Skip to main content

சமையல் எனும் வேலையில் சமத்துவம்



நடந்து வரும் சமையலறை ஒழிப்பு விவாதத்தின் நீட்சியாக கார்ல் மார்க்ஸ் (கணபதி) ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் சமையலறையில் இருந்து வெளியேறும் பெண் மீண்டும் ஒரு வேலைக்கு தானே சென்றாக வேண்டும், அந்த வேலையில் சுரண்டல் இல்லையா, அதில் அநீதி இல்லையா, ஏன் நாம் வேலை என்பதை மகத்துவப்படுத்தும் இடத்துக்கு வந்து சேர்கிறோம் என அவர் கேட்கிறார். நான் இங்கு கார்ல் மார்க்ஸ் விவாதத்தை திசைதிருப்புவதாக நினைக்கிறேன். ஏனென்றால் வேலையில் உள்ள அந்நியமாதல், பொருளாதார சுரண்டல் சார்ந்த பிரச்சனையை அல்ல நாம் சமையலறை விசயத்தில் பேசுவது; மாறாக சமையல் என்பது குடும்பத்துக்குள் ஒரு ஊதியமற்ற உழைப்பு என்பதும், அதைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுமே பிரச்சனை. 


சமையலறை உழைப்பில் சம்பளம் இல்லை என்பதும், அதில் இருந்து விடுதலை இல்லை என்பதுமே பிரச்சனையின் அடிப்படை. ஒரு கணவன் அவ்வேலைக்கு 20-25,000 மாதம் கொடுக்கத் தயாரானாலும் அதை பெண்கள் அடிமைத்தனமாக நினைக்கப் போவதில்லை. நான் சொல்வது சமைக்க விரும்பும் பெண்கள் விசயத்தில் மட்டுமே. ஒருவேளை அந்த கணவன் சமையல் வேலையை பகிர்ந்து கொண்டாலும் அவள் ஆறுதல் கொள்வாள் (இன்னொரு பக்கம் பால் அடையாள நெருக்கடி குறித்து எரிச்சலும் கொள்வாள். உன் சமையல் நன்றாக இல்லை என அவள் அவ்வப்போது இடித்துரைக்கவும் கூடும். அல்லது நீயே இனி மொத்தமாக சமையலை பார்த்துக் கொள் என கைகழுவி விடவும் கூடும். அப்போது கணவன் எரிச்சலடைவான். இந்த இரண்டுமே ஒரே நெருக்கடியின் இரு பக்கங்கள் தாம்.)


சம்பளம் இல்லாத பட்சத்தில், ஒரு சமையற்காரரை வேலைக்கு அமர்த்தினாலும் பெண்கள் நிம்மதி அடைவார்கள். (என்ன அவரது சமையலில் குற்றம் கண்டுபிடித்தபடியும் இருப்பார்கள். ஏனென்றால் உணவு நமது தன்னிலையுடன், அடையாளத்துடன் பின்னிப் பிணைந்தது.) இப்போது ஒரு சமையற்காரியை சுரண்டலாமா எனும் கேள்விக்கு பிரசித்தமில்லை - அவளுக்கு சம்பளம் கொடுக்கிறோமே. அடுத்து அவருக்கு இந்த வேலையை ஏற்கவோ மறுக்கவோ உரிமை உண்டு. ஆனால் வீட்டு மனைவிக்கு அது இல்லை.


 அடுத்து, வேலைக்குப் போகாத பெண்கள் சமையலறையில் உழைப்பது ஒருவகையில் குடும்பத்துக்கான அவளது பங்களிப்பு அல்லவா என்று கேட்டால் இல்லை என்பேன். ஒரு குடும்பப் பெண்ணாக இருப்பதே அவளுடைய பங்களிப்பு, சமையலோ வீட்டைப் பெருக்குவதோ அல்ல. உ.தா., நீங்கள் ஒரு கடையில் விற்பனைப் பிரிவில் சேர்ந்தால் அதுவே உங்கள் பணி, கடையை பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது அல்ல. 


கார்ல் குறிப்பிடுவது பாலின சுரண்டலையும் கடந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, உழைப்பின் அந்நியமாதல் சார்ந்த பெரிய பிரச்சனை. ஆனால் நான் இங்கு பேசுவது வேறு - இது குடும்பத்தை எந்த ஊதியமும், ராஜினாமா வாய்ப்பும் அற்ற தொழில்ற்சாலையாக நாம் மாற்றி வைத்திருப்பதன் பிரச்சனை.


