Skip to main content

ஒரு நிறைவான நாள்



இன்றுடன் கிளப் ஹைவுஸில் தினமும் ஒரு மணிநேரம் என வார நாட்களில் மட்டும் வாசித்து மைக்கேல் இன்வுட்டின் Heidegger நூலை வாசித்து முடித்து விட்டோம். நானும் ஆயுஷும் இந்நூலின் ஒரு பகுதியை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இணைந்து படித்திருக்கிறோம் என்றாலும் ஏழெட்டு பேராக கூட்டாக வாசித்து நூலை முடித்தது இதுவே முதன்முறை. அவ்விதத்தில் மிகவும் எழுச்சியூட்டிய விவாதங்களும், புத்துணர்ச்சியும், நிறைவும் அளித்ததாக வாசிப்பு நாட்கள் அமைந்தன. வழக்கமான கிளப் ஹவுஸ் அரட்டைகளில் எதையும் கற்றுக்கொள்ளாமல் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் சிதறிக்கொண்டே போவதை நான் கவனித்திருக்கிறேன். அல்லது தினமும் மாலையிலும் இரவிலுமாக பாடுகிறார்கள். அவர்கள் இடையே தினமும் வித்தியாசமாக இப்படி தத்துவம் வாசித்து விவாதித்தது ஒரு சாதனையாகத் தோன்றியது. இந்த சிக்கலான ஊடகத்தை ஒழுங்காக ஒரு விசயத்தை கற்பதற்கு பயன்படுத்தி இருக்கிறோம் எனும் திருப்தி. 

இதன் முடிவில் அமர்ஜீத் போன்ற ஏற்கனவே தத்துவத்தில் ஆய்வு செய்திருக்கும், ஹைடெக்கரில் நல்ல வாசிப்புள்ள நண்பர் எங்களுக்கு கிடைத்தார். நேஹா, ஆயுஷ் மற்றும் எனக்கு ஹைடெக்கர் மீதுள்ள புரிதல் அதிகமானது. ஹபீப் இமானுவல் கேண்டில் இருந்து யுடர்ன் எடுத்து ஹைடெக்கர் வசம் வந்து விட்டார். இந்த வாசிப்பு பருவத்தில் அவர் ஹைடெக்கர் குறித்து சில நல்ல கட்டுரைகளை எழுதி விட்டார். நந்தினி, அனிதா போன்றோர் தத்துவ வாசிப்புக்கு பரிச்சயம் பெற்றிருக்கிறார்கள். சிமி முதல் சில வாரங்கள் வாசிப்பில் இருந்து பின்னர் அவருடைய வேலைகள் அதிகமாகியதால் நிறுத்திக் கொண்டார். ராஜ் போன்றோர் தொடர்ந்து கலந்து கொண்டனர். தினமும் எங்கள் வாசிப்பில் 5-8 பேர் கேட்பதற்காக வந்தனர். இன்று ஜமாலன் வந்திருந்தார். என்னுடைய ஆசை ஹபீபைப் போல தத்துவத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வாசித்து எழுதும் இளைஞர்கள் இன்னும் ஐந்து பேர் தமிழில் உருவாக வேண்டும் என்பது. அப்படி ஒன்று எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அவர்களைக் கொண்டு ஒரு சிறிய தத்துவ இதழைக் கூட தமிழில் நடத்த முடியும். அது தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.


ஹபீபைப் போல நானும் இந்த விவாதங்களின் போது எழுந்த சிந்தனைகள், கேள்விகளைத் தொகுத்து ஐந்துக்கும் மேல் கட்டுரைகளை எழுதினேன். இன்னும் நிறைய எழுத ஆசைப்பட்டேன் - ஆனால் நடுவே தினமும் நாவலில் கூடுதலாய் நேரம் செலவிட நேர்ந்திட தத்துவத்தின் அழைப்பு மணிக்கு கதவைத் திறக்க முடியாமல் ஆயிற்று. என்னைப் போன்று எல்லா பக்கமும் கால் பாவி நிற்போருக்கு இது ஒரு சிக்கல்: தத்துவத்தில் நிபுணத்துவம் பெறுவது என் நோக்கம் அல்ல, தத்துவம் என் சிந்தனைகளைத் தொகுக்கவும், விவாதம் செய்ய ஒரு கூர்மையான மொழியைப் பெறவும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் தொடர்ந்து தத்துவம் வாசிக்கும் போது யோசிக்கும், அதை ஒட்டி சொற்களைத் திரட்டும் வேகம் அதிகரிக்கிறது. இது புனைவெழுத்தை, கவித்துவத்தை பாதிக்குமா என தமிழில் ஒரு அச்சம் உள்ளது. இது தேவையற்றது. தத்துவத்துக்கான மனம் புனைவெழுத்தின் போது விழிப்பதில்லை. கவிதை வாசிக்கும் மனம் ஒரு கிரிக்கெட் போட்டியைக் கண்டு ஆவேசப்பட்டு கத்தும் போது கூட சேர்ந்து கத்துவதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் நூறு மனங்கள் இயங்குகின்றன.


