Skip to main content

ஜல்லிக்கட்டில் இருந்து வேளாண் சட்ட போராட்டங்கள் வரை



ஒரு போராட்டத்துக்கு, பேரணிக்கு அரசு அனுமதி தருகிறது, அரசு பணிந்து போகிறது, காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றால் போராளிகள் அங்கே சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் இதை ஜல்லிக்கட்டின் போது பார்த்தோம். அதுவே வேளாண் போராட்டங்களின் போது மீண்டும் நிகழ்கிறது. தில்லிக்கு முன்னேறி சென்று பேரணி நடத்துவதே ஒரு மோசமான திட்டம் தான். அதுவும் அப்பேரணியை போலிசார் தடுக்காமல் தள்ளி நின்று, போராளிகளில் சிலர் சீக்கிய கொடியை ஏற்ற விட்டு விட்டு, ஏற்கனவே இப்படித்தான் திரைக்கதை இருக்கும் என தெரிந்து கொண்டு தலைப்புகளுடன், வசனங்களுடன் தயாராக இருந்த டைம்ஸ் நவ் போன்ற சேனல்களின் துணையுடன் விவசாயிகளை கலவரக்காரர்களாக சித்தரித்து இப்போது போலீசை வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். புலியை வேட்டையாட ஆட்டை கட்டி வைத்து வேட்டைக்காரன் காத்திருப்பது போல ஜியின் அரசு குடியரசு தினத்தன்று காத்திருந்து தன் வேட்டையை நிகழ்த்தி விட்டது. 

செங்கோட்டைக்கு சீக்கிய கொடியுடன் அல்ல, தேசியக் கொடியுடன் சென்றிருக்க வேண்டும். தலைநகரம் முழுக்க விவசாயிகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து அதை கம்பத்தில் ஏற்றியிருந்தால் அரசு திகைத்து போயிருக்கும்.


காந்தியின் போராட்ட முறையில் விவசாயிகள் கற்றுக் கொள்ள இரண்டு முக்கிய பாடங்கள் உண்டு:

1) எந்த போராட்டத்தையும் பேச்சுவார்த்தை, பேரம் ஆகியவற்றைத் தாண்டி கொண்டு செல்லக் கூடாது. கோரிக்கையை ஏற்க வைப்பதல்ல, குரலைக் கேட்க வைப்பதே ஒரு போராட்டத்தின் இலக்கு. ஒரு கட்டத்தில் விவசாயிகள் அரசின் உத்தரவாதத்தை ஏற்று பின்வாங்கியிருக்க வேண்டும். அது அடுத்து மீண்டும் ஒரு தேவை வரும் போது திரண்டு போராட அவர்களுக்கு ஆற்றலைத் தரும். எந்த அரசையும் முழுமையாக உங்களால் மண்டியிட வைக்க முடியாது. இப்போதைக்கு தற்காலிகமாய் சட்டங்களை பின்வாங்குவது போதும் என விவசாயிகள் நினைத்திருந்தால் இப்போராட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்.


2) அரசும் காவல்துறையும் வாய்ப்பளித்தாலும், தூண்டினாலும் போராளிகள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. ஏனென்றால் ஆங்கிலேயர் இங்கு ஆண்ட போதும் வன்முறையானது இறையாண்மையின் உரிமை மட்டும் தான். இப்போதும் அப்படித்தான். வன்முறையை போராளிகள் கையில் எடுக்கும் போது அவர்கள் இறையாண்மையின் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு கொடூரமாய் நசுக்கப்படுவது அரசுக்கு சுலபமாகும். இனி விவசாயிகள் போலிசாரை நோக்கி லத்தி வீசுகிற காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டி போலீஸ் வன்முறையை இந்த அரசு நியாயப்படுத்தும். விவசாயிகளின் தார்மீக உரிமை மீது நிரந்தரமாய் கரியைப் பூசும்.


எதிர்கால போராட்டங்கள் காந்தியின் இந்த அடிப்படை நெறிகளைப் பின்பற்றி நிகழட்டும். அடி எப்போதும் போராளிகள் மீது விழ வேண்டும். ரத்தத்தை எப்போதும் போராளிகளே சிந்த வேண்டும். திரும்ப அல்ல. சமரசத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நிரந்தர வெற்றியை விட தற்காலிக வெற்றிகளை இலக்காக்கி கொள்ள வேண்டும். மக்களின் நன்மதிப்பை இழக்காமல் போராட வேண்டும். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...