Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நாகார்ஜுனரை அறிதல் (1)



 நிலைகள் குறித்த ஒரு விசாரணை


இந்த (முதல்) அத்தியாயத்தில் நாகார்ஜுனர் காரணங்களின் சாரமின்மை பற்றி விவாதிக்கிறார். ஏன் காரணங்கள்? உலகம் குறித்த, இருப்பு குறித்த கற்பிதங்கள் பொதுவாக அவற்றை சாராம்சப்படுத்துவதால் விளைகின்றன. அதற்கு கருவியாக இருப்பவை காரணங்கள். காரணமில்லாமல் என்ன உண்டு என நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் இதைப் படிப்பதற்கு, நான் இதை எழுதுவதற்குக் கூட ஏதோ ஒரு காரணம் உண்டில்லையா? ஆனால் இக்காரணங்கள் தம்மளவில் முதல்முழுமையானவை அல்ல; பல துணைக்காரணங்கள், சங்கதிகள், பௌதீக காரணிகள், புலனுணர்வு என பல விசயங்கள் தொடர்ந்து இக்காரணங்கள் செயல்பட உதவுகின்றன. இவையும் கூட பல துணை சங்கதிகளை சார்ந்திருக்கின்றன. இப்படி இது பின்னுக்கு சென்று கொண்டே இருக்கின்றன. எதற்கும் சாராம்சமான காரணமிருக்க முடியும் எனும் நம்பிக்கையே பொதுவாக நம்மை செலுத்துகிறது. அது பல துயரங்களுக்கு, பிரமைகளுக்கு, மதவாதம், கடவுள் போன்ற கருத்துக்களுக்கு, இனவாத, சாதிய, பாலின பாகுபாடுகளுக்கு, இறையாண்மை போன்ற அரசியல் கட்டமைப்புகளுக்கு, அவற்றினால் விளையும் அரச வன்முறை, அதிகார குவிப்பு ஆகியவற்றுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முதலீட்டிய பொருளாதாரத்தில் பணம் சாராம்சப்படுத்தப்படுவதால் வறுமை தோற்றுவிக்கப்பட்டு பெரும்பகுதி மக்கள் வாடுகிறார்கள். ஆகையால் நாகார்ஜுனர் காரணங்களை போட்டு மிதித்தபடி தன் புத்தகத்தை ஆரம்பிக்கிறார். அத்துடன் காரணங்களின் இடத்தில் சாராம்சமற்ற நிலைகளை பரிந்துரைக்கிறார்.


1. Neither from itself nor from another,

Nor from both

North without a cause,

Does anything whatever, anywhere arise.

 

தன்னில் இருந்தோ மற்றொன்றில் இருந்தோ

இரண்டிலும் இருந்தோ

அல்லது காரணமே இன்றியோ

எதுவும் எங்கும் தோன்றுவதில்லை.”


இந்த எளிமையான பாடலுக்குள் சுருக்கமாக நாகார்ஜுனர் தன் காலத்தில் ஒரு விசயம் எப்படித் தோன்றுகிறது என்பதற்கு பரவலாக நம்பப்பட்ட காரணங்கள் குறித்த சில கருத்துக்களை மறுக்கிறார். இவை நான்கு:

) ஒரு விசயம் சுயமாக தன்னியல்பாகத் தோன்றுகிறது

உங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு குடிகாரன் இருக்கிறான். தினமும் முழுபோதையில் ரோட்டில் கிடந்து சலம்புகிறான். அவன் இயல்பிலேயே போதை பேர்வழி, கெட்டவர், அறிவில்லாதவன், பண்பில்லாதவன் அதனால் அப்படி இருக்கிறான் என சிலர் சொல்லுவார்கள்.

) மேலும் சிலர், இல்லை அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்கள் அவனை அப்படி குடியை நோக்கித் தள்ளி விட்டது. மற்றபடி இயல்பில் அவன் நம்மைப் போன்றவன் தான் என சொல்கிறார்கள். இது இரண்டாவது கருத்து - அதாவது ஒரு விசயம் மற்றொன்றினால் தோன்றுகிறது.


) அப்போது இதைக் கேட்டுக் கொண்டிருந்தமையமானசிலர் இல்லை, நீங்கள் ரெண்டு பேர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. அதே நேரம் இரண்டு கருத்துக்களையும் அதனளவில் தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் தன்னியல்பில் எதுவாகவும் ஆவதில்லை, ஏனென்றால் அவன் பிறக்கும்போதே குடிக்கவில்லை இல்லையா? அதே போல வெளியில் இருந்து ஒன்று தூண்டுவதால் மட்டுமே ஒருவன் குடிகாரன் ஆவதில்லை. ஏமாற்றங்கள் எல்லாருக்கும் தான் உள்ளன, நாமெல்லாம் இவனைப் போல ஆகவில்லை தானே? ஆனால் அதேவேளை இந்த இரண்டு கருத்துக்களும் இணைந்து வரும் போது அது சரியாக இருக்கிறது என பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுகிறார்கள். இது மூன்றாவது கருத்து.


) இப்படி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அங்கு வரும் ஒருவன்நீங்க சொல்வது தவறு. எல்லா விசயங்களும் தற்செயலாகவே நிகழ்கின்றன, காரணங்களை நீங்களே கற்பிக்கிறீர்கள். எந்த தூண்டுதலும் நோக்கமும் இன்றி ஒன்று அப்படியே ஏற்படுவதுதான் நிஜம்என குழப்புகிறான். இதுவே நான்காவது கருத்து. அதிர்ஷ்டம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோமே அது இந்த தற்செயல் வாதம் தான். ஒருவன் உழைத்தோ திருடியோ பெரும் பணக்காரன் ஆகிறான். நாம்அவனுக்கு செம அதிர்ஷ்டம், எப்படியோ அவனுக்குப் பார்த்து எல்லாம் சரியாக அமைந்து விட்டதுஎன்போம். ஒரு விபத்து ஏற்படும் போது, அதற்கு நாமே காரணமாக இருக்கும் போது, அதன் பாட்டுக்கு நடந்து விட்டது எனச் சொல்லவே விரும்புவோம். காதல் ஒரு மேஜிக் என நம்புகிறவர்கள்அவளைப் பார்த்ததுமே எனக்குள் எதுவோ நிகழ்ந்தது. அப்படியே விழுந்து விட்டேன்என்பார்கள். இதையும் நாகார்ஜுனர் ஏற்பதில்லை.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...