முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்து எனும் 50 First Dates


என் படைப்புகளை நிறைய பேர் படிக்க வேண்டுமா?

படிக்கலாம். படிக்காமல் இருந்தாலும் ஓக்கே என்பது என் தரப்பு.  நிறைய பேர் படிக்கையில் ஒரு கிளுகிளுப்பு உண்டு. ஆனால் அது மலினமானது. எழுதும் போது கிடைக்கும் ஒரு சாகச, transcendental உணர்வு தான் மகத்தானது. ஒரு வாசகன் என் எழுத்து பிரசுரமான பின் அந்த இடத்துக்கு வருவது ஒரு பெரிய அனுபவம் அல்ல. அது என்னை நேரடியாகத் தொட முடியாது. 

 நாலு பேர் கூடப் படித்தாலோ இல்லாவிட்டாலோ என்னவாகி விடப் போகிறது? எப்படியும் நான் எழுதும் போது அவர்களால் என்னுடன் கூட அதில் பங்கேற்க முடியாது. அது முடிந்த பின் நடக்கும் process தான் வாசிப்பு. அதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அது என் காதலியை இன்னொருவன் தொடுவது போல. அப்படியே விட்டுவிட வேண்டியது தான். 

அதனாலே நான் எனக்கு கிடைக்கும் விமர்சனங்களின், பாராட்டுக்களின் அளவை வைத்து கிளுகிளுப்படைவேன், ஆனால் பெருமை கொள்வதில்லை. அதில் கிடைக்கும் ஒரே பயன் ஒரு நம்பிக்கை.
அடுத்து, பதிப்பாளர்களின் மரியாதை. அவ்வளவு தான். இதுவும் கூட ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதே. ஒரு குப்பையான படைப்பு நிறைய பேரால் பாராட்டப்பட்டால் ஒரு சின்ன அவமதிப்புணர்வே எஞ்சும். ஒரு நுட்பமான பதிப்பாளரும் எந்தளவுக்கு என்னை இந்த எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் பொருட்படுத்துவார்? உள்ளூர அதையும் தாண்டி வேறொரு மதிப்பீடு அவருக்கும் இருக்கும். ஆகையால் எழுத்திற்குள் மதிப்பென்பது வாசகர் எண்ணிக்கை அல்ல. அது பூடகமானது, அரூபமானது.

கடைசியாக, நான் எழுதியது அதற்கு அடுத்த நாள் எனக்கு மறந்து விடும். ஆகையால் என்னை பாராட்டினாலோ திட்டினாலோ "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" உணர்வு தான். திரும்ப எதையாவது ஜாலியாக எழுத உட்கார்ந்து விடுவேன்.

 ஒவ்வொரு நாளும் புதிய நாள், புதிய சவால், புதிய பஞ்சாயத்து என்பதே எனக்குப் பிடித்த வாழ்க்கை. என் எழுத்துலகம் ஒரு 50 First Dates. நான் அதில் ஒரு ட்ரூ பேரிமோர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...