முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தருண் குமார் எனும் நடிகன்



 தருண் குமார் ஒரு அபாரமான நடிகர். இவரை எப்படி இத்தனை நாட்களாக கவனிக்காமல் விட்டேன்? 

நடிப்பில் மோகன் லால், விஜய் சேதுபதி, தனுஷ், பகத் பாஸில், விநாயகன், ஒரு பாணி என்றால் இவர்களுக்கு மாறான method நடிப்பு பள்ளியை சேர்ந்தவர்கள் ரகுவரன், விக்ரம், சூர்யா, மனோஜ் பாஜ்பாய் (ஓரளவுக்கு மம்முட்டி) போன்றவர்கள். (சிவாஜி, கமல், ரஜினி ஒருவகையான கலவையான, தனித்துவமான பாணி.) ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, ராபர்ட் டினிரோ, ஹீத் லெட்ஜர், டஸ்டின் ஹாப்மேன். இந்திப் படவுலகில் நஸ்ருதீன் ஷா, நானா படேகர், இர்பான் கான், அமீர் கான் என ஒரு பட்டியல் உள்ளது.

தருண் குமார் இதில் method நடிப்பை பின்பற்றுகிறார். ஒரு பாத்திரத்தை அதன் பின்னணி, கதைக்களம், உளவியல் ஆகியவற்றைக் கொண்டு அதற்கென ஒரு உடல்மொழியை தேர்ந்து கொள்கிறார்கள். அதற்கேற்ப படம் முழுக்க நடித்து விடுகிறார்கள். அவர்கள் பார்க்கிற, உதடு அசைகிற, முகத்தை வெட்டுகிற, தோளை அசைகிற பாணி என ஒவ்வொன்றும் அளந்தெடுத்தாற் போல இருக்கும். ஒரு கோடு கிழித்து துல்லியமாக நடப்பது போல. இதன் சிறப்பு ஒரு படம் பார்த்து முடித்ததும் அந்த நடிகரே அந்த பாத்திரம் தான் என நமக்குத் தோன்றும். இன்னொரு பாத்திரத்தில் நடிக்கும் போது அவரா இவர் என குழப்பமாக இருக்கும். 


தருணின் நடிப்பை “தேனில்” பார்த்து விட்டு அவரது பேட்டியைப் பார்த்தால் அவரா இவர் என வியந்து போனேன். ஏனென்றால் அந்த மலைக்கிராமத்து பழங்குடி ஆண் பாத்திரமாகவே அவர் உருகிக் கரைந்து போகிறார். அவரைத் தேர்ந்ததற்காக இயக்குநர் கணேஷ் விநாயகனை பாராட்ட வேண்டும். தருணின் வேறு படங்களை இதுவரைக் கண்டதில்லை. இனி ஒவ்வொன்றாக தேடிப் பார்க்க வேண்டும்.


தருணின் ஒரு பிரச்சனை அவருக்கு ஒழுங்காக தமிழ் பேச வராது என்பது. அத்தோடு, அந்த உயரமான கட்டான உடலை வைத்து அவருக்கு வில்லன் பாத்திரங்களைத் தான் பொதுவாக கொடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளித்தால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...