Skip to main content

நீயா நானாவின் “இன்றைய காந்தி”



இன்றைய இளைஞர்களின் சாதித் திமிர் குறித்தநீயா நானாபைப் பார்த்த போது அதன் காந்திய நிலைப்பாடுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஏமாற்றத்துக்குள்ளாக்கியது - ஒருவேளை நான் பங்கெடுத்திருந்தால் இதை எடுத்துக்காட்டியிருப்பேன்


சாதிகள் இருக்கட்டும், ஆனால் பரஸ்பரம் வெறுக்காமல், ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒத்திசைவுடன் இருக்கட்டும் என காந்தி வலியுறுத்தினார். அவர் வாழ்ந்த அதே காலத்தில் தான், அம்பேத்கர் சாதி ஒழிய வேண்டும் எனக் கோரினார். அவர் சாதி குறித்த எழுதிய எங்குமே சாதிக்குள் சமத்துவம் பேணலாம் எனச் சொல்லவில்லை, ஏனென்றால் அது ஒரு பாசாங்குப் பேச்சு என அவர் உணர்ந்திருந்தார்.

இவ்விதத்தில், “நீயா நானாவில்சமஸ் ஒரு கச்சிதமான சிறப்பு விருந்தினராக இருந்தார். இந்திய பாரம்பரியத்தின் மையத்தில் உள்ள வைதீக மதத்தின் மீது இருக்கும் புற்றுநோயான சாதியத்தை ஒரு சாதி எதிர்ப்பாளர் இன்னும் நேர்மையாக விமர்சித்து அங்கு பேசியிருப்பார். ஆனால் சமஸ் மேல்சாதிகளின் பதற்றம் எப்படி ஒரு வெறுப்பரசியலாக திரள்கிறது என அங்கே ஒரு கிள்ளலும், இட இதுக்கீடு எப்படி சமூகநீதிக்கு அவசியம் என இங்கே ஒரு விள்ளலுமாகசாதிய சமத்துவத்தைகாந்திய லாஜிக்குடன் பாதுகாத்து அருளாசி கூறினார்.

 எனக்கு இதையெல்லாம் பார்த்த போது எழுந்த கேள்வி சாதியமைப்பை வெறுமனே இனக்குழுக்களின் கூட்டிருப்பாக கருத முடியுமா என்பதே. ஏனென்றால், சாதி என்பதும் இனக்குழு என்பதும் ஒன்றல்ல. இனக்குழு பிற குழுக்களுடன் உறவாடாமல் தனித்து வாழும் ஒன்று. ஆனால் சாதி என்பது ஒரு படிநிலை. படிநிலை இன்றி சாதியில்லை. மனுநீதி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடுகிற அதே படிநிலையைத் தான் இன்றும் பின்பற்றுகிறோம். “நீயா நானாவில்ஒரு சாதிக்காரர் மற்றொரு சாதிக்காரரிடம் கெத்து காட்டும் போது தன்னை மேல் என்று தானே காட்டிக்கொள்ள உத்தேசிக்கிறார் என கோபி கேட்க அதற்கு பதில் சொல்லும் அவர்நாங்க எங்களோட பெருமையைத் தான் காட்டிக்கிறோம், வேறு யாரையும் மட்டம் தட்டலஎன்கிறார். கோபி மீண்டும் மீண்டும்எப்படி மட்டம் தட்டாம உங்க பெருமையை கட்டிக்க முடியும்? எனக் கேட்கிறார். நான் அதையே தான் மொத்த ஷோவையும் நோக்கி கேட்க விரும்பிகிறேன்: “பெருமையும் காட்டாமல், மட்டமும் தட்டாமல் எப்படி சாதிக்குள் இருக்க முடியும்?” முடியாது, ஆனால் அதை வெளியே காட்டி பிரச்சனையை பெரிதுபடுத்தாதீர்கள் என்பதே நீயா நானா அணியின் அரசியலாக இருக்கிறது.


எதார்த்தத்தில் நடப்பது என்ன? சாதிக்கட்சிகளின் தரப்பாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சில்லுண்டிகள் மட்டுமல்ல, சாதியை மைக்கை பிடித்து முழங்காமல் வாழும் அமைதியான மத்திய வர்க்கத்தினரும் அதே அதிகார அரசியலை தான் நுட்பமாக எடுத்தாள்கிறார்கள். ஒரு தெருவில் நான்கு குடும்பத்தினர் சேர்ந்து பழகும் போது அதற்குள் ஒரு சாதி சார்ந்த வரையறை தோன்றுகிறது, ஒரு அலுவலகத்திலும் இப்படியே நடக்கிறது. சில இடங்களில் சாதிப்பாசம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இது ஒரு புண். இந்த புண்ணில் சீழ் வந்தால் மட்டும் தான் பிரச்சனை, மற்ற சமயங்களில் புண்ணைத் தடவி பூசை செய்யலாம் என்பதே காந்திய முட்டுக்கொடுத்தல்


அதாவது சாதியமைப்பு அதனளவில் ஆபத்தானதோ அநீதியானதோ அல்ல, சாதித் திமிர், சாதி வன்முறை மட்டுமே தப்பானது என்பது ஒரு மிகப்பெரிய பாசாங்கு. சாதியமைப்புக்குள் இருப்பது ஒரு வைரஸ் தொற்று என்றால், அது ஏற்படுத்தும் கசப்புகளும் வெறுப்பரசியலும் அதன் நோய்க்கூறுகள்


