Skip to main content

அ.மார்க்ஸும் காந்தியும்

அ.மார்க்ஸும் காந்தியும் 

நேற்று கிளப்ஹவுஸில் ஜீரோ டிகிரியின் அறையில் அ.மார்க்ஸுடன் நடந்த உரையாடல் ஒரு புத்துணர்ச்சியான அனுபவமாக இருந்தது. அ.மார்க்ஸிடம் ஒரு சிறப்பு மற்ற எழுத்தாளர்களைப் போன்ற தற்புகழ்ச்சி, ரசிகர் மன்றம், அடுத்தவர்கள் பற்றின புகார்கள், ஒப்பாரி அவர் பேச்சில் இல்லை என்பது. அவருடைய அரசியலானது புரட்சிகர, அதிரடி அரசியல் அல்ல. அவருடைய தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள், மக்களுடனான பணி, ஆக்டிவிஸ்ட் அனுபவங்களான கனிந்த ஒரு அணுகுமுறையை பேச்சில் வெளிப்படுத்தினார். நேற்று கேள்வி கேட்டவர்களிடம் அவர் உடன்படாத போது கூட கோபமாகவோ சலிப்பாகவோ அதை வெளிப்படுத்தாமல் இன்னொரு கதையை, கருத்தை சொல்லி கடந்து விட்டார். முடிந்தவரை பொறுமையாக, நிதானமாக விளக்க முயன்றார். இந்த நாட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது, மாறுபட்ட தரப்புகளுக்கு சமத்துவமான ஒரு வெளியை மட்டுமே உருவாக்க முடியும் எனும் நிலைப்பாடு அவருக்கு இருப்பது தெரிந்தது. காந்தியின் அரசியலை பிரதானப்படுத்தி அவர் பேசியதை இந்த கோணத்தில் நான் விளங்கிக் கொண்டேன். சித்தாந்த ரீதியாக மட்டுமே காந்தியை புரிந்து கொள்ளக் கூடாது என வலுயுறுத்தும் பொருட்டு நிறைய சம்பவங்களை தொடர்ந்து குறிப்பிட்டார். நானும் அஜயன் பாலாவும் காந்தி குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அவர் “காந்தியை ஆர்.எஸ்.எஸ் காரகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஜெயமோகனும் ஓரளவுக்கு மேல் காந்தியை பொருட்படுத்தி எழுதவில்லை. நானும் அவரை ஒரே புள்ளியில் நின்று காந்தியை பார்க்கவில்லை.” என்று கூறினார். எனக்கு இதைக் கேட்ட போது மற்றொரு விசயம் தோன்றியது: 
காந்தியை ஆர்.எஸ்.எஸ் பாஜக எதிர்ப்பது உண்மை தான், ஆனால் அதற்குக் காரணம் காந்தி முற்போக்கானவர், சனாதனத்தை எதிர்த்தவர் என்பதல்ல. மதவாத தேசியவாதிகளுக்கும் சிறுபான்மையினரின் உரிமைக்காக, சாதி, மதவாத எதிர்ப்புக்காக முன்னின்ற முற்போக்காளர்களுக்கும் நடுவில் ஒரு சமரசப் புள்ளியாக மாறிப் போனார் என்பதாலே ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையினர் கடுமையான எரிச்சலுக்கு ஆளானாரக்ள். அதனாலே என்னதான் சனாதனம், பிற்போக்குவாதம் காந்தியிடம் இருந்தாலும் இன்றும் பாஜகவால் காந்தியை தம்முடைய கொள்கையின் முகவராக மாற்ற முடியவில்லை. ஏனென்றால் காந்தி இந்துமதத்தின் அத்தனை கசடுகளையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டு, இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் சமமாக மதிக்க வேண்டும், ஒரு இந்து ஒரு இஸ்லாமிய, கிறித்துவ சகோதரனுக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்பார். காந்தியால் பெரியார் பாணியில் ஒரு பெண் குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி சுயமரியாதையுடன் துணிச்சலுடன் வாழ வேண்டும் எனக் கோர முடியாது. அதனால் இந்திய கலாச்சாரம் அழிந்து விடுமே என அவர் அஞ்சுவார். ஆனால் பெண்கள் ஆண்களை திருத்த வேண்டும், பெண்களுக்காக ஆண்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று சொல்வார். சபரிமலை பிரச்சனையின் போது காந்தியின் ஆன்மா பெண்களுக்காகத் தான் பேசியிருக்கும். இப்படி இரண்டு பக்கமும் அவர் கோல் அடிப்பதால் நமது மத்திய வர்க்கத்தினரிடம், கல்வியற்ற ஏழைகள் மத்தியிலும் பிரசித்தமானார். வைதீகத்தை எதிர்த்து ஒழித்தாலோ அல்லது அதிலிருந்து வெளியேறினாலோ தான் சாதிக்கொடுமை தீரும் எனக் கூறிய அம்பேத்கரோ, இன்னொரு பக்கம் சிறுபான்மை மதத்தினர் இந்துக்களுக்கு இணையான உரிமை இல்லாமல் வாழ வேண்டும், அல்லது அனைவரும் இந்து மதத்துக்குள் வர வேண்டும், இல்லாதவர்கள் வெளியேறட்டும் என வலியுறுத்திய இந்துமகாசபையினர், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் காந்தி தம் அரசியலை காலி பண்ணுவதை உணர்ந்து அவரை எதிர்த்து நின்றனர். இதில் அதிகம் பாதிப்புக்குள்ளானது அம்பேத்கரியர்கள் தாம். ஒருவேளை காந்தி இல்லாவிட்டால் அவர்களால் இன்னும் வெளிப்படையாக சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்க, பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடம் வாதிட்டு தனி வாக்காளர் உரிமையை பெற்றிருக்க முடியும். இன்னொரு பக்கம், காந்தி இல்லாமல் போயிருந்தால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான காலத்தில் மிகப்பெரிய மதக் கலவரங்கள் இங்கே வெடித்து மோசமான அழிவுகள் ஏற்பட்டிருக்கும். ஒருவேளை, பாகிஸ்தானைப் போல நாம் ஒரு மத அடிப்படையினால தேசமாக அரசியலமைப்பு ரீதியாக உருப்பெற்றிருப்போம். இதனால் தான் காந்தியால் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தவர்கள், கிட்டத்தட்ட தம் அரசியல் வெளியை இழந்தவர்கள் என ஆர்.எஸ்.எஸ்காரர்களை, இந்துத்துவர்களைக் குறிப்பிடலாம்.

