Skip to main content

நிலைகள் குறித்த விசாரணை - 3

 

3.

The essence of entities

Is not present in the conditions, etc...

If there is no essence,

There can be no otherness-essence.

  

 “உள்ளதான விசயங்களின் சாரம்

நிலைகளில் இருப்பதில்லை, இது போல இன்னும் பல....

எந்த சாரமும் இல்லையெனில்,

பிறிதின்-சாரமே இருக்க முடியாது.”


 ஒரு பொருளில் சாரமில்லை என்றால் அது உருவாகக் காரணமான அதன் நிலையில் இருக்கலாம் இல்லையா? ஒரு கோப்பை தேநீரில் ஒரு கரண்டி சர்க்கரை சேர்த்தால் அது இனிக்கிறது. இப்போது சர்க்கரையை சேர்ப்பதான செயலூக்க நிலை அதை இனிப்பான காப்பியாக்குகிறது. இந்த இடத்தில் நாகார்ஜுனரின் எதிர்முகாமை சேர்ந்த சிந்தனையாளர்கள் ஒரு மாற்றுப்பார்வையை வைக்கிறார்கள் - சாரம் என்பது இருக்கின்ற பொருளில் இல்லை, ஆனால் அதை ஏற்படுத்துகிற நிலையில் சாரம் இருக்கிறது. மற்றொரு உதாரணத்தை தருவதானால் பிரம்மத்தை எடுத்துக் கொள்ளலாம். பிரம்மம் முதல்முழுதானது, தனியானது, சாரமானது, அழிவற்றது. பிரம்மத்தை இவ்வாழ்வில் நாம் உணர முடியும் என அத்வைதிகள் கூறுவார்கள். அப்போது வாழ்க்கை ஆன்மீக ஒளி பொருந்தியதாக மகத்தானதாகிறது. இவ்வாழ்க்கையில் இறை ஒளி அதன் சாரமாக இல்லாமல் இருக்கலாம்; தற்காலிமான ஒரு வெளிச்சமாக அது இருக்கலாம்; வாழ்தலில் இருத்தலில் மட்டும் இருக்கலாம், ஆனால் அந்த மனிதனில் இல்லாமல் இருக்கலாம். இந்த விளக்கத்தின் முடிவில் அவர்கள் பிரம்மம் சாரமானது, ஆனால் மனிதன் சாரமற்றவன் என சொல்வார்கள். இதை நாகார்ஜுனர் ஏற்கவில்லை. “கரகாட்டக்காரனில்அந்த ஓட்டைக்காரை தள்ளிக் கொண்டு போகையில் ஒரு கெத்துக்காக, கிளுகிளுப்பாக, ஆறுதலுக்காக கவுண்டமணி அந்த காரை முன்பு நடிகை சொப்பன சுந்தரி வைத்திருந்ததாய் சொல்வார். இது ஓட்டைக்கார் தான், ஆனால் ஒரு காலத்தில் இதன் நிலை வேறு, அந்த பழங்கால பெருமை இதற்கு ஒரு சிறப்பளிக்கிறது எனும் வாதம் அவருடையது. ஆனால் என்னதான் சொப்பனசுந்தரியுடையது என்றாலும் அது ஓட்டைக் கார் தான். அழகான பளபளப்பான ஓடுகிற கார் ஆகாது. அதே போலத்தான் பிரம்மம் சாரமானது, ஆனால் மனிதன் அப்படி அல்ல என்பதும் இப்படி ஒன்று உருவாக காரணமான மற்றொன்றுக்கு சாரத்தைக் கொடுக்கிற ஒரு தவறான தந்திரம்

இதை நாகார்ஜுனர் இப்படித்தான் தவறென நிரூபிக்கிறார் - எப்படி காரை விற்றவரின் சாரம் காரில் இருப்பதில்லையோ (காரை உருவாக்கியவரின், விற்றவரின் சாரமும் கூடத்தான்) அப்படியே கடவுள் நிலையை அடைகிற ஒருவரின் வாழ்வில் கடவுள் இருக்கிறார் என்றால் அது சாரம் கொண்டதாகவே இருந்தாக வேண்டும். சாரமான ஒன்று சாரமற்ற ஒன்றின் பகுதியாகவோ அதை ஏற்படுத்தவோ முடியாது. ஒரு மனிதன் கடவுள் நிலைக்கு செல்கிறானெனில், அவனுக்கு அகத்திறப்பு நிகழ்ந்து மகத்தானவனாக உருமாறுகிறான் என்றால் கடவுளும் அவனைப் போன்றே சாரமற்றவராக ஆக வேண்டியது தான்.


அடுத்து வரிகள் இன்னும் முக்கியமானவை. ஒரு விசயம் தோன்றுவதற்கு பல நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் () அந்நிலைகளும் தம்மளவில் சாரமற்றவை, அவற்றை பல உபநிலைகள் தோற்றுவிப்பதால் அவை சார்ந்திருக்கின்றன என நாகார்ஜுனர் சொல்கிறார். அடுத்து, அவர் இந்த நிலைகளின் வித்தியாசங்களுக்கு வருகிறார். காப்பி கசக்கிறது, ஆனால் சர்க்கரை இனிக்கிறது. இனிப்பே சர்க்கரையின் வித்தியாசம். இது தனித்துவமானது, சாரமானது என சிலர் கருதலாம். ஆனால் இந்த வித்தியாசமே அது பிற சங்கதிகளை நம்பியிருப்பதாலே நிகழ்கிறது என நாகார்ஜுனர் சொல்கிறார். முதலில் மற்றமை மற்றமையாக இருக்க அந்த பொருளுக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும்; ஆனால் மற்றொன்றை சார்ந்திருக்கும் எதற்கும் சாரம் இருக்க முடியாது. () தனித்துவம் சாரமில்லாததாகும் போது வித்தியாசமும் சாரமற்றதாகிறது. அடுத்து, மற்றமை அதற்கான நான்கு நிலைகளில் சிலவற்றையாவது காரணிகளாகக் கொண்டிருக்க வேண்டும் (சர்க்கரை பயன்படுத்தப்படும் செயலூக்கம், சர்க்கரையின் வேதியல் அமைப்பு, அதை கலக்க வேண்டும் எனும் முதன்மை நிலை இப்படி பல). இந்த நிலைகளும் வேறு பல நிலைகளை நம்பியிருந்தாக வேண்டும். ஆகையால் () இந்த வித்தியாசம் கூட சாராம்சமானது அல்ல என நாகார்ஜுனர் கருதுகிறார்


ஒரு விசயத்தின் வித்தியாசமானது சாரமானது என்பது நமது சாதியமைப்பின் அச்சாணியாக இருக்கும் கருத்து என்பதை கவனிக்க வேண்டும். இந்த வித்தியாசம் கற்பிதம் என்பதை நாகார்ஜுனர் இங்கு நிரூபிப்பது முக்கியமானது


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...