Skip to main content

ராஜன் குறையின் “மறுப்புக்கு” ஒரு மறுப்பு



தமிழினி இணையதளத்தில் நான் எழுதிய “இந்து ராஷ்டிரம் குறித்து தெரிதா என்ன சொல்வார்?” எனும் கட்டுரைக்கு ராஜன் குறை ஒரு எதிர்வினையை அதே இணையதளத்தில் இம்மாதம் எழுதியிருக்கிறார். அதை எதிர்வினை, விமர்சனம் எனக் கூறுவது கூட மிகையே - ஒருவித மறுப்பு என்பேன். நான் எதைக் கூறினேன், அவர் எதை மறுத்தார்?

நான் கூறியது:

இந்து ராஷ்டிரத்தின் உருவாக்கம், அதன் செயல்முறை குறித்ததல்ல அக்கட்டுரை. அது இந்துத்துவர்களின் வாதமற்ற வாதங்கள், அவர்களுடைய கோடாபாட்டு நிலைப்பாடுகளில் உள்ள ஒருவித “அ-காலமான” நோக்கு பற்றின விளக்கம். ஏன் இந்துத்துவர்களுடன் தர்க்கபூர்வமாய் விவாதிக்கும் போது நமக்கு அவர்கள் பைத்தியமாகவும் அவர்களுக்கு நாம் துரோகிகளாகவும் தோன்றும்படியாக ஒரு பெரும் பள்ளத்தாக்கு இரு தரப்புக்கும் இடையில் தோன்றுகிறது என இக்கட்டுரை பகடியாய் அலச முயல்கிறது. அதற்கு தெரிதாவின் பார்வையை கடன்வாங்கிக் கொள்கிறது.

ராஜன்குறை சொல்வது:

 என் கட்டுரையில் என்ன பிழை, அது ஏன் தவறு என அலசி நிறுவுவதோ அல்லது வெறுமனே இதுதான் பிரச்சனை என குறிப்பிடுவதோ நியாயமான விமர்சனமாக இருக்கும். ஆனால் ராஜன்குறை இந்த பாணியிலான அலசலால் என்ன பயன் எனக் கேட்கிறார். “பயன்” என்பதை அவர் எப்படி புரிந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை. இந்துத்துவ கனவை, லட்சிய சிந்தனையை நான் பகுத்தறிவினால் புரிந்து கொள்ள முடியும் என நம்புவில்லை. பின்னமைப்பியல் உளவியல், தெரிதாவின் பார்வை (அதை விமர்சனம் எனக் கூறுவதை தெரிதா ஏற்க மாட்டார்) கொண்டு இதைப் புரிந்து கொள்ள முடியுமா என முயல்கிறேன். அதையும் நான் இங்கு ஆய்வு முறையில் நிறைய மேற்கொள்களுடன் (லக்கான், தெரிதா என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என விளக்கி, அவர்களின் சொல்லாடல்களுடன்) விரிவாக அலசுவதில்லை; நான் என்னுடைய எந்த கட்டுரைக்கும் ஆய்வு முறைமையை பயன்படுத்துவதில்லை, அது வாசிப்பின் சரளத்தை தடை செய்யும் என்பதால். ராஜன்குறை இதற்குப் பதிலாக ஆட்சியியல், குடியாட்சி குறித்த லட்சியவாத தத்துவ / கோட்பாட்டு சிந்தனைகள், வரலாற்றுவாதம் சார்ந்து இதை எழுதியிருக்க வேண்டும் என்கிறார் அது அவரது முறைமை - குறிப்பாக, ஒவ்வொரு சிந்தனைக் குறுக்கீட்டையும் ஒரு நீண்ட வரலாற்று மரபின் ஒரு கண்ணியாகப் பார்ப்பது. 

