Skip to main content

நிலைகள் குறித்த விசாரணை - 2


 

 2.  There are four conditions: efficient condition;

Percept-object condition; immediate condition;

Dominant condition, just so.

There is no fifth condition. 


 “நான்கு நிலைகள் உள்ளன: செயலூக்க நிலை;

பார்வைப் புலன் பொருள் நிலை; உடனடி நிலை;

முதன்மை நிலை; ஆக,

ஐந்தாவதாக ஒரு நிலை இல்லை.”


நான்கு விதமான நிலைகளே உள்ளன, அவற்றினாலே ஒரு விசயம் [சாராம்சமற்று] நிகழ்கிறது, தோன்றுகிறது, இருக்கிறது என நாகார்ஜுனர் சொல்கிறது. அவை எவையெனப் பார்ப்போம்.


) செயலூக்க நிலை (efficient condition): ஸ்விட்சை போடுகிறேன். விளக்கு எரிகிறது. ஏன் என்றால் நான் தான் ஸ்விட்சைப் போட்டேனா, அதனால் எனும் போது அது செயலூக்க நிலை. இது இருத்தலியல்வாதிகளுக்கு பிடித்தமான நிலை. ஒரு விசயம் நிகழும் போது அதன் பின்னுள்ள ஒழுக்கவாத, அறம் சார்ந்த காரண காரிய விளக்கத்தை அவர்கள் மறுக்கிறார்கள். “அந்நியன்நாவலில் மெர்சால்ட் பாத்திரம் சில அரேபியர்களை சுட்டுக் கொல்கிறான். இந்த சம்பவம் ஆல்பர்ட் காமு புறக்காரணங்களால் தூண்டப்பட்டு நாம் செயல்படுகிறோம் எனும் வாதத்தின் மீது செய்யும் பகடியாகும். மெர்சால்டிடம் ஏன் கொன்றாய் என வினவும் போது அன்று வெயில் அதிகமாக இருந்ததால், சூரிய ஒளி கண்ணில் பட்டு எரிச்சல்படுத்தியதால் சுட்டேன் என அபத்தமான ஒரு காரணத்தைத் தருகிறான். மெர்சால்ட்டுக்கு தான் கொன்றவர்கள் மீது எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என்பதால் அதனுடைய தன்னூக்கமும் இதற்கு காரணமாக முடியாது. இருக்கிறேன், செயல்படுகிறேன், அதுவே என் இருப்பு, அதற்கு மேல் எதுவும் இல்லை என்பதே இருத்தியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால் இதை நாகார்ஜுனர் முழுக்க ஏற்க மாட்டார். இது ஒரு நிலை மட்டுமே. மேலும் பல நிலைகள் இதற்குப் பின்னும், இதற்கு சமானமாகவும் செயல்படுகின்றன


) பார்வைப்புலன் பொருள் நிலை (percept object condition) என்றால் சம்மந்தப்பட்ட விசயமோ பொருளோ உயிரோ பார்க்கப்பட்டு, பார்க்கப்படுவதால் ஒரு குறிப்பிட்ட இருப்பைப் பெறும் நிலைக்கு வருவது. இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் - பார்க்கப்படுவதும் மனதுக்கு உள்ளேயும் நடப்பது தான். ஒரு மந்திரவித்தைக்காரர் தன் தொப்பிக்கு உள்ளிருந்து ஒரு முயலை எடுக்கிறார். அப்போது அவர் அப்படி முயலை எடுக்கும் மந்திரவித்தைக்காரராக பார்க்கப்படுகிறார்; அப்படி பார்க்கப்படாமல் அவர் அச்செயலை செய்வது நிகழ் வாய்ப்பில்லை. இதன் பொருள் அவர் அச்செயலை செய்வதில்லை என்பதல்ல, ஆனால் அச்செயல் அதுவாக அவர் அப்படி பார்க்கப்படுவது அவசியம். ஒருவேளை ஒரு செயல் யாரும் பார்க்கப்படாத இடத்தில் நடக்கிறது என்றால் அப்போது செயலில் ஈடுபடுகிறவரால் தன்னையே காணப்பட்டு அதுவாக ஆகிறார். ஒருவர் அவரைப் பார்க்கும் போதும் அவர் தன்னையே அவ்வாறு பார்த்தப்படி தான் இருக்கிறார். ஒருவருக்கு பார்வை இல்லையென்றால் அவர் ஒலிகளால் ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி அதன் வழி பார்க்கிறார். அவருக்கு செவிப்புலனும் இல்லையெனில் அது தொடுபுலனாலும் கற்பனையாலும் மனதில் ஏற்படும் சித்திரமாக இருக்கலாம். ஆக, பார்கக்ப்படாமல், அதனாலான ஒன்றாக உருப்பெறாமல், ஒன்று நிகழ்வதில்லை என்கிறார் நாகார்ஜுனர்.


