Skip to main content

இன்மையியம் - கவிஞர் ராஜசுந்தர ராஜன்



न स्वतो नापि परतो न द्वाभ्यां नाप्यहेतुतः। 

उत्पन्ना जातु विद्यन्ते भावाः क्वचन के चन ।।


ந ஸ்வதோ நாபி பரதோ ந த்வாப்யாம் நாப்யஹேதுத: |

உத்பன்னா ஜாது வித்யந்தே பாவா: க்வசன கே சன ||


நாகார்ஜுனருடைய “மூலமத்யமக காரிகா” நூலின் முதற் சொலவம் இது. இதன் பொருள்: 


ஸ்வ = தன்; பர = பிற; த்வாப்யாம் = இரண்டின்; அஹேது = ஏதிலி (non-cause); உத்பன்ன = உருவாகி; ஜாது = எப்பொழுதும்; வித்யந்தே = அறியப்பட்டு; பாவா: = இருக்கிற; க்வசன = எங்கும்; கேசன = எதுவும்; ந = இல்லை; அபி = மேலும்;


“எங்கும் எப்போதும் உள்ளதனைத்தும் தோன்றி யிருப்பதானது, தன்னிலிருந்தில்லை; பிறிதிலிருந்தில்லை; இரண்டிலிருந்தும் இல்லை; ஏதிலியிலிருந்தும் இல்லை.” 


இந்த நூலை நான் வாசித்துக் கனகாலம் ஆகிவிட்டது. அந்தப் புத்தகத்தையும் தனக்கு வேண்டும் என்று தேவதேவன் எடுத்துச் சென்றுவிட்டார். இப்போது கையிருப்பில் உள்ளது அதற்குப்பின் வாங்கிய புத்தகம். இதைத் தேடியெடுத்துப் புரட்டிப்பார்க்க இன்றுதான் வாய்த்தது. 


காரணம் அபிலாஷ் சந்திரன். அவர் இந்தப் புத்தகத்தின் மீதான தன் உரைகளை, ‘சூன்யவாதம்’ என்று தலைப்பிட்டுத் தொடங்கியிருக்கிறார். இதுவரை இரண்டு உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். அவரது முகநூற் சுவரில் காணக் கிடைக்கின்றன. அவர் வாழ்க! இப்படியோர் அரிதான முயற்சிக்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


இந்தியாவின் ஆகச்சிறந்த படைப்புகள் ராமாயணமோ மகாபாரதமோ அல்ல. அவற்றிற்கு நிகரான படைப்புகள் உலக இலக்கியங்களில் உள்ளன. உபநிஷத்துகள்? ஊக (speculative) தத்துவங்களைத் தாண்டி உலகத் தத்துவ விசாரணையும் எம்மட்டோ முன்னேறிவிட்டது. 


“மூலமத்யமக காரிகா”வில்,


வாழ்த்து = 1; அத். 1 = 14; 2 = 25; 3 = 9; 4 = 9; 5 = 8; 6 = 10; 7 = 34; 8 = 13; 9 = 12; 10 = 16; 11 = 8; 12 = 10; 13 = 8; 14 = 8; 15 = 11; 16 = 10; 17 = 33; 18 = 12; 19 = 6; 20 = 24; 21 = 21; 22 = 16; 23 = 25; 24 = 40; 25 = 24; 26 = 12; 27 = 30. 


ஆக மொத்தம் 449 ஈரடிச் சொலவங்கள் உள்ளன. திருக்குறளை ஒப்பிட மூன்றில் ஒருபங்குதான். அவ்வளவுக்குச் சிறிய புத்தகம். ஆனால் உலகத்தின் தலைசிறந்த புத்தகம் இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. எப்படி? இன்றைக்கு வருகிற இலக்கியக் கொள்கைகள், தத்துவ முடிபுகள், அறிவியல் உச்சங்கள் அத்தனைக்கும் முன்னோடியாக இதைத் தூக்கிப் பிடிக்கலாம். 


திருக்குறள்? எங்கள் அம்முவிற்கு திருக்குறள் புத்தகம் ஒன்று பரிசாக வந்து சேர்ந்தது. “உலகத்து மக்களினங்களில் தமிழர்கள் கொடுத்துவைத்தவர்கள். காரணம் திருக்குறள். இதை நேரம் வாய்க்கும் போதெல்லாம் படி!” என்றேன். என்றாலும், என்னளவில், அதற்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் “மூலமத்யமிக காரிகா”விற்கு.


இருக்கட்டும், புத்தர் சொல்லாததை நாகார்ஜுனர் சொல்லவில்லை. அது அப்படித்தானே அமையும். ஆனால் “திரிபிடகம்” முழுக்கப் படித்துத் தேறுவது சாத்தியமா? இந்த இடத்தில்தான் இந்நூல் ஒரு கையேடாக நமக்கு வாய்க்கிறது.


இனி, எனக்குக் கிட்டிய தெளிவு என்னதென்று பார்க்கலாம். மேற்கோள் காட்டப்பட்ட இந்த சொலவத்தில், இதுதான் இதற்குக் காரணம் (cause) என்று ஒன்று இல்லை பாருங்கள்! இந்த நூலே இதுதான். ஓரோர் அத்தியாயத்திலும் வெங்காயத்தை உரிப்பதுபோல் உரித்துஉரித்து ஆகக்கடைசியில் ஒன்றுமில்லை என்று காண்பிக்கப் படும்.


கூடவே, ‘சூன்யம்’ என்பது ஆன்மா போன்று சாராம்சமாக ஒன்று இன்மையே என்றும் தெளிவிக்கும். 


இப்போது நான் எழுதியதை நீங்கள் ஒரு சில்லுப்பேசியிலோ அல்லது கணினியிலோ வாசிக்கிறீர்கள். இதை எழுதுகிற நான் உயிர்வாழ்வதற்காக ஒருகைச் சோறு சாப்பிடுகிறேன். அது ஒரு வயலிலிருந்து வந்த அரிசியினால் ஆனது. அதற்குப் பின் சந்தை, உழவன், வெயில், மழை எல்லாம் இருக்கின்றன. அதாவது ஓரொன்றிற்குள்ளும் இந்தப் பிரபஞ்சமே இருக்கிறது. இருக்கையில், ஆன்மாவிற்கு விசேஷமாக அங்கென்ன வேலை? கடவுள் உண்டென்று மூளைச்சலவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்பிதம் அது. 


அப்படி, ஆன்மா அல்லது சாராம்சம் என்றொன்று இல்லை என்று காண்பிப்பதே சூன்யவாதம். அதாவது, பிரபஞ்சத்தின் எல்லா அம்சங்களும் ஒருங்கிணைந்து, ஆத்மா பரமாத்மா என்கிற ஏமாற்று வேலையின் முகத்திரை கிழிப்பது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...