Skip to main content

அ.மார்க்ஸும் காந்தியும்

அ.மார்க்ஸும் காந்தியும் 

நேற்று கிளப்ஹவுஸில் ஜீரோ டிகிரியின் அறையில் அ.மார்க்ஸுடன் நடந்த உரையாடல் ஒரு புத்துணர்ச்சியான அனுபவமாக இருந்தது. அ.மார்க்ஸிடம் ஒரு சிறப்பு மற்ற எழுத்தாளர்களைப் போன்ற தற்புகழ்ச்சி, ரசிகர் மன்றம், அடுத்தவர்கள் பற்றின புகார்கள், ஒப்பாரி அவர் பேச்சில் இல்லை என்பது. அவருடைய அரசியலானது புரட்சிகர, அதிரடி அரசியல் அல்ல. அவருடைய தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள், மக்களுடனான பணி, ஆக்டிவிஸ்ட் அனுபவங்களான கனிந்த ஒரு அணுகுமுறையை பேச்சில் வெளிப்படுத்தினார். நேற்று கேள்வி கேட்டவர்களிடம் அவர் உடன்படாத போது கூட கோபமாகவோ சலிப்பாகவோ அதை வெளிப்படுத்தாமல் இன்னொரு கதையை, கருத்தை சொல்லி கடந்து விட்டார். முடிந்தவரை பொறுமையாக, நிதானமாக விளக்க முயன்றார். இந்த நாட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது, மாறுபட்ட தரப்புகளுக்கு சமத்துவமான ஒரு வெளியை மட்டுமே உருவாக்க முடியும் எனும் நிலைப்பாடு அவருக்கு இருப்பது தெரிந்தது. காந்தியின் அரசியலை பிரதானப்படுத்தி அவர் பேசியதை இந்த கோணத்தில் நான் விளங்கிக் கொண்டேன். சித்தாந்த ரீதியாக மட்டுமே காந்தியை புரிந்து கொள்ளக் கூடாது என வலுயுறுத்தும் பொருட்டு நிறைய சம்பவங்களை தொடர்ந்து குறிப்பிட்டார். நானும் அஜயன் பாலாவும் காந்தி குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அவர் “காந்தியை ஆர்.எஸ்.எஸ் காரகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஜெயமோகனும் ஓரளவுக்கு மேல் காந்தியை பொருட்படுத்தி எழுதவில்லை. நானும் அவரை ஒரே புள்ளியில் நின்று காந்தியை பார்க்கவில்லை.” என்று கூறினார். எனக்கு இதைக் கேட்ட போது மற்றொரு விசயம் தோன்றியது: 
காந்தியை ஆர்.எஸ்.எஸ் பாஜக எதிர்ப்பது உண்மை தான், ஆனால் அதற்குக் காரணம் காந்தி முற்போக்கானவர், சனாதனத்தை எதிர்த்தவர் என்பதல்ல. மதவாத தேசியவாதிகளுக்கும் சிறுபான்மையினரின் உரிமைக்காக, சாதி, மதவாத எதிர்ப்புக்காக முன்னின்ற முற்போக்காளர்களுக்கும் நடுவில் ஒரு சமரசப் புள்ளியாக மாறிப் போனார் என்பதாலே ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையினர் கடுமையான எரிச்சலுக்கு ஆளானாரக்ள். அதனாலே என்னதான் சனாதனம், பிற்போக்குவாதம் காந்தியிடம் இருந்தாலும் இன்றும் பாஜகவால் காந்தியை தம்முடைய கொள்கையின் முகவராக மாற்ற முடியவில்லை. ஏனென்றால் காந்தி இந்துமதத்தின் அத்தனை கசடுகளையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டு, இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் சமமாக மதிக்க வேண்டும், ஒரு இந்து ஒரு இஸ்லாமிய, கிறித்துவ சகோதரனுக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்பார். காந்தியால் பெரியார் பாணியில் ஒரு பெண் குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி சுயமரியாதையுடன் துணிச்சலுடன் வாழ வேண்டும் எனக் கோர முடியாது. அதனால் இந்திய கலாச்சாரம் அழிந்து விடுமே என அவர் அஞ்சுவார். ஆனால் பெண்கள் ஆண்களை திருத்த வேண்டும், பெண்களுக்காக ஆண்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று சொல்வார். சபரிமலை பிரச்சனையின் போது காந்தியின் ஆன்மா பெண்களுக்காகத் தான் பேசியிருக்கும். இப்படி இரண்டு பக்கமும் அவர் கோல் அடிப்பதால் நமது மத்திய வர்க்கத்தினரிடம், கல்வியற்ற ஏழைகள் மத்தியிலும் பிரசித்தமானார். வைதீகத்தை எதிர்த்து ஒழித்தாலோ அல்லது அதிலிருந்து வெளியேறினாலோ தான் சாதிக்கொடுமை தீரும் எனக் கூறிய அம்பேத்கரோ, இன்னொரு பக்கம் சிறுபான்மை மதத்தினர் இந்துக்களுக்கு இணையான உரிமை இல்லாமல் வாழ வேண்டும், அல்லது அனைவரும் இந்து மதத்துக்குள் வர வேண்டும், இல்லாதவர்கள் வெளியேறட்டும் என வலியுறுத்திய இந்துமகாசபையினர், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் காந்தி தம் அரசியலை காலி பண்ணுவதை உணர்ந்து அவரை எதிர்த்து நின்றனர். இதில் அதிகம் பாதிப்புக்குள்ளானது அம்பேத்கரியர்கள் தாம். ஒருவேளை காந்தி இல்லாவிட்டால் அவர்களால் இன்னும் வெளிப்படையாக சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்க, பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடம் வாதிட்டு தனி வாக்காளர் உரிமையை பெற்றிருக்க முடியும். இன்னொரு பக்கம், காந்தி இல்லாமல் போயிருந்தால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான காலத்தில் மிகப்பெரிய மதக் கலவரங்கள் இங்கே வெடித்து மோசமான அழிவுகள் ஏற்பட்டிருக்கும். ஒருவேளை, பாகிஸ்தானைப் போல நாம் ஒரு மத அடிப்படையினால தேசமாக அரசியலமைப்பு ரீதியாக உருப்பெற்றிருப்போம். இதனால் தான் காந்தியால் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தவர்கள், கிட்டத்தட்ட தம் அரசியல் வெளியை இழந்தவர்கள் என ஆர்.எஸ்.எஸ்காரர்களை, இந்துத்துவர்களைக் குறிப்பிடலாம்.

