Skip to main content

பெண்களும் திருமணமும்



பெண்கள் ஏன் திருமணம் செய்வதற்கு வசதியான, நிறைய சம்பாதிக்கிற ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் என நண்பர் கார்த்திக் தமிழன் ஒரு பதிவில் கேட்டிருந்தார். அவர் வயதான பணக்கார வியாபாரிகளை திருமணம் செய்து செட்டில் ஆகும் நடிகைகளை பட்டியலிட்டிருந்தார். ஒப்பிடுகையில் ஆண்கள் அப்படி செய்வதில்லை; ஒன்று காதலித்த பெண்களை மணக்கிறார்கள், அல்லது வீட்டில் பார்த்து கட்டி வைக்கும் பார்க்க சுமாரான பெண்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதை முழுக்க நிரூபிக்க முடியாது - பணமும் புகழும் படைத்த ஆண்கள் அழகான பெண்களை, மாடல்கள், நடிகைகளைத் தேடி மணம் செய்வதுண்டு. அவை காதல் திருமணங்களாக அநேகமாக இருக்கும்.  பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து நிம்மதியான பெண்களும் உண்டு (விராத் கோலி - அனுஷ்கா சர்மா, ஹர்த்திக் பாண்டியா - நதாஸா ஸ்டான்கோவிக்). இன்னொரு பக்கம், காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்து பிடிவாதமாக காதல் கணவனுடன் வாழும் பெண்களும் உண்டு.

ஆனால் கார்த்திக்கின் கேள்வியின் அடிப்படை காதலுக்காக மணக்க வேண்டுமா? பணம், புகழுக்காக ஒருவரை தேர்வு செய்வது நேர்மையற்ற செயல் அல்லவா என்பது. எனக்கு இது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேய நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice, Sense and Sensibility போன்ற நாவல்களை நினைவுபடுத்தியது. இந்நாவல்களின் சாயலில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தை ராஜீவ் மேனன் எடுத்தார். Bridget Jones’s Diaries மற்றொரு தழுவல்.

 ஒரு பெண் எப்படியான கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஜேன் ஆஸ்டின் நாவல்களின் மையக் கேள்வி - ஒரு பெண் தன்னை மதிக்கிற, அன்பு காட்டுகிற, நம்பத் தகுந்த, நேர்மையான ஆணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவன் ரொம்ப ரொமாண்டிக்காக, அழகாக, படோடோபமாக இல்லாவிட்டால் நல்லது என்பதே அவர் நாவல்களின் முடிவில் சொல்லும் பதில். காதலை அவர் “கர்வம், முன்தீர்மானம்” என அடையாளப்படுத்துகிறார். ஒரு கல்லூரி மாணவனாக எனக்கு இந்த நிலைப்பாடு பிடித்திருந்தது. ஆனால் அனுபவ ரீதியாக இந்த உண்மை புரிய எனக்கு காலம் பிடித்தது. நான் புரிந்து கொண்டது இதையே:
 காதல் என்பது துணை விளைப்பொருள் (byproduct.)  

தன்னளவில் காதல் தோன்றுவதோ மறைவதோ இல்லை. இருவர் மகிழ்ச்சியாக இருக்க சாத்தியமாகும் போது, அதற்கு முயற்சி பண்ணும் போது, காதல் - பெட்ரோலியம் தயாரிக்கும் போது பெர்பியூம், உரம், மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்ட 6000 துணைப்பொருட்களாக விளைவதைப் போல - ஒரு துணை விளைபொருளாகத் தோன்றுகிறது. ஒரு கடப்புநிலை (transcendental) அனுபவமாக காதல் அவர்கள் மத்தியில் தோன்றுகிறது. சுஜாதா இதை ஒரு உயிரி வேதியல் தோற்றம், ஹார்மொன்களின் விளையாட்டு என்றார். நான் அதை ஏற்கவில்லை. இது காமத்துக்கான தயாரிப்பும் அல்ல. காதலிப்பதன் மூலம் நாம் காலத்தின் அமைவுகளை கடந்து, முன் தீர்மானங்களை மீறி, நமது தன்னிலையை கடந்து செல்கிறோம். இது தான் அந்த மேஜிக். ஆனால் நாம் செய்யும் ஒரே தவறு நாம் “காதலில் இருப்பதாக” நினைப்பதே.

 உண்மையில் காதலை நாம் தாம் உருவாக்குகிறோம். தயிரில் திரளும் வெண்ணெய் போல காதல் திரண்டு வருகிறது. தோற்றுவிக்கப்படும் எதையும் போல அது அழியவும் செய்கிறது. காதலர்கள் கவிஞர்களாவது, இசையில் ஈடுபடுவது இதனால் தான் - கடப்புநிலை தன்மையால் காதல் ஒரு கலாபூர்வமான அனுபவமாகிறது. 

ஆனால் ஒரு துணை விளைப்பொருள் மீது நின்று நீங்கள் வாழ முடியாது. உறவையும் தொடர முடியாது. காதலைப் போல வேறு பல சகிக்க முடியாத துணை விளைப்பொருட்களை ஆண்-பெண் உறவு உண்டாக்கும். அதை மீறி வர பணம், வசதி, செல்வாக்கு, சமூக அங்கீகாரம் தேவைப்படுகிறது. பணக்கார தம்பதியினர் விவாகரத்துக்குப் பின்பும் நட்புறவுடன் பெரிய தகராறு இல்லாமல் தொடர்வதைப் பாருங்கள் - ஒரே காரணம் பணம் தான். பெண்கள் இயல்பிலேயே புத்திசாலிகள் என்பதால், பெரிய தத்துவம் ஒன்றும் இல்லாமலே இது பளிச்சென அவர்களுக்கு புரிந்து போகிறது. அவ்வப்போது அவர்களுக்கு பைத்தியம் பிடித்து “காதலில் விழுந்தாலும்”, சட்டென தெளிந்து சரியான கணவனை தேர்ந்து கொள்கிறார்கள். அல்லது, சமூகம் அனுமதித்தால், நிம்மதியாக தனித்து வாழ்கிறார்கள். பெண்களின் மரபணுக்களும் இத்தேர்வில் உதவுகின்றன.  

ஆண்கள் நன்றாக சமைத்துப் போடுகிற, குடும்பத்துக்கு “அடங்கின”, பந்தமான பெண்களையே மணமுடிக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். காதலித்த பெண்களையே கட்டிக் கொண்டாலும் அவர்களை இப்படி மாற்ற முயலும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. அல்லது அவர்கள் அப்படி மாறின பிறகு முன்பு போல எப்படிக் காதலிப்பது, காதல் ஏன் அதே முகத்தைப் பார்த்தால் ஸ்விட்சைப் போட்டதைப் போல இப்போதும் வரவில்லை எனக் குழம்புகிறார்கள். இந்த உடலுக்காகவா, இந்த வாசனைக்காகவா, இந்த சுபாவத்துக்காகவே இப்படிக் கிடந்து ஏங்கினோம் என அதிர்ச்சியாகிறார்கள். சிலர் இந்த அதிர்ச்சியையும் மீறி தாம்பத்யத்திலும் காதலை மீள மீள உருவாக்கி அதில் நிழலாறி வாழ்க்கையை சுவையாக்குகிறார்கள். ஆனால் அது ரொம்ப ரொம்ப சிரமம் என்பதால் பலர் தோற்கிறார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...