Skip to main content

ஜல்லிக்கட்டில் இருந்து வேளாண் சட்ட போராட்டங்கள் வரை



ஒரு போராட்டத்துக்கு, பேரணிக்கு அரசு அனுமதி தருகிறது, அரசு பணிந்து போகிறது, காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றால் போராளிகள் அங்கே சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் இதை ஜல்லிக்கட்டின் போது பார்த்தோம். அதுவே வேளாண் போராட்டங்களின் போது மீண்டும் நிகழ்கிறது. தில்லிக்கு முன்னேறி சென்று பேரணி நடத்துவதே ஒரு மோசமான திட்டம் தான். அதுவும் அப்பேரணியை போலிசார் தடுக்காமல் தள்ளி நின்று, போராளிகளில் சிலர் சீக்கிய கொடியை ஏற்ற விட்டு விட்டு, ஏற்கனவே இப்படித்தான் திரைக்கதை இருக்கும் என தெரிந்து கொண்டு தலைப்புகளுடன், வசனங்களுடன் தயாராக இருந்த டைம்ஸ் நவ் போன்ற சேனல்களின் துணையுடன் விவசாயிகளை கலவரக்காரர்களாக சித்தரித்து இப்போது போலீசை வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். புலியை வேட்டையாட ஆட்டை கட்டி வைத்து வேட்டைக்காரன் காத்திருப்பது போல ஜியின் அரசு குடியரசு தினத்தன்று காத்திருந்து தன் வேட்டையை நிகழ்த்தி விட்டது. 

செங்கோட்டைக்கு சீக்கிய கொடியுடன் அல்ல, தேசியக் கொடியுடன் சென்றிருக்க வேண்டும். தலைநகரம் முழுக்க விவசாயிகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து அதை கம்பத்தில் ஏற்றியிருந்தால் அரசு திகைத்து போயிருக்கும்.


காந்தியின் போராட்ட முறையில் விவசாயிகள் கற்றுக் கொள்ள இரண்டு முக்கிய பாடங்கள் உண்டு:

1) எந்த போராட்டத்தையும் பேச்சுவார்த்தை, பேரம் ஆகியவற்றைத் தாண்டி கொண்டு செல்லக் கூடாது. கோரிக்கையை ஏற்க வைப்பதல்ல, குரலைக் கேட்க வைப்பதே ஒரு போராட்டத்தின் இலக்கு. ஒரு கட்டத்தில் விவசாயிகள் அரசின் உத்தரவாதத்தை ஏற்று பின்வாங்கியிருக்க வேண்டும். அது அடுத்து மீண்டும் ஒரு தேவை வரும் போது திரண்டு போராட அவர்களுக்கு ஆற்றலைத் தரும். எந்த அரசையும் முழுமையாக உங்களால் மண்டியிட வைக்க முடியாது. இப்போதைக்கு தற்காலிகமாய் சட்டங்களை பின்வாங்குவது போதும் என விவசாயிகள் நினைத்திருந்தால் இப்போராட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்.


2) அரசும் காவல்துறையும் வாய்ப்பளித்தாலும், தூண்டினாலும் போராளிகள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. ஏனென்றால் ஆங்கிலேயர் இங்கு ஆண்ட போதும் வன்முறையானது இறையாண்மையின் உரிமை மட்டும் தான். இப்போதும் அப்படித்தான். வன்முறையை போராளிகள் கையில் எடுக்கும் போது அவர்கள் இறையாண்மையின் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு கொடூரமாய் நசுக்கப்படுவது அரசுக்கு சுலபமாகும். இனி விவசாயிகள் போலிசாரை நோக்கி லத்தி வீசுகிற காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டி போலீஸ் வன்முறையை இந்த அரசு நியாயப்படுத்தும். விவசாயிகளின் தார்மீக உரிமை மீது நிரந்தரமாய் கரியைப் பூசும்.


எதிர்கால போராட்டங்கள் காந்தியின் இந்த அடிப்படை நெறிகளைப் பின்பற்றி நிகழட்டும். அடி எப்போதும் போராளிகள் மீது விழ வேண்டும். ரத்தத்தை எப்போதும் போராளிகளே சிந்த வேண்டும். திரும்ப அல்ல. சமரசத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நிரந்தர வெற்றியை விட தற்காலிக வெற்றிகளை இலக்காக்கி கொள்ள வேண்டும். மக்களின் நன்மதிப்பை இழக்காமல் போராட வேண்டும். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...