 அதனாலே என்னதான் ஜெ.மோ காந்தியைப் போற்றி எழுதினாலும், அவருடைய அரசியலில் ஒரு பகுதி காந்தியை முழுக்க ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்காது என நினைக்கிறேன். எப்படி அயோத்திதாசரை ஜெ.மோ அவரது வைதீக எதிர்ப்புக் கொடுக்கை பிடுங்கி விட்டு சாந்தப்படுத்திய பின் முன்வைத்தாரோ அப்படியே காந்தியையும் செய்தார். ஜெ.மோ மட்டுமல்ல அவரது சீடகோடிகள் எழுத்தில் வடிக்கும் காந்தியும் இப்படி சாந்தப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட காந்திகள் தாம். இன்றும் பாஜகவினர் நேருவை நேரடியாக தாக்குவார்கள், வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை எழுப்புவார்கள், ஏன் காங்கிரஸ் தலைமை நரசிம்ம ராவை பொருட்படுத்தி பாராட்ட வில்லை எனக் கோபிப்பார்கள், ஆனால் காந்தி விசயத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பார்கள். ஆனால், ஒருநாள் ஜெ.மோ பாணியில் அவர்களும் காந்தியின் கொம்புகளை பிடுங்கி அவரை 'நல்ல பிள்ளையாக்கி' தம் அரசியல் களத்தில் கொலு வைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது அ.மார்க்ஸ் ஏன் காந்தியை ஆதரிக்கிறார் என்பது புரிகிறது - அரசியலை வெறுமனே வலது-இடது என இருமையாக்கிடாமல் இருக்க, அந்த ‘தூய’ அறத்துடன், லட்சியத்துடன் மதத்தை மதவாதம் ஆக்காமல் பார்த்துக் கொள்ள, மக்களுடன் மக்களாகப் புழங்க காந்தியே அவர் மனத்தில் ஒரு சரியான தலைவராக இருக்கிறார்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...