முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினிக்கு வாழ்த்துகள்!

 தாதா சாகெப் விருது பெறும் ரஜினி காந்துக்கு வாழ்த்து தெரிவிப்பது வீண் என்றாலும் (மோடியே தலைவா என விளித்து வாழ்த்தியபிறகு நாம வாழ்த்தினா என்ன வாழ்த்தாட்டி என்ன?) என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்:



என் பார்வையில் ரஜினி இந்திய சினிமாவின் தனித்துவமான முக்கியமான நடிகர். Method acting பாணியில் நடிப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை உண்டு. பாத்திரத்துக்கு என ஒரு தனி குண வார்த்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயற்கையாக ஒரு பாவனையை தூக்கி அலைவார்கள். அதாவது கரடியாக நடிக்க சொன்னால் எப்படியாவது உடம்பெல்லாம் மயிர் வளர்த்து கரடியாக ஆக முடியுமா என தவிப்பது. ஆனால் ரஜினியோ காட்சிக்குள் வரும் சந்தர்பத்துக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதே நடிப்பு என எளிமையாக, ஆழமாக புரிந்து கொண்டவர். ரஜினி வயதானவராக நடிக்கும் போது பாருங்கள் - லேசாக உடலை தளர்த்தி, அசைவுகளை மெதுவாக்கி, பார்வை வீச்சில் ஒரு பொறுமையை கொண்டு வருவார், அதுவே பார்வையாளனை நம்பி அப்பாத்திரத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச் செய்யும். மெத்தெட் நடிகர்கள் இதையே வலுக்கட்டாயமாக செய்யும் போது அங்கு அந்த பாவனை, வேடம் படக்காட்சி, கதையமைப்பு எல்லாவற்றையும் மீறி தனியாக தெரியும். அமீர் கானில் இருந்து கமல் வரை இந்த பிரச்சனை உண்டு - நான் நிக்கிறேன், நிக்கிறேன் என்பதைப் போல நான் நடிக்கிறேன், நடிக்கிறேன் என படத்துக்குள் ஒரு கட் அவுட் போல தெரிவார்கள். இந்த பாணி ஒரு மேற்கத்திய இறக்குமதி என்பதும் ஒரு பிரச்சனை. ஆனால் ரஜினியின் பாணி இந்திய பண்பாட்டின், தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒரு நடிகராக ரஜினி சரிவர புரிந்து கொள்ளப்படுவில்லை என்பது ஒரு சோகம். 


மற்றொரு முக்கிய விசயம் ரஜினியின் நடிப்பில் உள்ள அந்த நுட்பம். தலையை குனிவது, தோள்களை அசைப்பது என சின்னச்சின்ன அசைவுகள் மூலம் நிறைய உணர்த்தக் கூடியவர். ஆனால் அவருடைய படகாட்சிகள் வேகமாய் நகரும் என்பதால் ரசிகர்கள் கவனிப்பதில்லை. ஒரு நடிகராக ரஜினியின் முக்கிய குறை வசன உச்சரிப்பு. இதில் கமல் அவரை ஓவர் டேக் பண்ணி விடுவார். ஆனால் சினிமா ஒரு காட்சி ஊடகம் தானே!


இந்த விஷயங்களை விரிவாக எனது “ரஜினிகாந்த்” நூலில் பேசியுள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...