Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நிலைகள் குறித்த விசாரணை - 2


 

 2.  There are four conditions: efficient condition;

Percept-object condition; immediate condition;

Dominant condition, just so.

There is no fifth condition. 


 “நான்கு நிலைகள் உள்ளன: செயலூக்க நிலை;

பார்வைப் புலன் பொருள் நிலை; உடனடி நிலை;

முதன்மை நிலை; ஆக,

ஐந்தாவதாக ஒரு நிலை இல்லை.”


நான்கு விதமான நிலைகளே உள்ளன, அவற்றினாலே ஒரு விசயம் [சாராம்சமற்று] நிகழ்கிறது, தோன்றுகிறது, இருக்கிறது என நாகார்ஜுனர் சொல்கிறது. அவை எவையெனப் பார்ப்போம்.


) செயலூக்க நிலை (efficient condition): ஸ்விட்சை போடுகிறேன். விளக்கு எரிகிறது. ஏன் என்றால் நான் தான் ஸ்விட்சைப் போட்டேனா, அதனால் எனும் போது அது செயலூக்க நிலை. இது இருத்தலியல்வாதிகளுக்கு பிடித்தமான நிலை. ஒரு விசயம் நிகழும் போது அதன் பின்னுள்ள ஒழுக்கவாத, அறம் சார்ந்த காரண காரிய விளக்கத்தை அவர்கள் மறுக்கிறார்கள். “அந்நியன்நாவலில் மெர்சால்ட் பாத்திரம் சில அரேபியர்களை சுட்டுக் கொல்கிறான். இந்த சம்பவம் ஆல்பர்ட் காமு புறக்காரணங்களால் தூண்டப்பட்டு நாம் செயல்படுகிறோம் எனும் வாதத்தின் மீது செய்யும் பகடியாகும். மெர்சால்டிடம் ஏன் கொன்றாய் என வினவும் போது அன்று வெயில் அதிகமாக இருந்ததால், சூரிய ஒளி கண்ணில் பட்டு எரிச்சல்படுத்தியதால் சுட்டேன் என அபத்தமான ஒரு காரணத்தைத் தருகிறான். மெர்சால்ட்டுக்கு தான் கொன்றவர்கள் மீது எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என்பதால் அதனுடைய தன்னூக்கமும் இதற்கு காரணமாக முடியாது. இருக்கிறேன், செயல்படுகிறேன், அதுவே என் இருப்பு, அதற்கு மேல் எதுவும் இல்லை என்பதே இருத்தியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால் இதை நாகார்ஜுனர் முழுக்க ஏற்க மாட்டார். இது ஒரு நிலை மட்டுமே. மேலும் பல நிலைகள் இதற்குப் பின்னும், இதற்கு சமானமாகவும் செயல்படுகின்றன


) பார்வைப்புலன் பொருள் நிலை (percept object condition) என்றால் சம்மந்தப்பட்ட விசயமோ பொருளோ உயிரோ பார்க்கப்பட்டு, பார்க்கப்படுவதால் ஒரு குறிப்பிட்ட இருப்பைப் பெறும் நிலைக்கு வருவது. இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் - பார்க்கப்படுவதும் மனதுக்கு உள்ளேயும் நடப்பது தான். ஒரு மந்திரவித்தைக்காரர் தன் தொப்பிக்கு உள்ளிருந்து ஒரு முயலை எடுக்கிறார். அப்போது அவர் அப்படி முயலை எடுக்கும் மந்திரவித்தைக்காரராக பார்க்கப்படுகிறார்; அப்படி பார்க்கப்படாமல் அவர் அச்செயலை செய்வது நிகழ் வாய்ப்பில்லை. இதன் பொருள் அவர் அச்செயலை செய்வதில்லை என்பதல்ல, ஆனால் அச்செயல் அதுவாக அவர் அப்படி பார்க்கப்படுவது அவசியம். ஒருவேளை ஒரு செயல் யாரும் பார்க்கப்படாத இடத்தில் நடக்கிறது என்றால் அப்போது செயலில் ஈடுபடுகிறவரால் தன்னையே காணப்பட்டு அதுவாக ஆகிறார். ஒருவர் அவரைப் பார்க்கும் போதும் அவர் தன்னையே அவ்வாறு பார்த்தப்படி தான் இருக்கிறார். ஒருவருக்கு பார்வை இல்லையென்றால் அவர் ஒலிகளால் ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி அதன் வழி பார்க்கிறார். அவருக்கு செவிப்புலனும் இல்லையெனில் அது தொடுபுலனாலும் கற்பனையாலும் மனதில் ஏற்படும் சித்திரமாக இருக்கலாம். ஆக, பார்கக்ப்படாமல், அதனாலான ஒன்றாக உருப்பெறாமல், ஒன்று நிகழ்வதில்லை என்கிறார் நாகார்ஜுனர்.