) உடனடி நிலை (immediate condition): ஒரு செயல் நிகழும் போது அதன் பின்னணியில் பல நிலைகளில் நடக்கிற சின்னச் சின்ன நுண்செயல்கள் இந்த உடனடி நிலையை உண்டு பண்ணுகின்றன. ஸ்விட்சைப் போடும் போது அங்கு மின்சாரம் இருப்பது, மின்சாரம் கடப்பதற்கான மின்கம்பிகள் இருப்பது, மின்கம்பிகளுக்குள் உலோகக்கம்பி வேலை செய்வது, அதில் மின்சாரம் அணுக்களின் செயல்பாட்டால் உருவாவது, இவை எல்லாமே பழுதில்லாமல் செயல்படுவது, இருட்டு அல்லது வெளிச்சம் பருவநிலையால் ஏற்கனவே இருப்பது இப்படி ஒவ்வொன்றுமே ஒளி அங்கே தோன்றுவதற்கு அவசியம். இந்த உபசெயல்களும் பல்வேறு உபசெயல்களை நம்பி இருக்கின்றன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.


) முதன்மைக் காரணம் (dominant condition): ஸ்விட்சைப் போட வேண்டும் எனும் நோக்கம் இருக்கிறதில்லையா இதுவே முதன்மைக் காரணம்

ஆனால் எல்லா நிகழ்வுகளுக்கும் இந்த நான்கு நிலைகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பெண் கர்ப்பமாகிறாள். அதில் செயலூக்க நிலை உண்டு. அவள் உறவு கொண்டது. உடனடி நிலை உண்டு. அவள் உறவு கொண்ட ஆணின் விந்து வெளிப்பட்டது, விந்து கர்ப்பமாக்கும் தகுதியை பெற்றிருந்தது, பல்லாயிரம் விந்துக்களில் ஒன்று சரியாகப் போய் கருவை தைத்தது, கரு அதற்கு தகுதியான நிலையில் இருந்தது, அப்போது அவளுடலில் பௌதீக வேதியல் மாற்றங்கள் சரியான படி நிகழ்ந்தது. இப்படி பல நுண்செயல்கள் இருக்கின்றன. மூன்றாவதாக, அவள் சேதி தெரிந்து கொண்டதும் தன்னை கர்ப்பமானவளாகப் பார்ப்பது. அப்போது அந்த பார்வைப்புலன் பொருள் நிலை உருவாகிறதுஇத்தகவலை பிறரிடம் அவள் பகிரும் போது அவர்களால் அவள் கர்ப்பவதியாக பார்க்கப்படுகிறாள் (அதிர்ச்சி, கோபம், கவலை, பயம் அல்லது மகிழ்ச்சி, பூரிப்பு, கொண்டாட்டம்). “வைகாசிப் பொறந்தாச்சுபடத்தில் ஜனகராஜ் பேசுவதைப் போல (சோற்றைப் போடு என்பதற்குநெருப்பை அள்ளிக் கொட்டு”, முட்டையை வை என்பதற்குஅந்த அணுகுண்டை வை”) இவளும் தன் பெற்றோரிடம்அம்மா நான் குண்டாயிட்டேன்என சொல்கிறார் என்றால் அம்மாவுக்கு ஒன்றுமே புரியாது. “கர்ப்பம்என்பதை தனக்கு சர்ப்பம் வந்து விட்டது என சொல்லாமல் முழுக்க குழப்பம் ஏற்படுவதுடன் அவள் சொல்வதை மட்டும் வைத்து அவள் கர்ப்பத்தை பிறரால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களைப் பொறுத்துகர்ப்பவதியாக காணப்படாமல்அவள் அப்படி இருக்கவே முடியாது.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...