Skip to main content

அதிமுக மீண்டு வர என்ன செய்ய வேண்டும்?



இத்தேர்தலில் தமிழகத்துக்கு நடந்தது தான் மே.வங்கத்துக்கும் நடந்தது - ஒரே வித்தியாசம் அதிமுக தலைவர்கள், இ.பி.எஸ், ஒ.பி.எஸ் தலைமையின் கீழ், "அடிச்சாங்களா? எங்க வலிக்கலியே!" என மானங்கெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள். பாஜக எதிர்ப்பலையை மமதா பயன்படுத்திக் கொண்டது போல எடப்பாடியால் முடியவில்லை. கழுத்தை சுற்றிய பாம்பு அனகோண்டாவாகி எடப்பாடியை நசுக்கி விட்டது.


மேற்கு வங்கத்தில் மமதா தொடர்ந்து எதிர்ப்பரசியல் செய்தார் என்றால் தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகவே கூட்டு சேர்ந்து தமிழகத்துக்கு வஞ்சித்தார்கள். பாஜகவுடன் சேர்ந்து மக்களை விளாசினார்கள். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசு தன்னை பாதிக்கப்பட்ட தரப்பாக காட்டியதென்றால் தமிழகத்தில் மக்களே அத்தரப்பு. அதிமுக சாட்டை விளாசும் நம்பியார் பக்கத்தில் நின்று "இன்னும் நல்லா அடிங்க, அப்போ தான் புத்தி வரும்" என ஏற்றி விடும் அல்லது "போதும் போதும் பாவம்" என சமாதானம் பண்ணும் தரப்பு. 


நீட் தேர்வு, மும்மொழி விசயம், தேசிய கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ விசயங்களில் மக்களை கைவிட்டதுடன் அதிமுக தனக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை திரும்பக் கோரும் முதுகெலும்பு அற்றதாக இருந்தது. அத்துடன் தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தவறாக கையாண்டு, கட்டற்ற ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தை 5 லட்சம் கோடிக்கும் மேல் கடனாளியாக்கியது. தொடர்ந்து இவ்வாறு அடிபட்டு சீரழிந்து தெருவுக்கு வந்த மக்கள் தம் பிரதிநிதியாக இயல்பாக திமுக கூட்டணியை கண்டது. உறுதியாக நின்ற மமதாவை தம் தீதியாக மட்டுமல்ல பாதிக்கப்படும் தமது பிரதிநிதியாகவும் மே.வங்காளிகள் கண்டார்கள். அங்கு மே.வங்காளிகள் vs குஜராத்திகள் என அரசியல் இருமை அங்கே வலுப்பட்டது என்றால் தமிழகத்தில் அது தமிழகம் vs தமிழக- விரோத தாமரை + துரோகி இரட்டை இலை என்றனது. மக்கள் பூவை இலையோடு பிய்த்து எறிந்தனர்.


மானம், சூடு, சொரணை இருந்தால் அதிமுகவினர் வெளியே வந்து தாமரையுடன் கூட்டு வைத்தது தவறு என ஒப்புக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! எல்.முருகன். எஸ்.வி சேகரிடம் மண்டியிட்டது தவறு என ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு செருப்பை எடுத்து காட்ட வேண்டும். அடுத்த தேர்தல் வரை நிலைத்து, மீண்டும் வெல்ல வேண்டுமெனில் அதிமுகவினர் இனி மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக களமிறங்கி திமுகவுடன் கைகோர்த்து களத்தில் நிற்க வேண்டும், கூடவே திமுகவின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை விமர்சிக்கும் நல்ல எதிரணியாகவும் செயல்பட வேண்டும். ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு விசயத்தையும் தில்லியை கேட்டு முடிவெடுப்பவர்களாக, எல்.முருகன், எச்.ராஜா, குருமூர்த்தி வகையறாக்களிடம் தெண்டனிடுபவர்களாக தொடர்ந்தால் அவர்களுடைய அழிவு நிரந்தரம் தான். சந்தேகமே இல்லை. 


அதிமுக உண்மையான திராவிட கட்சியாக உருமாறும் என, சங்கிகளைப் போல குங்குமப் பொட்டு அணிவது, ஜெய் ஸ்ரீராம் சொல்வதை நிறுத்தும் என எதிர்பார்ப்போம்! "நாங்கள் இனி அடிமைகள் அல்லர், சங்கிகள் எங்கள் எதிரிகள்" என அதிமுகவினர் உரத்து சொல்லுங்கள். தமிழகம் அதைக் கேட்க விரும்புகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...