) உடனடி நிலை (immediate condition): ஒரு செயல் நிகழும் போது அதன் பின்னணியில் பல நிலைகளில் நடக்கிற சின்னச் சின்ன நுண்செயல்கள் இந்த உடனடி நிலையை உண்டு பண்ணுகின்றன. ஸ்விட்சைப் போடும் போது அங்கு மின்சாரம் இருப்பது, மின்சாரம் கடப்பதற்கான மின்கம்பிகள் இருப்பது, மின்கம்பிகளுக்குள் உலோகக்கம்பி வேலை செய்வது, அதில் மின்சாரம் அணுக்களின் செயல்பாட்டால் உருவாவது, இவை எல்லாமே பழுதில்லாமல் செயல்படுவது, இருட்டு அல்லது வெளிச்சம் பருவநிலையால் ஏற்கனவே இருப்பது இப்படி ஒவ்வொன்றுமே ஒளி அங்கே தோன்றுவதற்கு அவசியம். இந்த உபசெயல்களும் பல்வேறு உபசெயல்களை நம்பி இருக்கின்றன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.


) முதன்மைக் காரணம் (dominant condition): ஸ்விட்சைப் போட வேண்டும் எனும் நோக்கம் இருக்கிறதில்லையா இதுவே முதன்மைக் காரணம்

ஆனால் எல்லா நிகழ்வுகளுக்கும் இந்த நான்கு நிலைகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பெண் கர்ப்பமாகிறாள். அதில் செயலூக்க நிலை உண்டு. அவள் உறவு கொண்டது. உடனடி நிலை உண்டு. அவள் உறவு கொண்ட ஆணின் விந்து வெளிப்பட்டது, விந்து கர்ப்பமாக்கும் தகுதியை பெற்றிருந்தது, பல்லாயிரம் விந்துக்களில் ஒன்று சரியாகப் போய் கருவை தைத்தது, கரு அதற்கு தகுதியான நிலையில் இருந்தது, அப்போது அவளுடலில் பௌதீக வேதியல் மாற்றங்கள் சரியான படி நிகழ்ந்தது. இப்படி பல நுண்செயல்கள் இருக்கின்றன. மூன்றாவதாக, அவள் சேதி தெரிந்து கொண்டதும் தன்னை கர்ப்பமானவளாகப் பார்ப்பது. அப்போது அந்த பார்வைப்புலன் பொருள் நிலை உருவாகிறதுஇத்தகவலை பிறரிடம் அவள் பகிரும் போது அவர்களால் அவள் கர்ப்பவதியாக பார்க்கப்படுகிறாள் (அதிர்ச்சி, கோபம், கவலை, பயம் அல்லது மகிழ்ச்சி, பூரிப்பு, கொண்டாட்டம்). “வைகாசிப் பொறந்தாச்சுபடத்தில் ஜனகராஜ் பேசுவதைப் போல (சோற்றைப் போடு என்பதற்குநெருப்பை அள்ளிக் கொட்டு”, முட்டையை வை என்பதற்குஅந்த அணுகுண்டை வை”) இவளும் தன் பெற்றோரிடம்அம்மா நான் குண்டாயிட்டேன்என சொல்கிறார் என்றால் அம்மாவுக்கு ஒன்றுமே புரியாது. “கர்ப்பம்என்பதை தனக்கு சர்ப்பம் வந்து விட்டது என சொல்லாமல் முழுக்க குழப்பம் ஏற்படுவதுடன் அவள் சொல்வதை மட்டும் வைத்து அவள் கர்ப்பத்தை பிறரால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களைப் பொறுத்துகர்ப்பவதியாக காணப்படாமல்அவள் அப்படி இருக்கவே முடியாது.


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...