அவரது வரலாற்றுவாதத்தில் எனக்குள்ள பிரச்சனை அது ஒரு லட்சியத்தை முன்வைத்து ஒரு படிநிலையை உண்டுபண்ணி, அத்தனை எத்தனங்களும் மனிதன் ஒரு மேலான இடத்தை அடைவதற்காக செய்யப்படுபவை, இந்த வரலாற்று வளர்சிதை மாற்றங்களில் சிலநேரங்களில் பாதகமான விளைவுகளும் ஏற்படும், அவற்றை எப்படி சரி செய்வது என வந்து முடியும். இந்த மானுட-மையவாதத்துடனும் எனக்கு உடன்பாடில்லை. அதனாலே அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு, எந்திரமயமாக்கல், காலனிய படையெடுப்புகள், நவீன மனித சுயத்தின் உருவாக்கம் என கோவையாக வாசித்து, இன்றுள்ள அரசியல் எதார்த்தத்துக்கு வந்து ஒரு நேர்கோட்டு சித்திரத்தை உண்டு பண்ணுவதை நான் விரும்புவதில்லை. இது வேண்டாம் என்றல்ல, ஆனால் இது மட்டும் போதாது என்கிறேன். ஏனென்றால் இது சுலபத்தில் வரலாற்று மாந்தர்களை கட்டமைத்து, அவர்களை மையத்தில் கொண்ட இயக்கங்களுக்கு ஒரு கதையாடலை உருவாக்கி, நடைமுறை தளத்தில் நிகழும் முரணான, ஒழுங்கின்மையான அதிகார நகர்வுகளுக்கு ஒழுங்குமுறையை, நியாயத்தை அளிக்கும். அவரைப் போல ஒரு சிறந்த அறிவார்ந்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி அதன் மூலம் ஊழல், குடும்ப அரசியல் போன்ற நடைமுறை “ஒழுங்கின்மைகளை” (chaos) நான் நியாயப்படுத்த முயலமாட்டேன். தெளிவான குளத்தில் ஒரு சிறிய கல்லை விட்டெறிவது, அப்போது நிகழும் கலவரத்தை ரசிப்பது, அதன் சிதறலுக்கு ஒரு சிறிய நியாயத்தை உருவாக்குவது மட்டுமே என் இலக்கு. இது “இரைச்சல்” என ராஜகுறை சொன்னால் அது அவரது விருப்பம். ஆனால் அது ஒரு நியாயமான விமர்சனம் என சொல்ல மாட்டேன். நியாயமான விமர்சனம் ஒரு சிந்தனை ஓட்டத்தின் தளத்துக்குள் நின்றே செய்யப்படுவது, தெரிதாவைக் கொண்டு நிகழ்த்தப்படும் சிந்தனையை தெரிதாவை மட்டும் அல்லது அவரை ஒத்த பின்னமைப்பியல் தத்துவ ஞானிகளை வைத்து உரசிப்பார்ப்பது, அலசுவது. முழுக்க வெளியே நின்று பார்த்து ஏன் ஒரு வரலாற்று சித்திரத்தின் அடிப்படையில் சிந்திக்க மாட்டேன் என்கிறாய் என எரிச்சல்படுவதல்ல. இந்த விசயத்தைப் பற்றி மரபார்ந்த முறையில் இப்படித்தான் பேச வேண்டும் என வாய்க்கால் பரப்பை நிறுவுவதல்ல.


மற்றபடி, ராஜன்குறை மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவரது சிந்தனைகள், எழுத்துக்கள் முக்கியமானவை. சமூக அரசியல் தளத்தில் அவர் நீதியின் பக்கம் நிற்பவர், எந்த கணத்திலும் துளியும் பிசகாதவர், தத்தளிக்காதவர், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுபவர். இந்த “எதிர்வினையால்” அவர் மீதான என் மதிப்பீடு மாறப்போவதில்லை. அவர் இவ்விசயத்தில் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது (ஒரு பக்கம் அது நியாயமல்ல என ஏமாற்றமளித்தாலும்) எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக, ஆழமாக எழுதுவது எப்படி என்பது குறித்து சில படிப்பினைகள் எனக்குக் கிடைத்துள்ளன. அதற்கு அவருக்கு என் நன்றி!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...