சரி சமையலை உழைப்பாக மாற்றினால் அதிலுள்ள உணர்வுரீதியான அம்சம் போய் விடுமே என சிலர் நினைக்கலாம். அது சிக்கலென்றால் சமையலைக் குறைத்துக் கொண்டு, உணவை மூன்று வேளைகளில் இருந்து ஒன்றாக மாற்றிக் கொண்டு, அதை சமைப்பதையும் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சமூதாய சமையலறை அல்லது சமையற்காரர்கள் எனும் சாத்தியங்களை பரிசீலிக்கலாம். அங்கு சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பது நமக்கு உறுத்தலாக இருக்காது. தனிப்பட்ட முறையில் நான் முதலிரண்டு தெரிவுகளையே விரும்புவேன். ஏனென்றால் மனைவிக்கு ஊதியம் என்று வந்து விட்டால் சம்பளத்தில் பாதி அதற்கே போய் விடும்.


நான் இரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் நித்ய சைதன்ய யதியின் ஆசிரமத்துக்கு ஒரு இலக்கிய கருத்தரங்குக்காக சென்றிருந்தேன் (ஜெ.மோ ஏற்பாடு). காலை ஆறுமணிக்கு பங்கேற்பாளர்கள் நாங்கள் சமையலறைக்கு சென்று அன்றைய சாப்பாட்டுக்கான தயாரிப்பு வேலைகளில் பங்கெடுத்தோம். அதன் பிறகு 7:30-8 மணிக்கு காலை உணவை எடுத்துக் கொண்டோம். அப்போது உணவின் சுவை, தரம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, இது நாங்கள் சேர்ந்து செய்த காலை உணவு எனும் மனநிறைவும், உரிமையுணர்வும் எங்களுக்கு இருந்தன. ஆசிரமத்தையே ஒரு கம்யூனிட்டி கிச்சனாக மாற்றும் அந்த நடைமுறை எனக்குப் பிடித்திருந்தது. இதையே நீங்கள் செமினரிகளில் பார்த்தீர்கள் எனில் அங்கு (நான் பார்த்த வரையில்) தனியாக சமையற்காரரை வைத்திருப்பார்கள். பிரதர்கள் தம் பிரார்த்தனை, வேலைகள் என ஈடுபட்டிருப்பார்கள்; சாப்பிடும் நேரத்துக்கு உணவுக்கூடத்துக்கு வந்து விடுவார்கள். இது இயல்பாகவே ஒரு படிநிலையை முன்னெடுக்கும் அமைப்பாகும். இதையே நாம் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறோம்.


சீக்கியர்களின் லங்கார்களிலும் அநேகமாக இப்படியே தன்னால்ர்வலர்களே சமையலில் ஈடுபடுகிறார்கள், சமையற்காரர்கள் அல்ல. முன்னர் நம் ஊர்களில் திருமணத்திற்கு முந்தின நாள் ஊரே ஒன்று கூடி சமையலில் உதவுவதை கண்டிருக்கிறோம். சிலர் காய்கனிகளை நறுக்குவார்கள், சிலர் சமையலில் ஈடுபடுவார்கள். விருந்தின் போது இதே ஊர்மக்களே முன்வந்து உணவை விளம்பவும் செய்வார்கள். இவர்கள் ஊதியம் கேட்பதோ தம்மை மேலாகவோ கீழாகவோ கருதுவதோ இல்லை. ஆனால் இன்று இதே ஊர் இளைஞர்கள் சமூக சமையற்கூடங்களில் பங்காற்ற விரும்புவதில்லை. சமையல் வேலையில் இருந்து விளம்புவதற்கு வரை கேட்டரிங் அமைப்புகள் தோன்றி விட்டன. இளைஞர்கள் பல ஊர்களுக்கும் கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன்பு இலவசமாக சமூகப்பணியாக செய்ததை இப்போது ஊதியத்துக்காக செய்கிறார்கள். விளைவாக, சமைப்பவர்கள், சாப்பிடுகிறவர்கள், அதற்கு செலவு செய்யும் பெண் வீட்டார் என மக்களிடையே இடையே ஒரு அந்நியமாதல், பிரிவினை தோன்றி விட்டது.


நம் வீடுகளைப் பொறுத்தமட்டில், நான் மேலே சொன்ன அந்த ஆசிரம மாடல் மேலும் நியாயமானது, சமத்துவமானது என்கிறேன் - சப்பாத்தி சுடுவதானால் ஒருவர் மாவு பிசைந்து, திரட்டிக் கொடுக்க இன்னொருவர் சுடலாம், ஒருவர் காய் நறுக்கி, மசாலா பொருட்களை எடுத்தளிக்க இன்னொருவர் குருமா செய்யலாம். உணவு மேஜையில் பொருட்களை கொண்டு வைப்பதிலும், பாத்திரம் கழுவுவதிலும் அடுத்தவர்கள் பங்களிக்கலாம். நகரங்களில் தனி வீடெடுத்து தங்கும் இளைஞர்களும் இதையே தான் பின்பற்றுகிறார்கள். அவர்களிடையே இதனால் தான் முரண் வருவதில்லை. ஒருவர் நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என பிகு பண்ண முடியாது. ஆனால் திருமணமானதும் வசதியாக ஒரு அநீதியான முறைமைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். அதாவது ஆசிரமத்தில் இருந்து செமினரிக்கு வந்து விடுகிறார்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...