Skip to main content

இந்தியா-இங்கிலாந்து தொடரை புறக்கணிப்போம்

இந்தியா இங்கிலாந்து தொடரை ஏன் புறக்கணிக்கக் கூடாது?

ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் இருப்பது, பின்னிருந்து இயக்குவது எதுவும் புதுசு அல்ல தான். ஆனால் முன்பு எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் ஆளும் கட்சியின் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அதாவது நாட்டுக்காக நிற்பது வேறு, ஒரு கட்சியின் சார்பில் பேசுவது வேறு. சில நேரம் நீங்கள் ஒரு கட்சி சார்பாக பிரச்சாரம் செய்கையில், அந்த அரசு அப்பட்டமாக தனது மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி, அவர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் போது, நீங்கள் உங்கள் ஒரு கட்சிக்காக உங்கள் மக்களுக்கு எதிராக அரசியல் பண்ணுகிறவர்கள் ஆகிறீர்கள். அந்த அரசு போராடும் மக்களை தீவிரவாதிகள், தேச துரோகிகள், ரௌடிகள் என சொல்லும் போது அதுவும் உங்கள் கருத்தாவதை தவிர்க்க முடியாது போகிறது. இதற்கு ஒரு அணியின் தலைவர், பயிற்சியாளர் சகிதம் களமிறங்கும் போது, கிரிக்கெட் வீரர்களை பாராட்டுவதை வழக்கமாக ஒரு பிரதமரும் நிதியமமைச்சரும் வைத்திருக்கையில், இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. நாளை கிரிக்கெட் வீரர்கள் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதன் முடிவுகள், நடவடிக்கைகளுக்கு சாதகமாக டிவீட் போட்டாலே தாம் அணியில் நிலைக்க முடியும் என நம்புவார்கள்.

கிரிக்கெட் இதுவரை ஒரு தேசியவாத உணர்வலையின் உருவகமாக இருக்கிறது. இனி அது பச்சையான கட்சி ஆதரவு செயலாக மாறும். ஒரு கிரிக்கெட் அணியை ஆதரித்து அரங்கில் கைதட்டுகிறவர்கள் அனைவரும் மறைமுகமாக தனது ஆதரவாளர்களே என ஒரு நாட்டின் எதிர்கால பிரதமர்கள் நினைத்து புளகாங்கிதம் அடைகிற அபத்தம் நடக்கும். கிரிக்கெட் அணியின் தலைவரும், பயிற்சியாளரும் தேர்தலுக்கு முன்பு கட்சிப் பிரச்சாரம் செய்யுமாறு வலியுறுத்தப்படுவதும் நடக்கும். (ஏற்கனவே இதை பாலிவுட் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறது.) ஒரு கட்சி தன்னையே நாடு என நினைப்பது ஒரு அபத்தம் எனில், அக்கட்சியை ஆதரிப்பதே தேசபக்தி என செலிபிரிட்டிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் நினைப்பது இன்னும் அபத்தமானது. எனில் கட்சிக்கு வெளியே தேசம் என ஒன்றில்லையா? அரசுக்கு வெளியே மக்களின் குரலுக்கு மதிப்பில்லையா? அரசுக்கு வெளியே இருக்கும் மக்கள் தேசம் இல்லையா? எனில் ஏன் தேர்தலை நடத்த வேண்டும்? ஒரு கட்சியை நிரந்தரமாக ஆள அனுமதிக்கலாமே?

இந்த பின்னணியில் பார்க்கும் போது நமக்கு விராத் கோலி, ரவி சாஸ்திரி கும்பலின் டிவீட் அரசியல் எவ்வளவு மோசமான ஒரு தேச விரோத அரசியல் எனப் புரியும். இவர்கள் நமது மக்களாட்சி அமைப்புக்கே உலை வைக்கிற போக்குக்கு துணை போகிறார்கள். அதனால் இதை எதிர்க்க வேண்டியது அவசியம். ஆகையால் வெள்ளிக்கிழமை துவங்குகிற இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடரை நாம் புறக்கணிக்கக் கூடாது? அதனால் இத்தொடருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனிலும், நம்மால் முடிந்த எதிர்ப்பை பதிவு செய்வோம். அதனால் #BoycottIndiavsEnglandSeries

என்னதான் அழுத்தம் இருந்தாலும் மக்கள் விரோதப் போக்கை ஆதரிப்பதை இனிமேலாவது கிரிக்கெட்டர்கள் நிறுத்த வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...