Skip to main content

அய்யே!

நண்பர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் எழுதுவது, உரையாடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஆங்கிலம் எப்படி பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் ஒரு பொதுமொழியாக செயல்படும் சிறப்பைப் பற்றி பேசினார். நான் அவரிடம் இதனால் தான் நாம் இந்தியர்கள் இல்லை என்று சொன்னேன். விவாதம் இப்படிப் போயிற்று:

இந்தியர்களை பொதுவாக இணைப்பது நமது அரசியலமைப்பு சட்டம், நமது அரசியல் நிறுவனங்கள், பிரதமர், ஜனாதிபதி, பாராளுமன்றம் போன்ற குறிப்பான்கள். ஆனால் இவற்றைக் கடந்து யோசித்தால் நான் யோசிப்பதை அப்படியே ஒரு வடகிழக்கு மாநிலத்தவரால் புரிந்து கொள்ள முடியாது. என் மொழி அவருக்கும், அவர் மொழி எனக்கும் புரியாது. அப்படியே புரிந்து கொள்ள ஒரு பொது மொழி இருந்தாலும் இனக்குழு அடையாளம், சாதி, மாநிலத்துக்கு உரித்தான பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள், அரசியல் என பல பொருந்தா விசயங்கள். நான் இதைச் சொன்னதும் நண்பர் ஒரு தென்னிந்தியரால் அஸ்ஸாமில் சென்று வாழ்ந்து அந்த ஊர்க் கலாச்சாரத்தையும், மொழியையும் புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அஸ்ஸாமியராகவே ஆகிட முடியும். இதுவே இந்தியர்களைப் பிணைக்கிற ஒரு இந்திய உணர்வு என்று சொன்னார்

நான் அவரிடம் பிரான்ஸிலோ ஜெர்மனியில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் கூட அதைச் செய்யலாம், ஆனால் அது அவர்களை எளிதில் அந்த தேசிய இனத்தவராக்குவதில்லை என்றேன். இவர்கள் சில பத்தாண்டுகளில் தம்மை பாதி பிரஞ்சு, ஜெர்மானிய, அமெரிக்க குடிமகனாக நினைக்க தொடங்குவர். அங்கு (பிறந்து) வளரும் அவருடைய பிள்ளைகள் தம்மை முழு ஐரோப்பியனாகவே நினைப்பர். ஆனால் இதை நேரடியாக அன்றி போலச்செய்வதன் வழியே அவர்கள் செய்வர் (mimicry) என பின்காலனிய கோட்பாட்டில் சொல்வார்கள். இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஒரு இந்தியராக இருந்தபடி பிரஞ்சுக்காரராக உங்களை காட்டிக் கொள்ளும் போது, அதற்காக போலச் செய்யும் போது நீங்கள் பிரஞ்சு அடையாளத்தை ஒரு போதும் முழுமையாக அடைய முடியாத ஒரு முடிவற்ற தேடலின் பகுதியாகிறீர்கள். ஒவ்வொரு முறை பிரஞ்சுக்காரர் ஆகும் போது பிரஞ்சுக்காரர் அல்லாமலும் ஆகிறீர்கள். இதுவே இந்தியாவுக்குள்ளும் நிகழ்கிறது என்பது என் தரப்பு.


நீங்கள் வீட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசுகிறவராக இருந்து வெளியே கற்றுப் பேசுகிற, எழுதுகிற மொழி தமிழாக இருக்கையில் நீங்கள் தமிழராக இருத்தலை போலச்செய்தபடியே இருக்கிறீர்கள். அசல் அடையாளத்துக்கும் போலச்செய்யும் அடையாளத்துக்கும் இடையே ஒரு இடைவெளி தோன்றுகிறது. இது படைப்பூக்கமான, விடுதலையான ஒரு வெளியாக (மூன்றாவது வெளி - third space) இருக்கிறது என்கிறார் ஹோமி பாபா. எந்த சாராம்சத்துக்குள்ளும் ஆட்படாதவராக இத்தகையோர் இருக்கிறார்கள். (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இதுவே நிகழ்கிறது.) 


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மாற்றுமொழியாளர்கள் இப்படி அடையாளங்களில் இருந்து வழுக்கி சென்றபடி இருக்கும் மனிதர்களாக உள்ளார்கள். இவர்களை இந்தியத்துவம் என ஒன்று இணைப்பதெனில் ஏன் இந்த போராட்டம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? ஆக இந்த பிணைப்புச் சங்கிலி ஒரு கற்பிதம் மட்டுமே. நீங்கள் இந்தியரோ ஜெர்மானியரோ ஒரு மாற்று மொழி, மாற்றுக்கலாச்சாரத்துக்குள், மாற்று தேசியத்துக்குள் வரும் போது நீங்கள் பொருத்தமின்மையுடன் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்


இந்தியராக இருப்பதில் இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. நான் அரசியலைப் பற்றி சொல்லவில்லை. நடைமுறையிலேயே பெரும் தடை, தாண்ட முடியாத தடை ஒன்று உள்ளது: எந்த இந்தியனாலும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் பேச முடியாது. 2011 சென்ஸஸ் படி இந்தியாவில் 122 மொழிகள் உள்ளன. அதிகாரபூர்வ மொழிகள் 22. ஆனால் இதுவும் பெயரளவுக்குத் தான். 19, 500 தாய்மொழிகள், வட்டார பேச்சுவழக்குகள் இந்தியாவில் உள்ளன. எந்த இந்தியனாலும் இத்தனை மொழிகளையும் கற்க முடியாது. அதனால் தான் எந்த இந்தியனாலும்இந்தியனாகமுடியாது.


தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தை பொதுமொழியாக பயன்படுத்துவது போல, வட இந்தியர்கள் இந்தியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது மேற்பூச்சு தான். அசலான வாழ்க்கை பேச்சுமொழிகளிலே புழங்குகிறது. நான் குமரிமாவட்டத்தின் தக்கலையை சேர்ந்தவன். எங்களுடைய வட்டார வழக்கின் சில நுட்பங்கள் சென்னைக்காரருக்கோ, மதுரைக்காரருக்கோ, வேறு எந்த மாநிலத்தவர்களுக்கோ சுலபத்தில் விளங்காது. “அய்யேஎனும் சொல்லை நாங்கள் பல தொனிகளில் பயன்படுத்துவோம். ஒவ்வொரு போதும் அதன் பொருள் மாறிக் கொண்டே இருக்கும். இதுவே இப்படி என்றால் ஒரு .பியில் காரி போலி வட்டாரவழக்கில் பேசும், பொதுமொழியாக இந்தியைக் கொண்டுள்ள ஒருவரால் மூட்டைமுடிச்சுடன் தக்கலை பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி பழம்பொரியும் டீயும் சாப்பிட்டபடி கவனித்தால் இந்தஅய்யேவின் முழு பரிமாணத்தை என்றாவது எட்ட முடியுமா? அய்யே!


நன்றி: உயிர்மை.காம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...