ஆனால் மற்றொரு பிரச்சனையே தத்துவத்தை விட பெரிது: வாசிக்க வாசிக்க எழுத குறைவான நேரமே வாய்க்கிறது. எனக்கு எழுத்தில் இருக்கும் பெரும் நெருக்கடியே வாசிப்பு தான். வாசிப்பு நான் எழுத வேண்டிய நேரத்தை அப்படியே தின்று விடுகிறது. தினமும் நான்கைந்து மணிநேரம் எழுத வேண்டி வரும் போது, அந்த நான்கு மணிநேரம் அப்படி ஆறு, ஏழு என வளரும் போது நான் ஒன்றுமே வாசிப்பதில்லை (செய்திக்கட்டுரைகள், முகநூல் பதிவுகள், புத்தகங்களில் ஒன்றிரண்டு பக்கங்கள் மேய்வதை தவிர்த்தால்.) எழுத்தாளர்கள் நிறைய வாசிக்க வேண்டும் எனக் கேட்பவர்கள் இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் பேச வேண்டும்.


ஆனால் இந்த கூட்டு வாசிப்பு எப்படியும் ஒரு கட்டாயமாவதால் தொடர்ச்சியாக படிக்க முடிகிறது. சில நாட்களில் வாசிக்க ஆற்றலோ ஆர்வமோ இல்லாத போது மற்றவர்கள் வாசிப்பு, பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கலாம். மனம் விழிக்கும் போது கூட சேர்ந்து விவாதிக்கலாம். 


கிளப் ஹவுஸில் இதைப் போல பிற நண்பர்கள் முக்கிய இலக்கிய நூல்களை - நாவல்களை - எடுத்து தினமும் படித்து சில நிமிடங்கள் அதை வைத்து கலந்துரையாடலாம். அதாவது படித்து வந்து பேசாமல், கூட்டாக படித்து பேசலாம். அது ஒரு உத்வேகமான, கிளர்ச்சியான அனுபவமாக இருக்கும். குறிப்பாக படிக்க சிக்கலான படைப்புகளை இதற்கு எடுத்துக் கொள்ளலாம். தஸ்தாவஸ்கியின் நாவல்கள், சரமாகோ போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் நாவல்கள், புரூஸ்டின் In Search of Lost Time, தமிழில் நகுலனின் நாவல்கள், சம்பத்தின் “இடைவெளி”, கோணங்கியின் கதைகள், பா.வெங்கடேசனின் “பகீரதியின் மதியம்”, ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” இப்படி பல படைப்புகள் இத்தகைய வாசிப்புக்கு தோதானவை (ஜி.நாகராஜனையும், புதுமைப்பித்தனையும் தினமும் ஒரு லிப்டில் ஏறி இறங்கும் அவகாசத்தில் போனில் படித்தே முடித்து விடலாம்.). புனைவு வாசிப்பில் (தத்துவம் சாத்தியப்படுத்துவது போன்ற) அவதானிப்புகள், அலசல்கள் இரண்டாம் பட்சமே. ஒன்றாக சேர்ந்து வாசித்து ஒரே சமயம் உணர்வெழுச்சி அடையும் போது அந்த புத்தகத்தின் ஆழம் கூடும். தினமும் வாசிக்க ஒரு உத்வேகமும் உண்டாகும்.


நாங்கள் அடுத்து நாளையில் இருந்து ஹைடெக்கரின் மாஸ்டர்பீஸான “இருத்தலும் காலமும்” (Being and Time) நூலை எடுத்துக் கொள்ளலாம் என இருக்கிறோம். ஒன்று அதை ஒன்றிரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டு முழுக்க படித்து விட வேண்டும். அல்லது முதலிரு பாகங்களை மட்டும் (பாதி நூல்) படித்து விட்டு அடுத்தொரு தத்துவத்துக்கு தாவ வேண்டும். என் ஆசை முழுநூலையும் கூட்டாகப் படிக்க வேண்டும் என்பதே.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...