Skip to main content

பாலு மகேந்திரா - ராம் - மாரி செல்வராஜ்: ஒரு பயணம்





பாலு மகேந்திரா - ராம் - மாரி செல்வராஜ்: ஒரு பயணம்


இளந்தலைமுறை இயக்குநர்களில் காட்சிமொழியை அவ்வளவு லாவகமாக பயன்படுத்துபவர் மாரி செல்வராஜ். இலக்கிய எழுத்திலும் தனித்திறன் படைத்தவர். இப்படியானவர்கள் அபூர்வம். அவருடைய பரியேறும் பெருமாள் படத்தின் துவக்க காட்சிகளில் ஒன்றில் நாயகனின் வளர்ப்பு வேட்டை நாயை ரயில் பாதையில் கட்டியிட்டு கொலை செய்வார்கள் சாதி வெறியர்கள். அதைத் தொடர்ந்து அதே ரயில் பாதையில் நாயகனை அடித்து போடுவார்கள் அந்த வெறியர்களில் ஒருவன். அந்த நெஞ்சை உடையச் செய்யும் காட்சியானது அவர் உதவி இயக்குநராக வேலை செய்த ராமின் “கற்றது தமிழின்” கிளைமேக்ஸ் காட்சிக்கான ஒரு homage மற்றும் மீளுருவாக்கம் - ராமின் கிளைமேக்ஸில் காதலர்கள் ரயிலில் விழுந்து அந்த இருளில் தம்மை பலிகொடுப்பதாக குறிப்புணர்த்தப்படும் எனில் இங்கு அந்த துயரத்தின் சாதிய பரிமாணத்தை சுட்டி ராம் தொடாத ஒரு சமூக எதார்த்த சித்திரத்தை இட்டு நிரப்பி இருப்பார். ராமின் படத்தில் அக்காட்சி அவரது குருநாதர் பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை” படத்தில் கமலும் ஶ்ரீதேவியும் வரப்போகும் ரயிலின் தடதட ஒலியைக் கேட்டுணர தடத்தில் காதை வைத்து உட்கார்ந்திருக்கும் குழந்தைமையின் கற்பனாவாத தருணத்தின் உருவகத்தின் homage மற்றும் மீளுருவாக்கமாக இருக்கும். பாலுமகேந்திராவோ இதை சத்யஜித்ரேவின் “பதேர் பஞ்சாலி” படத்தில் வரும் பிள்ளைகள் இருவரும் இதே போல ரயிலின் வருகைக்காக காத்திருக்கும் கவிதையான காட்சியின் நினைவுறுத்தலாக, அர்ப்பணிப்பாக செய்திருப்பார் என்பது என் கணிப்பு. 


ஒரு வங்காளப் படத்தில் நவீன மாற்றத்தின் எதிர்பார்ப்பை உணர்த்துகிற ஒரு காட்சியை அப்படியே தமிழுக்கு மூன்று சிறந்த இயக்குநர்கள் உள்வாங்கி கொண்டு வந்ததில் எங்கெங்கோ பயணித்து  அது என்னென்னவோ அர்த்தங்களை உற்பத்தி பண்ணி ஒரு நிற்காத ரயிலாக எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என நான் “பரியேறும் பெருமாளைக்” கண்ட போது வியந்தேன். காட்சிமொழியின் மேதைமை மாரிக்கு உள்ளதால் தான் அவரால் ஒரு ரொமாண்டிக்கான காட்சியை எடுத்து வந்து பெருந்துயரத்தின் சமூக அவலத்தின் காட்சியாக அதை மீளமைக்க முடிந்தது.

அதே போல் அபபடத்தின் மையச் சிக்கலை கிளைமேக்ஸில் வரும் அந்த தேநீர் கோப்பை பிம்பத்தில் சுருக்கென உறைய வைத்திருப்பார். யாரால் அதை மறக்க முடியும்?


இந்த ரயில் பாதை காட்சி மட்டுமல்ல, கல்லூரி வகுப்பறை, ஆங்கிலத்தின் அதிகார அரசியல், யாருமில்லாமல் தவிக்கும் நாயகனின் வாழ்வில் தேவதையாக தோன்றும் 'ஆனந்தி' (இப்படத்தில் 'ஜோதி'), அவர்களுடைய உறவுக்கு குறுக்கே வரும் விதி என "கற்றது தமிழின்" சாதி அரசியல்படுத்தபட்ட வாசிப்பாகவே "பரியேறும் பெருமாளை" பார்க்க முடியும்.


ராமின் "கற்றது தமிழில்" வரும் தமிழ் தேசியத்தின் கோபத்தின், இருத்தலியத்தின் அவநம்பிக்கையின் இடத்தில் அம்பேத்கரிய புரட்சியை, மானுடவாதத்தின் நம்பிக்கையை வைத்தால் அதனுடன் மாரியின் கற்பனையை, அனுபவத்தை, தனித்துவமான பார்வையை, அரசியலை கலந்தால் "பரியேறும் பெருமாள்" படம் வந்து விடும்.


மாரியின் இரண்டாவது படமான “கர்ணனும்” மற்றொரு சாதனையாக அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதில் என்னென்ன அரசியல் மீளுருவாக்கங்களை முயன்று பார்த்திருக்கிறார் என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன். 


வாழ்த்துக்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...