ப்பமே. அப்போது அவரை அவதூறு செய்யக் கூடாது எனக் கோரலாம். ஆனால் அவரை புறவயமாய் மதிப்பிடலாகாது, அவரை பாராட்ட மட்டுமே செய்யலாம், அல்லது மௌனமாய் போய் விட வேண்டும் என்று வலியுறுத்துவது status quoவை தக்க வைக்க வேண்டும், ஒரு மாற்றுக் கருத்து கவனம் பெற்றுவிடக் கூடாது எனும் விருப்பம் மட்டுமே. அதை மறைக்கத் தான் bad taste, மனம் புண்படுகிறது என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமான மாற்றுக் கருத்தென்றால் “சொல்லி விட்டு போகட்டும்” என தள்ளி கைகட்டி நின்று பார்ப்பார்கள்.


யோசித்துப் பாருங்கள், ஒரு அரசியல் தலைவர், நடிகரின் நினைவு தினமன்று அவரை நீங்கள் கராறாய் மதிப்பிட முடியாது. ரசிகர்கள் குமுறி விடுவார்கள். கும்பல் மனப்பான்மை என்றுமே அதை அனுமதிக்காது. ஏனென்றால் ஒரு பிரபலம் அல்லது தலைவரை ஒரு செண்டிமெண்டின் மீது பிம்பமாய் கட்டியெழுப்புகிறோம். உண்மை மற்ற சந்தர்பத்தில் பேசப்பட்டால் பிரச்சனையில்லை, ஆனால் நினைவுதினம் அன்று கூடாது, அப்போது அது கவனம் பெற்று விடக் கூடாது என பதறுவார்கள். ஏனென்றால் கவனம் பெறத்தக்க சந்தர்பங்களை அதிகார மையங்கள் தம் வசம் வைத்துக் கொள்ள, கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். பிக்பாஸில் மங்கலம்-அமங்கலம் பற்றின சர்ச்சை நினைவிருக்கும். சுரேஷ், அர்ச்சனா போன்றோர் பலரும் அவ்வீட்டில் ஒரு மங்கலமான தருணத்தில் விதவைகள் பற்றி பேசப்படுவதை விரும்பவில்லை. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிறகு பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பிறகென்றால் எப்போது? யார் கவனத்திலும் அது இல்லாத போது. கும்பல் கலாச்சாரமும் இப்படி சில சந்தர்பங்களை பிறருக்கு அனுமதிக்காமல் ஒரு அதிகார மையமாகிறது. இதை ‘எங்கள் உணர்ச்சி காயப்படுகிறது’, அசந்தர்ப்பமான பேச்சென்று சொல்லி தம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.


இந்த கும்பல் அதிகாரம் இலக்கியத்திலும் வந்து சற்று காலமாகி விட்டது. ஒரு ஆளுமை மறையும் போது வரும் அஞ்சலிகள் மட்டுமல்ல, நினைவு மலர்கள் கூட முழுக்க முழுக்க ஒற்றைக் குரலில் ஒலிப்பது இதனாலே. உங்களது கருத்தை புகழ்ச்சியாக மாற்றினால் அதற்கு ஒரு அதிகாரம் கிடைத்து விடும். இது பேசுவதற்கான அதிகாரம். இதுவே go corona என பாத்திரங்களை முழக்கிய போது பொதுமக்களுக்கு கிடைக்க ஒலியெழுப்புதலின் அதிகாரம். இது ஒலியெழுப்பாதவர்கள் துரோகிகள் எனும் அதிகாரம். தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது யாரெல்லாம் எழுந்திருக்காமல் இருக்கிறார்கள் என கண்காணிப்பதில் கிடைக்கும் அதிகாரம். ஒழுக்கத்தின் அதிகாரம். அனுசரித்து செல்வதில் உள்ள அதிகாரம். Status quoவின் அதிகாரம்.


இதில் மிகப்பெரிய கொடுமை அதிகமாய் உணர்ச்சிவசப்படுவது காலமான ஆளுமையுடன் நேரடியான எந்தவித தொடர்பிலும் இல்லாதிருந்தவர்களே என்பது. அவர்களே கம்பை சுழற்றிக் கொண்டு “வாயை மூடுடா” என முதலில் கத்துவது.   


ஆனால் இந்த கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இலக்கிய உலகத்தில் உள்ள இத்தகைய அதிகார விளையாட்டை ரொம்ப காலமாய் கவனித்து வருகிறேன். எப்போதுமே இவர்கள் எதைச் செய்யக் கூடாது என்கிறார்களோ அதையே செய்ய வேண்டும். ஏனென்றால் அதுவே நியாயமாக இருக்கும். நாம் எப்போது பேச வேண்டும் என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...