 அதனாலே என்னதான் ஜெ.மோ காந்தியைப் போற்றி எழுதினாலும், அவருடைய அரசியலில் ஒரு பகுதி காந்தியை முழுக்க ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்காது என நினைக்கிறேன். எப்படி அயோத்திதாசரை ஜெ.மோ அவரது வைதீக எதிர்ப்புக் கொடுக்கை பிடுங்கி விட்டு சாந்தப்படுத்திய பின் முன்வைத்தாரோ அப்படியே காந்தியையும் செய்தார். ஜெ.மோ மட்டுமல்ல அவரது சீடகோடிகள் எழுத்தில் வடிக்கும் காந்தியும் இப்படி சாந்தப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட காந்திகள் தாம். இன்றும் பாஜகவினர் நேருவை நேரடியாக தாக்குவார்கள், வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை எழுப்புவார்கள், ஏன் காங்கிரஸ் தலைமை நரசிம்ம ராவை பொருட்படுத்தி பாராட்ட வில்லை எனக் கோபிப்பார்கள், ஆனால் காந்தி விசயத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பார்கள். ஆனால், ஒருநாள் ஜெ.மோ பாணியில் அவர்களும் காந்தியின் கொம்புகளை பிடுங்கி அவரை 'நல்ல பிள்ளையாக்கி' தம் அரசியல் களத்தில் கொலு வைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது அ.மார்க்ஸ் ஏன் காந்தியை ஆதரிக்கிறார் என்பது புரிகிறது - அரசியலை வெறுமனே வலது-இடது என இருமையாக்கிடாமல் இருக்க, அந்த ‘தூய’ அறத்துடன், லட்சியத்துடன் மதத்தை மதவாதம் ஆக்காமல் பார்த்துக் கொள்ள, மக்களுடன் மக்களாகப் புழங்க காந்தியே அவர் மனத்தில் ஒரு சரியான தலைவராக இருக்கிறார்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...