இந்த இளைஞர்கள் ஏன் இப்படி வெளிப்படையாக சாதித்திமிர் காட்டுகிறார்கள் என மேம்போக்காக இதை அலசாமல் இரண்டு கேள்விகளைநீயா நானாஅணி எடுத்தாண்டிருக்க வேண்டும்:


1) பொருளாதார, சமூக வளர்ச்சியால் சாதிப்படிநிலையில் ஒரு நடுக்கம், மறுசீரமைவு நடிக்கும் போதே கலவரங்கள் துவங்கி சாதித்திமிர் அடவாடித்தனங்கள் நிகழ்கின்றன. அதாவது, கீழே இருக்கும் சாதிக்காரர்கள் மேலே வரத் துவங்கும் போதே மேல்சாதிக்காரர்களிடம் இருந்து எதிர்ப்பு ஒரு வன்முறையாக, அகந்தையாக வெளிப்படுகிறது - இதை ஒருவர் லேசாக சுட்டிக்காட்டினார், ஆனால் கோபி பட்டும்படாமல் கடந்து விட்டார். ஆக அமைதி என நாம் கேட்பது சாதி அமைப்புக்குள் பெரிய மாற்றங்கள், நிலைகுலைவுகள் வராமல் இருந்தபடி இருக்க வேண்டும் என்பதே. நாளை தாழ்த்தப்பட்டோர் கூடுதலாக மேலே வர நேர்ந்தால் இதைவிட அதிகமான வெறுப்பரசியல் தோன்றத்தான் செய்யும் - அது (சமஸ் சொல்வதைப் போல) மேல்சாதியினரின் ஒரு தற்காப்பு உத்தி அல்ல, சாதியமைப்பு தன்னை மறுசீரமைப்பு செய்வதற்கான உத்திஇந்த சிக்கலுக்குள் செல்லாததனால் இந்த அத்தியாயம் மேலோட்டமாகி விட்டது. கடைசியில் எல்லாரும் பரஸ்பரம் அறிவுரை சொல்லி சமாதானமாகி விட்டார்கள். ஆனால் வெளியே போய் இப்படியே தான் இருப்பார்கள், வேறு வழியில்லை.


2) சாதிக்கும் மதத்துக்குமான, பாகுபாடுகளுக்கும் இறை எனும் கருத்தாக்கத்துமான தொடர்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். ஒரு முழுமுதல் தனி உண்மை என இறைவன் தோன்றிய பின்னரே முழுமுதல் இனம், முழுமுதல் ஆண்ட வர்க்கம், முழுமுதல் சாதி என ஒவ்வொன்றும் அதன் சாயலில் ஏற்படுகிறது. இறைவனைக் கொல்லாமல், அதனுடனே தனிப்பெரும் தகைமை கொண்ட ஒவ்வொரு கருத்துருவையும் கொல்லாமல், சாதியைக் கொல்ல முடியாது. இந்தியாவில் வைதீகக் கடவுளர் சாதியின் ஆன்மாவாக இருக்கிறார்கள் என்றால், மற்ற நாடுகளில் கர்த்தர் அல்லாவும் மக்களை ஏற்றுத்தாழ்வுக்குள் ஆழ்த்துகிறார்கள்; நீட்சே சொன்னதைப் போல தாழ்வுமனப்பான்மையை, குற்றவுணர்வை இந்த உலகியல் வாழ்க்கை மீது ஏற்படுத்தி, அதில் இருந்து மீள நீங்கள் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து ஒரு பெரிய அநீதியான அதிகார அமைப்பை கட்டியெழுப்புகிறார்கள். வைதீக மதத்தினர் இந்த தாழ்வுணர்வை வளர்த்தெடுத்தே இந்தியா முழுக்க அடிமைப்படுத்தினால், கிறித்துவ காலனியவாதிகள் உலகம் முழுக்க கிறுத்துவைக் கொண்டு போய் கறுப்பர்களையும் பிறரையும் தாழ்வுணர்வு கொண்டவர்களாக ஆக்கி இனவாதத்தை முன்னெடுத்தார்கள்; அதற்கு முன்பு வெள்ளையர்கள் தமக்குள்ளே ஏற்பட்ட சமூகப்பிளவுகளை நியாயப்படுத்தவும் கர்த்தரை பயன்படுத்தினார்கள்.

 நீங்கள் வாழ்க்கையை சாராம்சப்படுத்துவதன், essentialize பண்ணுவதன் அரசியலைப் பேசாமல் சாதியை, இனவெறியை பற்றி பேச முடியாது.

இதைத் தொடாமல், ஏதோ வெங்காய் விலையேற்றம் போல இதை ஒரு பேச்சுவார்த்தையில் முடிக்கிறோம் என கையாண்டதே, 90 வருடங்களுக்கு முன்பு காந்தி பேசிய அதே அபத்தமான லாஜிக்கை வைத்து, அம்பேத்கரில் இருந்து பெரியார், அயோத்திதாசர் வரை யாரையும் தொடாமல் இதைப் பேசியதே “நீயா நானா” குழுவினர் செய்த தவறு.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...