Skip to main content

நாகார்ஜுனரை அறிதல் (1)



 நிலைகள் குறித்த ஒரு விசாரணை


இந்த (முதல்) அத்தியாயத்தில் நாகார்ஜுனர் காரணங்களின் சாரமின்மை பற்றி விவாதிக்கிறார். ஏன் காரணங்கள்? உலகம் குறித்த, இருப்பு குறித்த கற்பிதங்கள் பொதுவாக அவற்றை சாராம்சப்படுத்துவதால் விளைகின்றன. அதற்கு கருவியாக இருப்பவை காரணங்கள். காரணமில்லாமல் என்ன உண்டு என நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் இதைப் படிப்பதற்கு, நான் இதை எழுதுவதற்குக் கூட ஏதோ ஒரு காரணம் உண்டில்லையா? ஆனால் இக்காரணங்கள் தம்மளவில் முதல்முழுமையானவை அல்ல; பல துணைக்காரணங்கள், சங்கதிகள், பௌதீக காரணிகள், புலனுணர்வு என பல விசயங்கள் தொடர்ந்து இக்காரணங்கள் செயல்பட உதவுகின்றன. இவையும் கூட பல துணை சங்கதிகளை சார்ந்திருக்கின்றன. இப்படி இது பின்னுக்கு சென்று கொண்டே இருக்கின்றன. எதற்கும் சாராம்சமான காரணமிருக்க முடியும் எனும் நம்பிக்கையே பொதுவாக நம்மை செலுத்துகிறது. அது பல துயரங்களுக்கு, பிரமைகளுக்கு, மதவாதம், கடவுள் போன்ற கருத்துக்களுக்கு, இனவாத, சாதிய, பாலின பாகுபாடுகளுக்கு, இறையாண்மை போன்ற அரசியல் கட்டமைப்புகளுக்கு, அவற்றினால் விளையும் அரச வன்முறை, அதிகார குவிப்பு ஆகியவற்றுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முதலீட்டிய பொருளாதாரத்தில் பணம் சாராம்சப்படுத்தப்படுவதால் வறுமை தோற்றுவிக்கப்பட்டு பெரும்பகுதி மக்கள் வாடுகிறார்கள். ஆகையால் நாகார்ஜுனர் காரணங்களை போட்டு மிதித்தபடி தன் புத்தகத்தை ஆரம்பிக்கிறார். அத்துடன் காரணங்களின் இடத்தில் சாராம்சமற்ற நிலைகளை பரிந்துரைக்கிறார்.


1. Neither from itself nor from another,

Nor from both

North without a cause,

Does anything whatever, anywhere arise.

 

தன்னில் இருந்தோ மற்றொன்றில் இருந்தோ

இரண்டிலும் இருந்தோ

அல்லது காரணமே இன்றியோ

எதுவும் எங்கும் தோன்றுவதில்லை.”


இந்த எளிமையான பாடலுக்குள் சுருக்கமாக நாகார்ஜுனர் தன் காலத்தில் ஒரு விசயம் எப்படித் தோன்றுகிறது என்பதற்கு பரவலாக நம்பப்பட்ட காரணங்கள் குறித்த சில கருத்துக்களை மறுக்கிறார். இவை நான்கு:

) ஒரு விசயம் சுயமாக தன்னியல்பாகத் தோன்றுகிறது

உங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு குடிகாரன் இருக்கிறான். தினமும் முழுபோதையில் ரோட்டில் கிடந்து சலம்புகிறான். அவன் இயல்பிலேயே போதை பேர்வழி, கெட்டவர், அறிவில்லாதவன், பண்பில்லாதவன் அதனால் அப்படி இருக்கிறான் என சிலர் சொல்லுவார்கள்.

) மேலும் சிலர், இல்லை அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்கள் அவனை அப்படி குடியை நோக்கித் தள்ளி விட்டது. மற்றபடி இயல்பில் அவன் நம்மைப் போன்றவன் தான் என சொல்கிறார்கள். இது இரண்டாவது கருத்து - அதாவது ஒரு விசயம் மற்றொன்றினால் தோன்றுகிறது.


) அப்போது இதைக் கேட்டுக் கொண்டிருந்தமையமானசிலர் இல்லை, நீங்கள் ரெண்டு பேர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. அதே நேரம் இரண்டு கருத்துக்களையும் அதனளவில் தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் தன்னியல்பில் எதுவாகவும் ஆவதில்லை, ஏனென்றால் அவன் பிறக்கும்போதே குடிக்கவில்லை இல்லையா? அதே போல வெளியில் இருந்து ஒன்று தூண்டுவதால் மட்டுமே ஒருவன் குடிகாரன் ஆவதில்லை. ஏமாற்றங்கள் எல்லாருக்கும் தான் உள்ளன, நாமெல்லாம் இவனைப் போல ஆகவில்லை தானே? ஆனால் அதேவேளை இந்த இரண்டு கருத்துக்களும் இணைந்து வரும் போது அது சரியாக இருக்கிறது என பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுகிறார்கள். இது மூன்றாவது கருத்து.


) இப்படி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அங்கு வரும் ஒருவன்நீங்க சொல்வது தவறு. எல்லா விசயங்களும் தற்செயலாகவே நிகழ்கின்றன, காரணங்களை நீங்களே கற்பிக்கிறீர்கள். எந்த தூண்டுதலும் நோக்கமும் இன்றி ஒன்று அப்படியே ஏற்படுவதுதான் நிஜம்என குழப்புகிறான். இதுவே நான்காவது கருத்து. அதிர்ஷ்டம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோமே அது இந்த தற்செயல் வாதம் தான். ஒருவன் உழைத்தோ திருடியோ பெரும் பணக்காரன் ஆகிறான். நாம்அவனுக்கு செம அதிர்ஷ்டம், எப்படியோ அவனுக்குப் பார்த்து எல்லாம் சரியாக அமைந்து விட்டதுஎன்போம். ஒரு விபத்து ஏற்படும் போது, அதற்கு நாமே காரணமாக இருக்கும் போது, அதன் பாட்டுக்கு நடந்து விட்டது எனச் சொல்லவே விரும்புவோம். காதல் ஒரு மேஜிக் என நம்புகிறவர்கள்அவளைப் பார்த்ததுமே எனக்குள் எதுவோ நிகழ்ந்தது. அப்படியே விழுந்து விட்டேன்என்பார்கள். இதையும் நாகார்ஜுனர் ஏற்பதில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...